Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 746

கருவறை தீண்டாமை, ஜெயா அரசின் துரோக சதி!

25

னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்!
கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்!
உச்சநீதிமன்றத்தில் மதுரை சிவாச்சார்யர்களுடன் சுமுகத் தீர்வு காண முயற்சிக்கும் பார்ப்பன ஜெயலலிதா கும்பலின் சூழ்ச்சியை முறியடிப்போம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நேரம் : 22-04-2013 திங்கட்கிழமை காலை 10.30 மணி
இடம் : மாவட்ட நீதிமன்றம் முன்பு, மதுரை

தலைமை : திரு ரங்கநாதன் தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு

கண்டன உரை:

வழக்கறிஞர் A K ராமசாமி அவர்கள், செயலாளர், வழக்கறிஞர்கள் சங்கம், மதுரை
தோழர் கதிரவன், மக்கள் கலை இலக்கிய கழகம், மாநில செயற்குழு உறுப்பினர்
தோழர் ந. குருசாமி செயலர், விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலை
வழக்கறிஞர் சே வாஞ்சிநாதன் துணைச் செயலர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை
வழக்கறிஞர் மு திருநாவுக்கரசு, தலைவர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், மதுரை
திரு ம லயனல் அந்தோணிராஜ் செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை

மற்றும் அர்ச்சகர் மாணவர்கள், கிராமப் பூசாரிகள்

நன்றியுரை : வழக்கறிஞர் பா. நடராஜன் துணைத்தலைவர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை

கோயில்னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2007ம் ஆண்டில் தமிழகத்தின் ஆறு முக்கியமான கோவில்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தமிழக அரசு துவங்கியது. 2007-08 கல்வி ஆண்டில் ஒரு வருட அர்ச்சகர் கல்விப் பயிற்சியும், இருமாத புத்தாக்கப் பயிற்சியினையும் 206 பேர் முடித்தனர். 2006ம் ஆண்டில் தமிழக அரசின் அவசர சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்ததால் அர்ச்சகர் பயிற்சிப் பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க அன்றைய தி.மு.க. அரசாங்கம் மறுத்து விட்டது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள், “அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினை” உருவாக்கி உச்சநீதிமன்ற வழக்கில் எதிர்மனுதாரர்களாகிப் போராடி வருகின்றனர். இடைக்காலத் தடையினை விலக்கவோ, வழக்கினை விரைவுபடுத்துவோ முயற்சிக்காத தி.மு.க. அரசாங்கம், அவரச சட்டத்திற்குப் பதிலாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத் திருத்தத்திலோ அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான முக்கியமான பிரிவையே நீக்கி விட்டது. உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு இறுதி நிலையினை எட்டி 23.04.2013 அன்று விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில் ஜெயலலிதா அரசாங்கமோ சுமுகமாகப் பேசித் தீர்ப்பதாக கழுத்தறுப்பு வேலையினை செய்யத் துவங்கியுள்ளது.

கருவறைக்குள் நுழைந்து பூசை செய்யும் தகுதி பார்ப்பன சாதியினருக்குத் தவிர மற்றவருக்குக் கிடையாது என்பது பார்ப்பன வர்ணாஸ்சிரமம் உருவாக்கிய அநீதி. தமிழக அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்ட ஆய்வுக் குழு, 2008ல் சமர்ப்பித்த அறிக்கையின்படி தமிழகத்தில் அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பூசை செய்யும் பார்ப்பனர்களில் 80 சதவீதம் பேர் முறையான பயிற்சியில்லாமலும், வாரிசுதாரர் உரிமையிலும்தான் பூசை செய்து வருகின்றனர். கேடுகெட்ட தேவநாதன்களும், ஜெயேந்திரர்களும் சாமியைத் தொடலாம், அது தீட்டில்லை. ஆனால், அரசு உருவாக்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் பூசை செய்யக் கூடாதாம். ஏனெனில் இம்மாணவர்கள் சாதியால் பார்ப்பனர்கள் இல்லை. எனவே சாமியைத் தொட்டால் தீட்டாம்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினை அல்ல இது. கருவறைக்குள் நிலவும் சாதித் தீண்டாமையை ஒழிக்க வேண்டிய பிரச்சனை, குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, 976ம் ஆண்டு சேஷம்மாள் வழக்கிற்குப் பின்பாக, அர்ச்சகர் நியமனம் மத சார்பற்ற நடவடிக்கை, அது எவ்வகையிலும் மத சுதந்திரத்திலை தலையிடுவதாகக் கருத முடியாது என பல வழக்குகளின் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

பிறப்பால் இழிவானவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர், இவர்கள் பூசை செய்தால் புனிதம் கெட்டு, சாமி தீட்டாகி விடும் என்று பார்ப்பனரல்லாதோர் மேல் சுமத்தப்படும் இழிவினை இன்னமும் ஏற்கத்தான் வேண்டுமா என தமிழகம் கிளர்ந்தெழவில்லை. கருவறைக்குள் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தினை எதிர்க்க வேண்டிய நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சாதியினர் திரட்டப்படுகின்றனர். அதனால் தான், தமிழக அரசால் இவ்வழக்கினை நாங்கள் பேசி முடித்துக் கொள்கிறோம் என உச்சநீதிமன்றத்தில் மிகத் துணிச்சலாகக் கூற முடிகின்றது.

பெரியார்பெரியார் பிறந்த மண் என்ற மூச்சுக்க்கு முன்னூறு தடவை பேசுவதால் பயனில்லை. மாறாக ஜெயலலிதா அரசாங்கத்தின் பார்ப்பன ஆதிக்க நிலை நாட்டல் நடவடிக்கைக்கு எதிராக தமிழகமே கிளர்ந்து எழுந்து “அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு” என முழங்க வேண்டிய தருணமிது. “கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வெளியில் ஈன சாதியாய், சூத்திரர்களாய் வாழ்வதை விட கிளர்ச்சி செய்து சிறை செல்வது மேல் அல்லவா?” என தனது 95 வயதில் தமிழக மக்களை நோக்கி கேள்வி எழுப்பினார் பெரியார். இன்று எமது கேள்வியும் அதுதான். நாம் என்ன செய்யப் போகிறோம்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள்தான் இந்த அர்ச்சக பட்டர்களின் முன்னோர்கள். கோவில் நுழைவுப் போராட்டம் வெற்றியடைந்த நிலையில் மீனாட்சியைத் தவிக்க விட்டு பூசை செய்யாமல் ஓடிப் போனவர்கள்தான் இந்த ஆதி சிவாச்சாரியர்கள். பிரிட்டிஷ் ஆட்சி போடவுடன் எங்கள் அதிகாரமும் போய் விட்டது என்று சொல்லி வெள்ளைப் பரங்கியர்களுக்கு வெஞ்சாமரம் வீசிய “தேசபக்தர்கள்”தான் இவர்கள். இன்றைக்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் போராடுகிறவர்களும் இவர்கள்தான். இவர்களிடம் கடவுள் பக்தி மட்டும் அல்ல. கடவுள் மீது மரியாதை கூட கிடையாது. அப்படி இருந்திருந்தால் மீனாட்சியைப் புறக்கணித்து பூசை செய்யாமல் ஓடிப் போயிருப்பார்களா? கோவிலில் சாமியின் பெயரால் அடிக்கின்ற கொள்ளை பறிபோய் விடக் கூடாது என்பதே அவர்கள் நோக்கம். அதனால்தான் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக விடாமல் இந்து மத உரிமையைக் காட்டி மீனாட்சி கோவில் பட்டர்கள் தடுத்து வருகின்றனர். அப்படியானால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் இந்துக்கள் இல்லையா?

தமிழக அரசே!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை இழுத்தடிக்காமல் விரைவுபடுத்து!
மீனாட்சி கோவில் பட்டர்களுக்கு ஆதரவாக பார்ப்பன ஆதிக்கத்தினை கருவறைக்குள் நிலைநாட்ட முயற்சிக்காதே!
பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்களுக்கு பாரபட்சமின்றி உடனே வேலை கொடு!

தமிழக மக்களே!

கருவறைக்குள் நிலவும் சாதி தீண்டாமைக்கு எதிராகப் போராடுவோம்!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக்கப்பட கிளர்ந்தெழுவோம்!

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
மதுரை மாவட்டக் கிளை
தொடர்புக்கு : 9443471003

இஸ்லாமிய மதவெறியர்களுக்கு எதிராக வங்கதேச மக்களின் எழுச்சி!

5

முஸ்லிம்கள் என்றால் ஜனநாயக உணர்வற்ற பழைமைவாதிகள், இஸ்லாமிய மதவெறியிலும் பிற்போக்குத்தனத்திலும் ஊறிக் கிடப்பவர்கள் என்று இந்துத்துவ ஆளும் வர்க்கங்களால் சித்தரிக்கப்படும் தவறான கருத்துதான் நமது நாட்டில் நிலவுகிறது. ஆனால், இது எவ்வளவு பச்சைப்பொய் என்பதை அண்டை நாடான வங்கதேசத்தின் மக்கள் இஸ்லாமிய மதவெறிக் கொடுங்கோலர்களுக்கு எதிரான போராட்டங்களின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலிருந்து இஸ்லாமிய மத வெறியர்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இஸ்லாமிய மதவெறிக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியின் குண்டர்கள் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுப் போராடும் மக்களை அச்சுறுத்திய போதிலும், அவற்றைத் துச்சமாக மதித்து வங்கதேச மக்கள் நீதிக்காகவும், மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்காகவும் தொடர்ந்து உறுதியாகப் போராடி வருகின்றனர்.

வங்கதேசத்தில் – அதாவது, பாகிஸ்தானின் மாநிலமாக இருந்த அன்றைய கிழக்கு பாகிஸ்தானில், 1970-இல் நடந்த தேர்தலில் வங்கதேசத்துக்குக் கூடுதல் தன்னாட்சி உரிமை வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை முன்வைத்துப் போட்டியிட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் கட்சி 99 சதவீத அளவுக்கு மிக அதிக இடங்களைக் கைப்பற்றியது. இப்பெரும்பான்மையைக் கொண்டு முஜிபுர் ரஹ்மான் ஒட்டுமொத்த (கிழக்கு,மேற்கு) பாகிஸ்தானுக்கும் பிரதமராகும் நிலை ஏற்பட்டது. இதை மேற்கு பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்துப் பரவின. பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்கள் வங்கதேச மக்கள் மீதும் அவாமி லீக் கட்சியினர் மீதும் மிகக்கொடிய இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டனர். வங்கதேச மதவெறிக் கட்சியான ஜமாத் -இ-இஸ்லாமி, பாகிஸ்தான் ஆட்சியாளர்களுடன் வெளிப்படையாகக் கைகோர்த்துக் கொண்டு போராடும் மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டது. தமது மாணவர்-இளைஞர் அமைப்புகளைக் கொண்டு ரசாக்கர்கள் எனப்படும் இரகசிய குண்டர்படைகளையும், அல்-பதார் எனும் கொலைக்குழுக்களைக் கட்டியமைத்து முன்னணியாளர்களையும் அறிவுத்துறையினரையும் கோரமாகக் கொன்றொழித்தது.

ஷாபாக் ஆர்ப்பாட்டம்
“போர்க்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து ஜமாத் இ இஸ்லாமி கட்சியைத் தடை செய்!” – டாக்காவின் ஷாபாக் சதுக்கத்தில் நடந்த மக்களின் பேரெழுச்சி.

இராணுவ அடக்குமுறைக்கும் இனப்படுகொலைக்கும் எதிராகப் போராடிய வங்கதேச மக்கள், முக்தி பாஹினி எனும் இயக்கத்தின் மூலம் பாகிஸ்தானிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கான போராட்டமாக முன்னெடுத்துச் சென்றனர். வங்கதேச விடுதலைப் போரின்போது, ஏறத்தாழ 30 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு, பெண்களில் நான்கில் ஒரு பங்கினர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, ஒரு கோடிப் பேர் அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இந்த அவலத்தைச் சாதகமாக்கிக் கொண் டு, பிராந்திய விரிவாக்க நோக்கத்துடன் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் வங்கதேச விடுதலைப் போரை ஆதரித்து, முக்திபாஹினி இயக்கத்தின் பெயரால் 1971, டிசம்பர் 3 அன்று இந்திய இராணுவத்தைக் கொண்டு வங்கதேசத்தில் வெளிப்படையாகத் தலையிட்டார். பாகிஸ்தான் இப்போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 16 அன்று முஜிபுர் ரஹ்மானை அதிபராகக் கொண்ட வங்கதேசம் என்ற தனிநாடு உருவானது. போர் முடிவுக்கு வரும் முன்னரே, வங்கதேச இடைக்கால அரசாங்கம் மதவாத அரசியல் கட்சிகளைத் தடை செய்தது.

புதிய நாடு உருவான பின்னர், போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணை நடத்தித் தண்டிக்கக் கோரி மக்களின் போராட்டங்கள் தொடர்ந்தன. இருப்பினும் கொலைகள், பாலியல் வல்லுறவு போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு 1973-இல் முஜிபுர் அரசு பொது மன்னிப்பு அளித்ததேயன்றி, குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணை தொடங்கப்படவில்லை. முஜிபுர் ரஹ்மானின் ஆட்சியானது, நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முடியாமல், ஒரு கட்சி சர்வாதிகாரத்தைக் கொண்டு மக்களின் போராட்டங்களை ஒடுக்கியது.

பின்னர், 1975-இல் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் முஜிபுர் கொல்லப்பட்டு, இராணுவத் தளபதியான ஜியா உர் ரஹ்மான் நாட்டின் அதிபரானார். இந்த இராணுவ ஆட்சியாலும் நாட்டின் அரசியல், பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்க முடியாத நிலையில், இராணுவக் கட்டுப்பாட்டின் கீழான நாடாளுமன்ற போலி ஜனநாயக ஆட்சிமுறையைக் கொண்டுவந்ததோடு, மதவாதக் கட்சிகளின் மீதான தடையையும் ஜியா நீக்கினார்.

ரஜீப் ஹைதர்
ஜமாத் கட்சியின் அட்டூழியங்களை எதிர்த்து இணையத்தின் மூலம் போராட்டத்துக்கு அணிதிரட்டிய நாத்திக இளைஞர் ரஜீப் ஹைதர்.

இருப்பினும், விடுதலைப் போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்று போர்க்குற்றங்களில் ஈடுபட்ட காரணத்தால் ஜமாத் கட்சிக்கு தேர்தலில் நிற்க அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்தியாவில் இந்துத்துவப் பரிவாரங்கள் பின்பற்றிய உத்தியுடன், வங்கதேச ஜமாத் கட்சியானது, இஸ்லாமிய ஜனநாயக லீக் என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டது. அதன் இளைஞர்-மாணவர் அமைப்புகள் இஸ்லாமி சத்ர ஷிபிர் என்ற பெயரில் மறுஅவதாரம் பெற்றன. பின்னர் 1982-இல் மீண்டும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து ஹுசைன் முகம்மது எர்ஷாத் அதிபரான பின்னரே, ஜமாத் கட்சி தனது சோந்தப் பெயரிலேயே செயல்படத் தொடங்கியது.

இராணுவக் கட்டுப்பாட்டின் கீழான இந்த ஆட்சியும் தொடர்ந்து நீடிக்க முடியாமல், 1991-இல் நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தின் அடிப்படையில் வங்கதேசத்தில் தேர்தல்கள் நடந்தன. முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா பேகம் தலைமையிலான அவாமி லீக் கட்சியும், ஜியா உர் ரஹ்மானின் மனைவி பேகம் கலீதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியக் கட்சியும் மாறி மாறி தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி செதன. ஆண்டுகள் பல கடந்த போதிலும், போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமென்ற வங்கதேச மக்களின் நீதிக்கான உணர்வு மங்கிவிடாமல் நீறுபூத்த நெருப்பாகவே நீடித்து வந்தது.

இந்நிலையில், 1971 விடுதலைப் போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தித் தண்டிப்பதாகக் கடந்த 2008 தேர்தலின் போது வாக்களித்து ஆட்சிக்கு வந்தார், அவாமி லீக் கட்சியின் தலைவியான ஹசீனா பேகம். அதன்படி, 2009-ஆம் ஆண்டு 3 உறுப்பினர் கொண்ட பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம், 7 உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு, 12 உறுப்பினர்களைக் கொண்ட வழக்குரைஞர்கள் குழு – ஆகியன உருவாக்கப்பட்டன. இப்போர்க்குற்ற விசாரணை மன்றம், பாகிஸ்தானுக்குத் தப்பியோடித் தலைமறைவாகிவிட்ட அப்துல் கலாம் ஆசாத் என்ற போர்க்குற்றவாளிக்கு கடந்த ஜனவரி 2013-இல் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

ரஜீப் இறுதி ஊர்வலம்
ஜமாத் கட்சியின் குண்டர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட ரஜீப் ஹைதரின் இறுதி ஊர்வலம்.

ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் முக்கியத் தலைவரும், மீர்பூரின் கசாப்புக் கடைக்காரன் என்று மக்களால் காறி உமிழப்படும் போர்க்குற்றவாளியுமான அப்துல் காதர் மொல்லாவுக்கு கடந்த பிப்ரவரி 5 அன்று இந்த விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. அதைத் துச்சமாக மதித்து, அப்துல் காதர் மொல்லாவும் ஜமாத் கட்சியின் குண்டர்களும் இரண்டு விரல்களைக் காட்டி வெற்றிப் பெருமிதத்துடன் ஆரவாரமாக நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த மக்கள், அவனுக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி தலைநகரான டாக்காவிலுள்ள ஷாபாக் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பிப்ரவரி 5-ஆம் தேதியன்று ஷாபாக் சதுக்கத்தில் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டம், “போர்க்குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும், பயங்கரவாத மதவெறிக் கட்சியான ஜமாத் இ இஸ்லாமியைத் தடை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையுடன் முழக்கத் தட்டிகள், கருத்தோவியங்கள், கேலிச்சித்திரங்கள், கொடும்பாவி எரிப்பு – எனப் பல்வேறு வடிவங்களுடன் காட்டுத்தீயாக நாடெங்கும் பரவியது. 1971-இல் ஒவ்வொரு வங்காளிக் குடும்பமும் தமது உறவினர்களைப் பறிகொடுத்துள்ளதால், எத்தனை ஆண்டுகளானாலும் இக்கொடிய வன்கொடுமையை மக்கள் மறக்கத் தயாராக இல்லை.

இதைக்கண்டு ஆத்திரமடைந்த ஜமாத் கட்சியின் குண்டர்கள் போராடும் மக்கள் மீது வெடிகுண்டுகளை வீசி எதிர்ப்போராட்டங்களை நடத்தினர். இணையத்தின் மூலம் ஜமாத் கட்சியின் அட்டூழியங்களை எதிர்த்துப் போராட்டத்துக்கு அணிதிரட்டிய நாத்திகரான அகமது ரஜீப் ஹைதர் என்ற இளைஞர், ஜமாத் கட்சியின் சத்ர ஷிபிர் எனும் மாணவர் அமைப்பின் குண்டர்களால் கோரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். ஜமாத்தின் மாணவர் அமைப்பானது, போலீசையும் பத்திரிகையாளர்களையும் கொடூரமாகத் தாக்கியதோடு, பொதுச்சோத்துக்களையும் நாசமாக்கிக் கையெறி குண்டுகளை வீசி வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு அச்சுறுத்தியது. இந்தத் தாக்குதலில் ஜமாத் குண்டர்களும் போலீசாரும் உள்ளிட்டு ஏறத்தாழ 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

போர்க்குற்றவாளிகள்
தண்டிக்கப்பட்ட போர்க்குற்றவாளிகள்: “மீர்பூரின் கசாப்புக் கடைக்காரன்” என்று மக்களால் காறி உமிழப்படும் ஜமாத் கட்சியின் முக்கியத் தலைவரான அப்துல் காதல் மொல்லா (இடது). மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜமாத் கட்சியின் துணைத்தலைவர் தெல்வார் ஹூசைன் சயீதி.

இருப்பினும், இந்த அச்சுறுத்தல்களால் மக்களின் போராட்டத்தைத் தடுக்க முடியவில்லை. ஜமாத் கட்சியின் வர்த்தக அமைப்புகளான இஸ்லாமி வங்கி, ஐ.பி.என். சினா உள்ளிட்ட இதர நிறுவனங்களையும், டிகந்தா தொலைக்காட்சி, நயா டிகந்தா தினசரி, அமர்தேஷ், சங்க்ராம் நாளேடு, சோனார் பங்களா வலைத்தளம் உள்ளிட்ட ஊடகங்களையும், ஜமாத் கட்சியின் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்களையும் தடை செய்யுமாறும், ராசாக்கர்கள் – அல் பதார் குண்டர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அவர்களைத் தண்டிக்கக் கோரியும் வங்கதேச மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர். பிப்ரவரி 28 அன்று போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் ஜமாத் இ இஸ்லாமியின் துணைத் தலைவரான தெல்வார் ஹுசைன் சயீதிக்கு மரண தண்டனை விதித்ததும், போராடும் மக்கள் இதனை நாடெங்கும் திருவிழா போலக் கொண்டாடினர். போர்க்குற்றவாளிகளுக்கும் மதவெறியர்களுக்கும் எதிராக மாபெரும் எழுச்சியை வங்கதேச மக்கள் நடத்தியுள்ள போதிலும், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கொண்டுள்ள ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய ஆட்சியாளர்களும் இப்போராட்டம் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.

முன்னணியாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியான கலீடா ஜியாவின் வங்கதேச தேசியக் கட்சியின் ஆதரவோடு ஜமாத் கட்சியின் ஒரு சிறுகும்பல் வன்முறை வெறியாட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. வங்கதேச சிறுபான்மை இந்துக்களைத் தாக்கியும் இந்துக் கோயில்களைச் சேதப்படுத்தியும் பிரச்சினையைத் திசை திருப்ப இக்கும்பல் முயற்சிக்கிறது. இந்தியாவின் சதி, நாத்திக சதி, காஃபிர்களின் சதி என்றெல்லாம் அவர்கள் கூச்சலிட்டாலும், வங்கதேச மக்கள் இஸ்லாமிய மத வெறியர்களைத் தண்டிப்பதில் ஓரணியில் நின்று உறுதியாகப் போராடி வருகின்றனர்.

“நீ யாரென்று கேட்டால், நான் வங்காளி என்று சொல்!” என்ற முழக்கத்தோடு போராடும் வங்கதேச மக்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய மதவெறியையும் விட வங்காள தேசியத்தையே பெருமிதமாகக் கருதுகின்றனர். இத்தகைய மக்கள்திரள் போராட்டங்களின் மூலம்தான் எந்த நாட்டிலும் மதவெறியர்களையும் போர்க்குற்றவாளிகளையும் தண்டிக்க முடியுமே தவிர, கடுமையான காகிதச் சட்டங்களாலோ, மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் தயவினாலோ அல்ல என்பதை வங்கதேச மக்கள் போராட்டம் படிப்பினையாக உணர்த்துகிறது. இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு எதிராக நம்நாட்டிலும் இத்தகைய மக்கள் போராட்டங்கள் பெருகும்போது, இந்துவெறி பாசிசப் பரிவாரங்கள் தண்டிக்கப்பட்டு, வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்படுவார்கள்.

– குமார்.
___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

பயங்கரவாத மோடி : இந்திய நாட்டின் அவமானச் சின்னம்!

12
மோடி
மோடியை புகழ்வதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூ 9 லட்சம் கொடுக்கப்பட்டது – இந்தியன் எக்ஸ்பிரஸ் – மார்ச் 30, 2013.

மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டதைக் குறித்து புதிய ஜனநாயகம் இதழில் 2005ம் ஆண்டு வெளி வந்த கட்டுரை.

“மதச் சுதந்திர உரிமைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ மீறும் எந்தவொரு அந்நிய நாட்டு அதிகாரிக்கும் விசாவினை (நுழைவுச் சீட்டு) மறுக்கலாம்” என்ற அமெரிக்க சட்டத்தின்படி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு வழங்கியிருந்த வர்த்தக சுற்றுலா விசாவினை அமெரிக்கா ரத்து செய்திருக்கிறது.

“மோடியின் அமெரிக்க பயணம் அரசுமுறை பயணம் அல்ல. அதனால் அவருக்கு அரசுமுறை விசாவும் வழங்க முடியாது” என மறுத்துவிட்டது அமெரிக்க அரசு.

குஜராத்தில் கொத்துக் கொத்தாக முசுலீம்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த பொழுது விசுவ இந்து பரிசத்தின் குஜராத் மாநிலத் தலைவர் கேசவ்ராம் காசிராம் சாஸ்திரி “ஆம். நாங்கள் திட்டமிட்டுத்தான் கலவரம் நடத்தினோம்” எனப் பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தார். இந்த இனப்படுகொலையின் தளபதி நரேந்திர மோடிதான் என்பதை கலவரத்துக்குப் பின் கோவாவில் நடந்த பா.ஜ.க.வின் உயர்மட்டக் கூட்டம் மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. இவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நம் கண் முன் நடந்தவை.

இந்த சமீபத்திய வரலாற்று உண்மைகளை முசுலீம் பிணங்களோடு போட்டுப் புதைத்துவிட்டு “எந்த நிரூபணமும் இல்லாமல் அரசியல் கட்சிகளும் மத்திய அரசும் அதன் அமைச்சர்களும் பத்திரிகை உலகமும் நரேந்திர மோடிக்கு குஜராத் கலவரங்களைப் பின் நின்று நடத்தி அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர் என்ற முத்திரையைக் குத்தி விட்டன… அமெரிக்காவிற்கு இந்த முத்திரை பயன்பட்டது…. அமெரிக்க நடவடிக்கை கண்டிக்கத் தகுந்தது” எனப் பொய்யைக் கக்கி மோடிக்கு வக்காலத்து வாங்குகிறார் துக்ளக் “சோ”.

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலோ இன்னும் ஒருபடி மேலே போய் மோடிக்கு விசா மறுக்கப்பட்டதை “இந்திய அரசியல் சாசனத்திற்கும் இந்திய மக்களுக்கும் நேர்ந்துவிட்ட அவமானமாகவும்; இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட இழுக்காகவும்” ஊதிப் பெருக்குகிறது.

பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டசு அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் “சோதனை” என்ற பெயரில் துகில் உரியப்பட்டார். ஒரு கிறித்தவ இந்திய அமைச்சருக்கு நேர்ந்த அவமானத்தை இந்திய அரசியல் சாசனத்திற்கு நேர்ந்த அவமானமாக பா.ஜ.க. அரசு கருதவில்லை. மாறாக “அது அமெரிக்காவின் சட்டம்” என்று சொல்லி அவமானத்தைச் சகித்துக் கொண்டார்கள்.

உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட பின் இந்தியா உள்ளிட்ட சில ஏழை ஆசிய கண்டத்து நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் அனைவரும் தங்களின் கைரேகைகளை அமெரிக்க அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இரவு நேரத்தில் சந்தேகத்தில் பிடித்துக் கொள்ளும் நபர்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்து கொள்கிறார்களே அதற்கும் அமெரிக்காவின் சட்டத்திற்கும் பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது.

இந்திய நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தீவிரவாதியாகச் சந்தேகிக்கும் இந்தச் சட்டத்தை பா.ஜ.க. அவமானமாகப் பார்க்கவில்லை. ஆனால் இந்துமத பயங்கரவாதி மோடிக்கு விசா மறுக்கப்பட்டதை அரசியல் சாசனத்தின் அவமானமாக ஒப்பிடுகிறது. அப்படியென்றால் மோடி என்ற கேடியைக் காப்பாற்றுவதுதான் அரசியல் சாசனத்தின் வேலையா?

இந்தக் கேள்விக்கு பா.ஜ.க. மட்டுமல்ல மதச்சார்பற்ற காங்கிரசும் கூட “ஆம்” என்று தான் பதில் அளிக்கிறது. “மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரி; குஜராத் கலவரங்களுக்காக அவர் எந்தவொரு இந்திய நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை; எனவே அவருக்கு விசா மறுக்கப்பட்டதை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என இந்திய அரசின் சார்பாகவே அமெரிக்காவிடம் வேண்டுகிறார்கள்.

2000 முசுலீம்களைக் கொன்ற மோடி சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் ஓட்டாண்டித்தனத்தைத் தான் காட்டுகிறது.

“இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை” என உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பில் சொல்லியிருக்கிறது. இதைத்தான் பா.ஜ.க. இந்துத்துவா என்கிறது.

ராமர் கோவில் கட்டுவதற்காகச் செதுக்கப்பட்ட தூண்களை பாபர் மசூதி வளாகத்தில் வைத்துப் பூசை செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் செய்தபொழுது உச்சநீதி மன்றம் அப்பூசையைத் தடை செய்யவில்லை. மாறாக வளாகத்திற்கு வெளியே பூசை நடத்திக் கொள்ளுங்கள் என்ற சந்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படி பலவிதங்களில் ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுசரணையாக நடந்து கொள்ளும் நீதிமன்றங்கள் மோடியைத் தண்டிக்க வேண்டும் என்றால் சூரியன் மேற்கேதான் உதிக்க வேண்டும். மோடி தண்டிக்கப்படாமல் இருப்பதுதான் அவமானமேயொழிய அவருக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டிருப்பது அவமானத்திற்குரியதல்ல! ···

“சவூதி அரேபியா ஈரானில் எல்லாம் மதவெறி ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தான் வங்காள தேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். அந்நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு விசாவை மறுக்காத அமெரிக்கா மோடிக்கு மட்டும் மறுத்திருக்கிறது” என அமெரிக்காவின் இரட்டை வேடத்தை பா.ஜ.க. அம்பலப்படுத்துகிறது.

அமெரிக்காவின் இந்த இரட்டைவேடத்தினால் பா.ஜ.க.வும்தான் பலன் அடைந்திருக்கிறது. கொசோவாவில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டதைச் சாக்காக வைத்து யுகோஸ்லாவியா நாட்டின் மீது அமெரிக்கா போரே தொடுத்தது. அதே அமெரிக்கா குஜராத்தில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது அதைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட விடவில்லை. இதற்குக் காரணம் குஜராத் கலவரம் நடந்தபொழுது ஆட்சியில் இருந்த வாஜ்பாயி அரசுக்கும் ஜார்ஜ் புஷ்ஷூக்கும் இடையே இருந்த நெருக்கம்தான்.

அமெரிக்காவில் உண்டியலைக் குலுக்கி வசூலிக்கப்பட்ட டாலர்கள் குஜராத் கலவரத்திற்குப் பயன்படுத்தப்பட்டன என்பதை பல்வேறு அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. ஆனாலும் விசுவ இந்து பரிசத் அமெரிக்காவில் உண்டியல் குலுக்குவதை இன்று வரை புஷ் தடை செய்யவில்லை.

“சுதந்திரத்துக்கு” முன்னும் பின்னும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் நூற்றுக்கணக்கான மதவெறிக் கலவரங்களை நடத்தியிருக்கிறது. மதச் சுதந்திரத்துக்கே வேட்டு வைக்கும் மதமாற்றத் தடைச் சட்டம் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை. இதன்படி பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களைச் சேர்ந்த அனைவருக்குமே “விசா” மறுக்கப்பட வேண்டும். ஆனால் அமெரிக்காவோ மோடிக்கு மட்டும் விசாவை மறுத்துவிட்டு எங்களுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நல்ல உறவு இருப்பதாக அறிக்கை விடுகிறது.

இந்தியாவின் அத்வானி இசுரேலின் ஏரியல் ஷரோன் போன்ற மதவெறி பிடித்த அரசியல் தலைவர்களுக்குக் கூட “விசா” வழங்கி வரும் அமெரிக்கா கம்யூனிஸ்டுகள் இடது சாரி முற்போக்கு சிந்தனை கொண்டவர்களுக்கு “விசா” வழங்க மறுப்பதை அரசியல் தந்திரமாகவே கடைப்பிடித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த இரட்டை வேடத்தைப் பற்றி பா.ஜ.க. என்றைக்காவது வாயைத் திறந்ததுண்டா?

அமெரிக்காவின் நலன்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மதச் சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர்களுக்கு விசா வழங்க எந்தத் தடையும் இல்லை என அமெரிக்க சட்டமே கூறுகிறது. அதனால்தான் அத்வானி வாஜ்பாயி வகையறாக்களின் விசா ரத்து செய்யப்படவில்லை. மோடியின் விசா ரத்து செய்யப்பட்டிருப்பது ஒரு விதி விலக்கு. நமது நாட்டு நீதிமன்றங்கள் மனித உரிமைகளை மீறிய போலீசு அதிகாரிகளை அதிசயமாகத் தண்டிப்பது போல! ···

ஈராக் ஆக்கிரமிப்பு அபு கிரைப் சிறைச்சாலை சித்திரவதைகள் இவற்றைக் காட்டி மனித உரிமை பற்றிப் பேச அமெரிக்காவுக்குத் தகுதியில்லை என வாதாடுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதைதான் இது.

இந்திய மக்களின் சட்டபூர்வ மனித உரிமைகள் அனைத்தையும் பறிப்பதற்காகவே “பொடா” என்ற கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் பா.ஜ. கட்சியினர். மனித உரிமைப் போராளிகள் இச்சட்டத்தை எதிர்த்த பொழுது அமெரிக்காவிலும் இது போன்ற சட்டம் பேட்ரியாட் சட்டம் கொண்டு வந்திருப்பதாகக் கூறி நியாயப்படுத்தினார்கள்.

இது மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுக்கத் திட்டம் போட்ட பொழுது தீவிரவாதத்துக்கு எதிரான போரில் தன்னை இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.க. கூட்டணி ஆட்சி மன்றாடியது.

அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த பின் அமெரிக்காவின் தயவில் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு வியாபார ஒப்பந்தம் வாங்கித் தருவதற்காக “அமெரிக்காவுக்கு உதவ ஈராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்புவதாக” புஷ்ஷிடம் வாக்குறுதி கொடுத்தார் அத்வானி. உள்நாட்டு எதிர்ப்பின் காரணமாக படைகளை அனுப்ப முடியாமல் போனதால் முன்னாள் இராணுவ வீரர்களைக் கூலிப் படைகளாக ஏற்றுமதி செய்ய பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அனுமதித்தது.

இப்படி அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு அடியாளாக வேலை செய்ய விருப்பம் கொண்ட இந்து மதவெறிக் கும்பல் “மனித உரிமைகளை மீறிய அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா விசாவை மறுத்தால் என்னவாகும்?” எனச் சவால் விடுகிறது.

ஒருவேளை அப்படி நடந்து விடுகிறது எனக் கற்பனை செய்து கொள்வோம். பிறகு அந்நிய நிதி மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் பெறுவதற்கு இந்தியா எந்த நாட்டிடம் கையேந்தி நிற்க முடியும்?

1994இல் நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் பொழுது அமெரிக்க என்ரான் நிறுவனத்தை அரபிக் கடலில் தூக்கியெறிவோம் எனச் சவடால் அடித்தது பா.ஜ.க. ஆனால் அந்தத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தபின் என்ரானின் இரண்டாவது மின்திட்டத்திற்கும் சேர்த்தே அனுமதி கொடுத்தது.

வாஜ்பாயின் ஆட்சியில் அணுகுண்டு வெடித்த பொழுது அமெரிக்கா இந்தியா மீது அணு ஆராய்ச்சி சம்மந்தமான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அந்நியப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியாவில் உள்ள தடைகளை நீக்கி விடுகிறோம் என அமெரிக்காவோடு பேரம் நடத்திதான் பொருளாதாரத் தடையை நீக்கச் செய்தது வாஜ்பாயி அரசு. இதுதான் பா.ஜ.க.வின் கடந்தகால அமெரிக்க எதிர்ப்பு வீர வரலாறு!

மோடிக்கு விசா வழங்கப்பட்டதை எதிர்த்து அகமதாபாத் நகரில் நடந்த பேரணியில் “நமது நாட்டின் சட்டம் இப்படி இருக்க வேண்டும்; நமது நாட்டின் பாடநூல்கள் இப்படி இருக்க வேண்டும் என அமெரிக்கா கட்டளையிடுவதா?” என்று கொதிப்போடு பேசினாராம் மோடி. பா.ஜ.க. இந்தப் பேரணிக்கு “சுயமரியாதை பேரணி” எனப் பெயரிட்டிருந்தது.

அமெரிக்கா உத்திரவு போட்டு காப்புரிமைச் சட்டம் திருத்தப்பட்ட பொழுது; அமெரிக்கா உத்திரவு போட்டு தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டபொழுது பா.ஜ.க.வின் சுயமரியாதை எங்கே ஒளிந்து கொண்டிருந்தது?

“குஜராத்தில் நடந்த கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில் தலையிட்டுத் தீர்ப்புச் சொல்ல அமெரிக்காவிற்கு அதிகாரம் கிடையாது” என பா.ஜ.க.வோடு சேர்ந்து கொண்டு காங்கிரசும் தர்க்க நியாயம் பேசுகிறது.

இந்திரா காந்தியின் அவசரநிலை காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா தலையிட்டதை ஆர்.எஸ்.எஸ். கும்பல் வரவேற்றிருக்கிறது. கார்கில் போரை முடிவுக்குக் கொண்டுவர கிளிண்டனோடு இரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினார் வாஜ்பாயி. இவையெல்லாம் சர்வதேசப் பிரச்சினைகளா?

இந்த உள்நாட்டு அளவுகோலை ஈராக் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் பிரயோகித்தால் அமெரிக்கப் படைகளை அந்நாடுகளில் இருந்து வெளியேறச் சொல்ல வேண்டும். அந்த நாணயம் காங்கிரசு பா.ஜ.க. விடம் உண்டா?

அமெரிக்கா சதாமை சர்வாதிகாரி எனக் குற்றம் சாட்டியபொழுது “அதை ஈராக் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்; அதில் அமெரிக்கா தலையிடக் கூடாது” என மோடியோ அத்வானியோ எதிர்த்துப் பேசியதுண்டா? மாறாக “சதாமை நீங்கள் தண்டிக்க விரும்பினால் ஐ.நா.வின் ஒப்புதலோடு தண்டியுங்கள்” என்றுதான் அமெரிக்காவிடம் மன்றாடினார்கள்.

இன்றுள்ள உலகச் சூழலில் சில பிரச்சினைகளை உள்நாட்டு பிரச்சினைகள் என ஒதுக்கி விட முடியாது. தென்னப்பிரிக்காவில் நடந்த வெள்ளை இனவெறி அரசு கருப்பின மக்களுக்கு எதிராக நிறவெறிக் கொள்கையைக் கடைப்பிடித்த பொழுது அந்நாட்டை உலக நாடுகள் கண்டித்ததோடு அந்நாட்டோடு வர்த்தக அரசியல் உறவுகள் வைத்துக் கொள்ளாமல் புறக்கணித்தன. பாலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான பூமியை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் நோக்கத்தோடு இசுரேல் கட்டிவரும் சுவரை இடித்துத் தள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. போஸ்னியாவிலும் கொசாவாவிலும் முசுலீம்களை இனப்படுகொலை செய்த யுகோஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் அந்தக் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறார்.

குஜராத்தில் நடந்த இனப்படுகொலை கூட சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய அளவிற்குக் கொடூரமானவைதான். இந்த இனப்படுகொலையின் தளபதியான மோடியை இந்தியச் சட்டங்கள் தண்டிக்க மறுக்கும் பொழுது அவனைத் தண்டிக்கக் கோரும் உரிமையை அமெரிக்க அரசிற்கு (அதனின் இரட்டை வேடம் காரணமாக) வேண்டுமானால் மறுக்கலாம். ஆனால் உலக மக்கள் அப்படிக் கோருவதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இன்று போர் குற்றவாளி ஜார்ஜ் புஷ்ஷைத் தண்டிக்கக் கோரி போராடும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் நாளை மோடியையும் தண்டிக்கக் கோரி போராடினால் அதை நாம் இருகரம் கூப்பி வரவேற்கத்தான் வேண்டும்.

– முத்து
______________________________________________________________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2005
______________________________________________________________________________

ஓசூர் கமாஸ் வெக்ட்ரா பயங்கரவாதம்!

0

17.04.2013, ஓசூர்.

பு.ஜ.தொ.மு., ஓசூர்ஓசூரில் கனரக வாகன உற்பத்தி நிறுவனமான கமாஸ் வெக்ட்ராவில் நடக்கின்ற தொழிலாளர்கள் மீதான முதலாளித்துவ பயங்கரவாத அடக்குமுறைகளை அவ்வாலைத் தொழிலாளர்கள் தங்களின் ஒன்றுபட்ட போராட்டங்களின் வாயிலாக வெளிக் கொணர்ந்துள்ளனர். ஆலை நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்பட்டுவரும் தொழிலாளர் நலத்துறை, ஆய்வகத்துறையைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரில் கடந்த பிப்ரவரி 2013-ல் ஆர்ப்பாட்டம் என பலவேறு போராட்டங்களை நடத்திவந்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 15.04.2013 அன்று காலை 10 மணியளவில் ஓசூர் நகராட்சி முன்பாக ஆலைநிர்வாகத்தின் அடக்குமுறைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்துக் கொண்டு ஆதரவளித்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கமாஸ் வெக்ட்ரா கிளைச் சங்கத் தலைவர் தோழர் செந்தில் தலைமைத் தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் சிறப்புரையாற்றினார். கமாஸ் வெக்ட்ரா கிளைச் சங்கத்தின் பொருளாளர் தோழர் முரளி இறுதியாக நன்றியுரையாற்றினார்.

திரளான மக்கள் திரண்டு நின்று கவணித்து ஆதரவளித்துச் சென்றனர். ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதற்கு முன்பாக ஆயிரக்கணக்கில் துண்டறிக்கைகள் அச்சடித்து நகர்முழுவதும் விநியோகித்து மக்களிடையே பிரச்சாரம் செய்திருந்தனர்.

ஓசூர் ரஷ்ய பன்னாட்டு கம்பெனி கமாஸ்வெக்ட்ராவின் தொழிலாளர்மீதான முதலாளித்துவ அடக்குமுறையை முறியடிப்போம்!
நிர்வாக அதிகாரிகளின் கிரிமினல் வேலைகளை அம்பலப்படுத்துவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

ஓசூரில் கமாஸ் வெக்ட்ரா எனும் ரசியாவை சேர்ந்த கனரக வாகன தொழிற்சாலை இயங்கிவருகிறது. இவ்வாலையில் உற்பத்தி செய்யப்படும் லாரிகள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 2010-ல் நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்ட எத்தனித்தது. தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் ரஷ்ய நிறுவனத்தின் நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக்கட்டும் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. மேலும் நயவஞ்சகமாக 2010-ல் அத்திப்பள்ளிக்கு விரட்டப்பட்ட 15 தொழிலாளர்களின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

கமாஸ் வெக்ட்ரா கம்பெனியா? பட்டறையா?

52 நிரந்தரத் தொழிலாளர்களை கொண்ட இவ்வாலையில் தற்போது சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 13 தொழிலாளர்கள் சஸ்பெண்டு, 3 தொழிலாளர்கள் வடமாநிலங்களுக்கு விரட்டியடிப்பு, 18 தொழிலாளர்கள் சர்வீஸ், மார்க்கெட்டிங் பிரிவுகளுக்கும் மாற்றப்பட்டு எஞ்சிய 16 நிரந்தரத் தொழிலாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு கம்பெனி இயங்குகிறதாம். நேரடி உற்பத்தி பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், அதிகாரிகளை திணித்துவிட்டு நிரந்தரத் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கம்பெனி இந்தியாவுக்குள் வந்தால் தொழிலாளர்க்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் “2020-ல் இந்தியா வல்லரசு” ஆகிவிடும் என்றும் அப்துல்கலாம் முதல் பிரதமர் மன்மோகன்சிங் வரை பேசுபவர்களின் முகத்தில் காரி உமிழ்கிறார்கள் இவ்வாலை நிர்வாகிகள்.

ரஷ்ய நிறுவனத்தின் அடாவடிகளும், அயோக்கியத்தனங்களும்;

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை முன்னால் போடப்பட்ட 12/3 ஒப்பந்தம் மதிக்கப்படவில்லை. அசெம்பிளி லைனில் 12/3 ஒப்பந்தப்படி 34 நிரந்தரத் தொழிலாளர்கள் வழங்கப்படுவதில்லை. அதேசமயம் ஆட்குறைப்பு அடக்குமுறையும், உற்பத்தி உயர்வும் திணிக்கப்படுகிறது. 12/3 ஒப்பந்தப்படி உற்பத்தி உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்று வேலைசெய்யும் 27 இளந்தொழிலாளர்களுக்கு ரூ 7,000 ஊதிய உயர்வு சட்டத்தின்படி வழங்கப்படவில்லை. இதுதவிர ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட போனஸ் ரூ 8,400, பரிசுப் பொருட்கள்(ரூ 5,000 மதிப்பு), சீருடை, காலணி போன்ற எதுவும் வழங்கப்படவில்லை. தொழிற்சாலை துணைத்தலைமை ஆய்வாளர் ஜெகதீசனிடம் புகார் கூறியதற்காக 8 நாட்கள் சம்பளவெட்டு செய்யப்பட்டுள்ளது.

ரசிய நிர்வாகம் உரிமைகளை பறித்து நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக்கட்டவும் கிரிமினல் வேலைகளை செய்யும் எச். ஆர், ஐ.ஆர், ஜி. எம் என்ற பெயரில் அடியாட்களை வைத்துள்ளது. ராஜூ ஆறுமுகம்(எச். ஆர்) ரூ 32 லட்சம், சுந்திரமூர்த்தி(ஜி. எம்) ரூ 24 லட்சம், காமவெறியன் ஏகாம்பரம்(ஐ.ஆர்) ரூ 18 லட்சம் என பெருந்தொகையை வெளிநாட்டு நிறுவனத்திடம் பேரம் பேசி பெற்றுக்கொண்டு தொழிலாளர்களை ஒடுக்கிவருகின்றார்கள். “இந்தியாவில் எங்கே போய் புகார் கொடுத்தாலும் எங்கள்மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கமாட்டாங்க, சும்மா இல்ல 4 கோடி ரூபாய் அரசு அதிகாரிகளுக்கு செலவு செய்திருக்கோம். மேனேஜ்மென்ட் தொழிலாளர்களையும் தொழிற்சங்கத்தையும் ஒழிக்காம விடாது.” இப்படி ரௌடிகளைவிட மிகமோசமாக கொக்கரித்துவருபவர்கள்தான் மேற்கண்ட மும்மூர்த்திகள். சொத்துக்குவிப்பு, கிரிமினல் வழக்குகள் இவர்கள்மீது பாய்வதில்லை. காரணம் இவர்கள் முதலாளித்துவப் பயங்கரவாதத்தின் அடிவருடிகள் என்பதால்தான்.

தொழிலாளர் நல அலுவலரும், தொழிற்சாலைகள் ஆய்வாளரும் நிர்வாகத்தின் உளவாளிகளே!

மேற்கண்ட அரசுத்துறை அதிகாரிகளிடம் முறையீடு செய்வது என்பது சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமமாகும். பல தொழிற்தகராறு வழக்குகள் தொழிலாளர் அலுவலரிடம் போடப்பட்டபோதும் தொழிலாளர் அலுவலர் ரமேஷ்குமார் நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்பட்டுவருகிறார். தொழிற்தகராறு சட்டம் 1947 பிரிவு 2k வழக்குக்கு போடவேண்டிய சமரச முறிவறிக்கைக்கு 12 (4)க்கு பதிலாக அவரே நிர்வாகத்தின் கட்டளைப்படி அரசாங்கத்திற்கு விவரம் தெரிவிக்காமல் திருத்தப்பட்ட தொழில்தாவா கீழ் நீதிமன்றத்துக்கு செல்லும்படி அறிவுரை கூறினார். இது ஒரு தீய உள்நோக்கம் கொண்ட கட்டப்பஞ்சாயத்து ஆகும். தொழிற்சாலை ஆய்வாளர் திரு நாகராஜன், ஜெகதீசன் ஆகியோர் தொழிலாளர்களுக்கு எதிராகவும், நிர்வாகத்திற்கு சாதகமாகவும் தங்கள் சுயலாபத்திற்காக செயல்படுகின்றனர். நிர்வாகத்தின் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் குறித்து புகார் அளித்தும் பல புகார் கடிதங்களுக்கு பதில் இல்லை.

வேலை வாய்ப்புத்துறை அதிகாரிகள் தவறு செய்யும் அதிகாரிகள் மீது ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. தொழிலாளர்துறை அதிகாரிகள், தொழிற்சாலைகள் துறை அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் சென்றால் அவரும் அதே அதிகாரிகளிடம் மனுக்களை திருப்பி அனுப்புகிறார். எங்கிருந்து தீரும் மக்கள் குறை?

சாதாரண மனிதன் சட்டத்தை மீறினால் உடனடியாக பாய்கிறது சட்டம், சிறை, தண்டனை, ஆனால் முதலாளிகள் மற்றும் அவர்களின் அடியாட்களான எச்.ஆர்., ஐ.ஆர். போன்ற அதிகாரிகள் சட்டத்தை மீறும்போது சட்டபுத்தகங்கள் எல்லாம் முதலாளிகளின் கழிவறை காகிதங்களாக மாறுகிறது.

விசாரணை அதிகாரியின் துரோகங்கள்!

சஸ்பண்ட் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு விசாரணை என்ற பெயரில் ஆலைவளாகத்திற்குள் வைத்து நிர்வாகத்திற்கு சாதகமாக பதிவு செய்தும், தொழிலாளர்களை மிரட்டுவதும், தொழிலாளர்கள் கேட்கும் கேள்விகளை நிராகரிப்பதும், உதவி செய்யும் சக தொழிலாளியை மிரட்டுவதும், விசாரனைக்கு சம்மந்தம் இல்லாத அதிகாரிகள் விசாரணையில் குறுக்கீடு செய்வதும், விசாரணை குறிப்பை படித்துப் பார்க்க நேரம் கொடுக்க மறுப்பதும், விசாரணைக்கு தேவையான காலஅவகாசம் கொடுக்க மறுப்பதும் இதுபோன்ற செயல்களை விசாரணை அதிகாரி திரு. கே. கோவிந்தராஜன் செயல்பட்டுவருகிறார்.

தொழிலாளர்களை விசாரணையின்போது வெளியே போ! நான் அப்படிதான் எழுதுவேன். அதிகம் பேசினால் விசாரணையை நிர்வாகத்திற்கு சாதகமாக இன்றே முடித்துவிடுவேன் என்று கத்துகிறார். பல கம்பெனியில் நிர்வாகத்திற்கு சாதகமாக இயற்கை நீதியை மறுத்து ஒருதலைபட்சமாக செயல்பட்டதை பாதிக்கப்பட்ட டெனக்கோ(Tenneco) தொழிலாளர்களை கேட்டால் தெரியும். கோவிந்தராஜன் செய்வது அனைத்தும் மோசடி சதிவேலையாகும். தன்னை நல்லவன்போல காட்டிக்கொள்ள நேஷனல் அரிமா சங்க செயலாளர் என்று ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.

தொழிலாளர்களே!

மீண்டும் தற்போது 2013-ல் நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக்கட்ட எத்தணிக்கிறது. வெறிப்பிடித்த ரஷ்ய நிறுவனத்தின் அடியாட்கள் அடிவருடிகளை அம்பலப்படுத்துவோம்!

சட்டபூர்வ உரிமைகளை 12(3) எதையும் மதிக்காத கிரிமினல் ரஷ்ய கமாஸ் வெக்ட்ரா நிறுவனத்தின் முதலாளித்துவ பயங்கரவாத தாக்குதலை தொழிலாளர்களின் ஒற்றுமையால் முறியடிப்போம்!

ஒப்பந்த, தற்காலிகத் தொழிலாளர்கள் என்ற பெயரில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கப்படுவதற்கு எதிராக தொழிலாளர்கள் ஓரணியில் திரண்டிடுவோம்!

அசோக்லேலாண்டு, எக்ஸைடு, கார்போரண்டம் போன்ற ஆலைகளில் வேலைப்பளு அதிகரிப்பு, ஊதிய உயர்வுக்கு முட்டுக்கட்டை பேச்சுவார்த்தை என்னும் நாடகத்தையும் லாபவெறியையும் அம்பலப்படுத்துவோம்!

தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைக்கு எதிராக அணிதிரள்வோம்! போராடுவோம்!

தமிழக அரசே தலையிடு!

12/3 ஒப்பந்தத்தை மதித்து நடக்க உத்தரவிடு!

ஒப்பந்தத்தை மதிக்காமல் தொழிலாளர்கள்மீது அடக்குமுறை ஏவும் கிரிமினல் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடு!

சஸ்பண்ட் செய்யப்பட்ட 13 தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க உத்தரவிடு!

இவண்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் லிட்(கிளை),
(கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்)
பதிவு எண்: 24 KRI,
செல்- 9788011784.

ஈழ அகதிகளை ஒடுக்கும் பாசிச ஜெயலலிதா!

6

சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!

மே நாள்

பேரணி, டி.ஜி.பி. அலுவலகம் முற்றுகை.

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

மே நாள் பேரணி நோட்டிஸ்சிங்கள இனவெறிப் பாசிஸ்டு ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக மாணவர் போராட்டம் தோற்றுவித்த பொதுக்கருத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக, தாங்களும் மாணவர் கோரிக்கைகளை ஆதரிப்பது போல எல்லா ஓட்டுக்கட்சிகளும் நடிக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, “இலங்கையின் மீது பொருளாதாரத் தடை, போர்க்குற்ற விசாரணை, பொது வாக்கெடுப்பு” என்று அடுத்தடுத்து சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றி, நடிப்பில் மற்றெல்லா ஓட்டுக் கட்சிகளையும் விஞ்சுகிறார்.

இராஜபக்சேவுக்கு எதிராக இந்த சவடால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற இதே காலகட்டத்தில்தான், சிறப்பு முகாம் என்ற சிறையிலிருந்து தங்களை விடுதலை செய்யுமாறு ஈழ அகதிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். “கணவனைப் பார்க்க வேண்டும்” என்ற ஒரு மிகச்சாதாரணக் கோரிக்கைக்காக தனது இரு பிள்ளைகளுடன் சிறப்பு முகாம் எதிரில் உண்ணாவிரதம் இருக்கிறார் ஒரு ஈழத்தமிழ்ப் பெண். போராட்டம் நடத்திய குற்றத்துகாக பிள்ளைகளுடன் அவரைக் கைதுசெய்து சிறை வைக்கிறது ஜெ அரசு. மனைவிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து சிறப்பு முகாமிலிருந்த கணவன் தூக்கமாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.

எந்த விதக் குற்றமும் இழைக்காத ஈழத்தமிழ் அகதிகள், சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலான தமிழகத்தின் முள்வேலிச் சிறைகளில் ஆண்டுக்கணக்கில் அல்லல்பட்டு வருகிறார்கள். இவர்களை விடுவிப்பதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் கையொப்பமிட்ட ஒரு அரசாணையே போதுமானது. ஆனால், சிங்கள அரசிடமிருந்து ஈழத்தமிழர்க்கு விடுதலை வாங்கித்தருவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் ஜெயலலிதா, சிறப்பு முகாம்கள் எனும் இந்தக் கொடுஞ் சிறைகளிலிருந்து ஈழத்தமிழ் அகதிகளை விடுவிக்க மறுக்கிறார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சிறப்பு முகாம்கள் எனும் இந்த சித்திரவதைக் கூடங்களை ஈழத்தமிழருக்காக உருவாக்கியது யார் தெரியுமா? இன்று ஈழத்தாய் வேடமேற்றிருக்கும் ஜெயலலிதாவின் அரசுதான்.

இன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர் பலருக்கு, கடந்த பல ஆண்டுகளாக ஈழ அகதிகளுக்கு இங்கே இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் பற்றித் தெரியாது. தற்போது தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் வாழ்கின்றனர். தமது உடைமைகளைத் துறந்து, ஏதிலிகளாக வந்திறங்கிய இம்மக்களில் சுமார் 70,000 பேர் தமிழகமெங்கும் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தம் சொந்தப்பொறுப்பில் வெளியே வீடு எடுத்து தங்கியிருக்கின்றனர்.

இலங்கையிலிருந்து இங்கே வந்திறங்கும் ஈழத்தமிழ் மக்களை தமிழக அரசின் அதிகாரிகளும் போலீசும் அனுதாபத்துக்குரிய அகதிகளாகக் கருதுவதில்லை. சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளாகவே நடத்துகிறார்கள். நக்சல்பாரி இயக்கத்தினரை உளவு பார்ப்பதற்கென்று தமிழக போலீசு உருவாக்கியிருக்கும் “கியூ பிரிவு” உளவுத்துறைதான் அகதிகள் அனைவரையும் கண்காணிக்கிறது, கட்டுப்படுத்துகிறது. ஈழ விடுதலை இயக்கத்தை நசுக்குவது என்ற இந்திய அரசின் நோக்கத்துக்கு ஏற்ற வகையில்தான் திமுக, அதிமுக அரசுகள் ஈழ அகதிகள் அனைவரையும் ஒடுக்கி வருகின்றன.

சிங்கள இராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டவர்கள், குண்டடி, ஷெல்லடி பட்டவர்கள் யாராக இருந்தாலும், படகில் வந்து இறங்குபவர்களின் உடம்பில் காயம் இருந்தால், அவர்கள் மீது “புலி” என்று முத்திரை குத்தி சிறப்பு முகாமுக்கு அனுப்புகிறது கியூ பிரிவு போலீசு. இது மட்டுமல்ல, லஞ்சம் கொடுக்க முடியாதவர்களுக்கும், எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களுக்கும் போலீசு விதிக்கும் தண்டனை சிறப்பு முகாம். தமிழகத்தில் உள்ள ஆறு சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு, ஒரு சிறைக்கைதிக்குரிய உரிமைகள் கூட கிடையாது. வெளியுலகத் தொடர்பிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, மனைவி மக்களைக் கூடப் பார்க்க முடியாமல் இவர்கள் தடுக்கப்படுகிறார்கள். மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் அகதிகள், கை கால்களில் விலங்கிடப்பட்டு கொடிய கொலைக்குற்றவாளியைப் போலவே கொண்டு செல்லப்படுகிறார்கள். பல பத்தாண்டுகள் ஆனாலும் இந்த முகாம்களில் இருப்பவர்களுக்கு பிணை என்பது கிடையாது. வழக்கு, விசாரணை, விடுதலை எதுவும் கிடையாது. இது ஒரு வகை ஆயுள் தண்டனை.

சிறப்பு முகாம்களில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பிற முகாம்களில் உள்ள அகதிகளும் நிரந்தரமாகவே போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் கண்காணிப்பின் கீழ் தான் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு அகதி இரண்டு நாட்களுக்கு மேல் முகாமுக்கு வெளியே செல்வதென்றால், வட்டாட்சியரின் அனுமதியைப் பெற வேண்டும். அனுமதியின்றி சென்றால் முகாமிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்படுவர். அனுமதி வாங்க வட்டாட்சியரையே பார்க்க முடியாத காரணத்தினால், பிற முகாம்களில் தங்கியிருக்கும் தமது பெற்றோர் இறந்து போகும்போது, பிள்ளைகளால் இறந்தவர் முகத்தைக் கூடப் பார்க்க முடிவதில்லை. பெண்கள் வேறு முகாமில் இருக்கும் தம் பெற்றோர் வீட்டுக்கு பிரசவத்துக்காக சென்று திரும்பினால், முகாமிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். வேலைக்கு செல்பவர்கள் மாலை 6 மணிக்குள் முகாமிற்கு திரும்பவேண்டும் என்ற விதியின் காரணமாக, குறைந்த கூலிக்கு உள்ளூரில் மட்டும்தான் இவர்கள் வேலை செய்ய முடிகிறது. தொழில் திறமை இருப்பவர்கள் கூட நகரங்களுக்கு சென்று நல்ல ஊதியம் ஈட்ட முடியாது.

மண்டபம், புதுச்சேரி தவிர தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்கள் எதிலுமே முறையான வீடு கிடையாது. பத்தடிக்கு பத்தடி அளவில் தகரம் அல்லது, பாலித்தின் காகிதத்தினால் வேயப்பட்ட கூரை; பராமரிப்பில்லாமல் நாற்றமெடுத்த கழிவறைகள்; மின்கம்பங்கள் ஏதும் நிறுவப் படாததால், குறுக்கு நெடுக்காக தொங்கும் மின்சாரக் கம்பிகள்; பகல் முழுவதும் மின்வெட்டு, இரவு மட்டும்தான் மின்சாரம் என ராஜபக்சே அரசின் மேனிக் பார்ம் முள்வேலி முகாமோடு போட்டி போடுகின்றன தமிழகத்தின் அகதி முகாம்கள். முகாம்களில் பள்ளியோ ஆரம்ப சுகாதார நிலையமோ கூட கிடையாது. அருகாமையில் உள்ள போலீசு நிலையங்களின் போலீசார், தங்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம், ஏதாவது ஒரு வழக்கில் “குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத்தண்டனை அனுபவிப்பதற்கு” முகாமிலிருந்து ஆள் அனுப்புமாறு மிரட்டுவார்கள். பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை இழைப்பார்கள். இவையெல்லாம் அகதிகளுக்கு எதிராக போலீசார் கேட்பாரின்றி இழைத்து வரும் குற்றங்கள்.

இத்தகைய கொடுமைகளைத் தாங்க முடியாமல்தான், உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் தப்பிச் செல்ல முயல்கிறார்கள் அகதிகள். அவர்களையும் மடக்கி கைது செய்து சிறையில் அடைக்கிறது தமிழக போலீசு. இவ்வாறு பயணம் மேற்கொண்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கடலிலேயே மூழ்கி மடிந்துள்ளனர். “தாய்த்தமிழகம்” ஈழத்தமிழ் அகதிகளுக்கு பேய்த்தமிழகமாக இருந்து வருகிறது. தொப்புள் கொடி உறவு என்று வசனம் பேசாத பிரான்சு, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள்தான் ஈழ அகதிகளை கவுரவமாக நடத்துகின்றன. 7 ஆண்டுகளுக்குப் பின்னர் விரும்புவோருக்கு குடியுரிமையும் வழங்குகின்றன.

ஆனால், இங்கோ எதுவும் கிடையாது. அகதிகள் பிரச்சினை எழுப்பப் படும்போதெல்லாம், அவர்களுக்கு வழங்கப்படும் புழுத்த அரிசியையும், உதவித்தொகையையும் கொஞ்சம் கூட்டிக் கொடுப்பதற்கு மேல் திமுக, அதிமுக அரசுகள் எதுவும் செய்வதில்லை. முக்கியமாக உரிமையும் சுயமரியாதையும் கொண்ட மனிதர்களாக அவர்களை அங்கீகரிப்பதில்லை. இந்திய அரசு அகதிகளுக்கான ஐ.நா உடன்பாட்டில் கையொப்பமிடவில்லை என்பதால், ஐநா அதிகாரிகளை அகதி முகாமுக்குள் நுழைய தமிழக அரசு அனுமதிப்பதில்லை.

ஒரு பேச்சுக்கு இங்குள்ள ஈழத்தமிழர்களை அகதி என்று அழைத்தபோதிலும், இந்திய அரசைப் பொருத்தவரை ஈழத் தமிழ் அகதிகள் அனைவரும் எல்லை தாண்டி ஊடுருவியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள். இந்த நிலைமை காரணமாக, இலங்கை மண்ணையே கண்ணால் பார்த்திராத, அகதி முகாமிலேயே பிறந்து வளர்ந்து படித்து பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு இங்கே அரசு நிறுவனமோ. தனியார் நிறுவனங்களோ வேலை தருவதில்லை.

அகதிகள் தமிழகத்தை சேர்ந்த ஒரு ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொண்டால், பிறக்கும் குழந்தைக்கு இரண்டு நாட்டின் குடியுரிமையும் கிடைக்காது. ஈழத்தவரையே திருமணம் செய்து குழந்தை பிறந்தால், இலங்கை துணை தூதரகத்திற்கு தெரிவித்து குடியுரிமைக்குப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

2009 இறுதிப் போருக்குப் பின் நாடு திரும்பிச் செல்ல விரும்பிய சிலர், ஈழம் சென்றனர். அங்கே தமது வீடோ, நிலமோ இல்லாத நிலை கண்டு அதிர்ச்சியுற்று மீண்டும் தமிழகம் திரும்பினர். ஆனால் அவர்கள் முகாமை விட்டு ஒரு முறை வெளியேறிவிட்டதால் மீண்டும் அகதியாக உள்ளே சேர்க்க முடியாது என்று கூறி, பதிவிலிருந்து அவர்கள் பெயரை எடுத்ததுடன் அவர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளையும் நிறுத்திவிட்டது ஜெ அரசு. முகாமிலுள்ள மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழக்கூட இவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இலங்கையில் போர் முடிந்த பின்னரும் ஈழத்தமிழ் மக்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது ராஜபக்சே அரசு. ஆனால், ஜெ அரசு ஈழ அகதி முகாம்களை ஏன் இன்னமும் போலீசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்? ஏனென்றால் ஈழத்தமிழர் அனைவரையும் சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகளாகவே கருதுகிறது ஜெ அரசு. ராஜீவ் கொலையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஈழ அகதிகளை கட்டாயமாக இலங்கைக்கு கப்பலேற்றி அனுப்பியவர் ஜெயலலிதா. ஈழத்தமிழ் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் தடை விதித்தவர். இன்றைக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இங்கே குடியுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை எதிர்ப்பவர். ஜெயலலிதாவின் இந்த நிலைப்பாடும், இந்திய அரசின் நிலைப்பாடும் வேறல்ல.

நாம் ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைக்கு குரல் கொடுக்கும் அதே நேரத்தில், தமிழகத்தில் தஞ்சமடைந்திருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் உரிமைகளுக்கும் கண்ணியமான வாழ்க்கைக்கும் குரல் கொடுக்க வேண்டும். அகதிகளாக மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்கள் விரும்பினால் அந்நாட்டுக் குடியுரிமை பெறுகின்றனர். இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு, இலங்கைக் குடியுரிமையுடன், இந்தியக் குடியுரிமையும் வழங்கப் படவேண்டும். தஞ்சம் புகுந்த நாட்டின் குடிமகனாவதா, சொந்த நாட்டிற்குத் திரும்புவதா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த உரிமையை இந்தியாவும் வழங்க நிர்ப்பந்திக்க வேண்டுமானால், இந்திய அரசை அகதிகளுக்கான ஐ.நா உடன்பாட்டில் கையொப்பமிடச் செய்ய வேண்டும். சிறப்பு முகாம்கள் எனும் சித்திரவதைக் கூடங்களிலிருந்து ஈழ அகதிகள் அனைவரையும் விடுவிக்கவும், பொய் வழக்குகளை ரத்து செய்யவும், அம்மக்களுக்கு கவுரவமான வீடுகள், வேலைவாய்ப்பு வழங்கவும் கோரி தமிழக அரசிடம் நாம் போராட வேண்டும். இந்தப் போராட்டங்கள் ஈழமக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் ஓட்டுக்கட்சிகளையும், அவர்களுக்கு காவடி தூக்கும் சந்தர்ப்பவாதிகளையும் அடையாளம் காட்டவேண்டும்.

இந்திய அரசுதான் ஈழ மக்களின் போராட்டத்தை கருவிலேயே சிதைத்தது. அந்தக் கொள்கையின் தொடர்ச்சிதான் அகதிகள் மீதான இந்த அடக்குமுறை. அவர்களுடைய உரிமைகளை உத்திரவாதம் செய்வது சர்வதேசப் பாட்டாளிவர்க்கம் என்ற முறையில் நமது கடமை.

சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!

ஈழத்தமிழ் அகதிகள் மீதான போலிசு கண்காணிப்பு கட்டுப்பாடுகளை நீக்கு!
கவுரவமான வேலைவாய்ப்பு, குடியிருப்பு வழங்கு!

தகவல்:

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

பெண்கள் மீதான வன்கொடுமை: நீர்த்துப்போன சட்டம் – திருந்தாத அதிகார வர்க்கம்!

2
பஞ்சாப் போலீஸ்
பாலியல் தொல்லை கொடுத்தவனிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு புகார் கொடுத்த பெண்ணையே தாக்கும் பஞ்சாப் போலீசு.
கொல்கத்தா போராட்டம்
கொல்கத்தாவின் பூங்காதெரு பகுதியில் ஒரு பெண்ணை கும்பல் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய குற்றவாளிகள் மீது தாமதமின்றி விசாரணை நடத்தி தண்டிக்கக் கோரி பெண்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்.

டெல்லியில் நடந்த வல்லுறவுக் கொலைக்குப் பின்னர் அமைக்கப்பட்ட வர்மா கமிசனின் பரிந்துரைகளை நீர்த்துப்போக வைத்துவிட்டு,  ஒரு அவசரச் சட்டத்தை அரசு பிறப்பித்தது. வர்மா கமிசனின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு மசோதாவைத் தயாரித்து, அதை நாடாளுமன்றத்தில் விவாதித்துச் சட்டமாக்கி, பின்னர் அரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இச்சட்டத்தை அமலாக்க வேண்டுமென்பதால், இடைக்காலத்தில் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதாக அரசு அறிவித்தது.

இப்படியொரு அவசரச் சட்டம் வந்த பிறகாவது பெண்களின் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்து விட்டதா? அல்லது ஆணாதிக்க வெறியர்கள் இந்த அவசரச் சட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிவிட்டார்களா? அல்லது சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசும் குற்றங்களைத் தடுக்க முனைப்பாகச் செயல்படுகிறார்களா? எதுவும் கிடையாது. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு இந்தியா அவமானப்பட்டுள்ள போதிலும், முன்னைவிட அதிக அளவிலும் வக்கிரமாகவும் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மே.வங்கப் பெண் முதல்வரான மம்தா பானர்ஜியோ, மக்கள் தொகையும், கார்களும், சினிமா அரங்குகளும் அதிகரிக்கும்போது, பாலியல் குற்றங்களும் அதிகரிக்கத்தான் செய்யும் என்று ‘சமூக அக்கறை’யுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்ற அமைச்சர்கள் குழு பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதாவின் மீது மயிர்பிளக்கும் விவாதத்தை நடத்திக் கொண்டிருந்த போதே, தாஜ்மஹாலைப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணியான ஜெசிகா டேவிஸ் எனும்  லண்டனைச் சேர்ந்த பெண்ணை, ஆக்ரா நகரில் அவர் தங்கியிருந்த ஓட்டல் முதலாளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால், அப்பெண் இரண்டாவது மாடியிலிருந்து குதித்துக் கால்கள் முறிந்து, தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

டெல்லி மங்கோல்புரி
டெல்லி மங்கோல்புரியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை எதிர்த்து பகுதி வாழ் உழைக்கும் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் – போலீசின் அடக்குமுறை ஓய்ந்த பின்னர் காணப்பட்ட போர்க்களம்.

கடந்த மார்ச் 15 அன்று ம.பி.யில் சுற்றுலாப் பயணிகளான சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கணவனும் மனைவியும் சைக்கிளில் பல இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இரவில் காட்டுப்பகுதியில்  ஓய்வெடுத்தபோது, அங்கு ஒரு கும்பல் கணவனைத் தாக்கிவிட்டு, அப்பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் வீச்சாக நடந்துள்ள தலைநகர் டெல்லியின் மங்கோல்புரி பகுதியிலுள்ள மாநகராட்சிப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ள கொடூரம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் 3 பள்ளிச் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அதே மகாராஷ்டிராவின் வசாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13,11,10,9 மற்றும் 7 வயது நிரம்பிய 5 சகோதரிகளையும் அச்சிறுமிகளின் சித்தப்பா கடந்த ஈராண்டுகளாகப் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ள கொடுமை இப்போது வெளியே வந்து, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மதுரை மாவட்டம், கூடல்நகர் அருகிலுள்ள குலமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பழநி அருகேயுள்ள பதினாறுபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் ஆகியோர் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட விவகாரம் மக்களது போராட்டத்தால் அம்பலமானது. கடந்த ஓரிரு மாதங்களாக நடந்துள்ள இக்கொடூரங்கள் அனைத்தும் கடுமையான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும் நிலைமைகள் மாறிவிடவில்லை என்பதையும், இத்தகைய கொடூரங்களில் ஈடுபடும் கிரிமினல்கள் எவரும் அதற்காக அச்சப்படவில்லை என்பதையும் நிரூபித்துக் காட்டுகின்றன.

பஞ்சாப் போலீஸ்
பாலியல் தொல்லை கொடுத்தவனிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு புகார் கொடுத்த பெண்ணையே தாக்கும் பஞ்சாப் போலீசு.

பஞ்சாபில் தரண்தரண் மாவட்டத்தில், திருமண நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த ஹர்பிந்தர் கவுர் என்ற பெண்ணை, லாரி ஓட்டுநர் ஒருவன் பாலியல் தொல்லை செய்துள்ளான். உடனடியாக அருகிலுள்ள போலீசு நிலையத்துக்குச் சென்று ஹர்பிந்தர் கவுரின் தந்தை காஷ்மீர சிங்கும், அவரது சகோதரரும் உதவி கேட்டுள்ளனர். போலீசார் இது குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரித்துவிட்டு, அவன் கொடுத்த மாமூல் பணத்தை வாங்கிக் கொண்டு உதவி கேட்ட ஹர்பிந்தர் கவுரையும் அவரது தந்தை மற்றும் சகோதரரையும் சரமாரியாக அடித்து நொறுக்கியுள்ளனர். காக்கிச் சீருடை அணிந்த கிரிமினல்கள் நடத்திய இந்தக் கொடூரத்தை நேரில் பார்த்த ஒருவர் தனது கைபேசி காமிராவில் பதிவு செய்து, அதனை ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தினார். இந்த வீடியோ, தொலைக்காட்சிகளிலும் நாளேடுகளிலும் வெளியாகி பரபரப்பானதைத் தொடர்ந்து இத்தாக்குதலை நடத்திய 4 பொறுக்கி போலீசாரும் தற்காலிகப் பணிநீக்கம் செயப்பட்டுள்ளனர். ஆனால், மாவட்டப் போலீசு தலைமைக் கண்காணிப்பாளரோ, அப்பெண்ணின் தந்தை குடித்துவிட்டுத் தகராறு செததாகவும், அதைத் தடுக்க முயற்சித்த போலீசாரை அப்பெண் தடுத்ததால் அடித்ததாகவும் நியாயவாதம் பேசி கிரிமினல் போலீசுக்கு வக்காலத்து வாங்குகிறார். பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்த சட்டத்தை மேலும் கடுமையாக்கி, தண்டனையை அதிகரிப்பதும், போலீசு ரோந்தை விரிவுபடுத்துவதும் வேண்டும் என்று முன்வைக்கப்படும் தீர்வின் அபத்தத்தை இந்த நிகழ்ச்சி நிரூபித்துக் காட்டுகிறது.

உ.பி.யின் டியோரியா பகுதியைச் சேர்ந்த 35 வயதான தாழ்த்தப்பட்ட விவசாயப் பெண், வயல்வெளியில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதோடு, அவரது கழுத்தை நெறித்துக் கொல்லவும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த காமுகர்கள் முயற்சித்துள்ளனர். உள்ளூர் போலீசில் இது பற்றி புகார் கொடுத்த போதிலும் நடவடிக்கை எடுக்காததால், மாவட்டப் போலீசு கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தபோது,  பல குழந்தைகளுக்குத் தாயாகியுள்ள  35 வயதான பெண்ணை எவனும் பாலியல் பலாத்காரம் செவானா என்று கிண்டலடித்து நக்கல் செய்திருக்கிறார், அவர். அருகே இருந்த பத்திரிகையாளர்கள் இந்த வக்கிரத்தை உள்ளூர் நாளேடுகளில் அம்பலப்படுத்தினர். பாலியல் வன்கொடுமை பற்றி புகார் கொடுக்கும் பெண்களிடம் பரிவோடும் ஆறுதலாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று சட்டம் போட்டு உபதேசங்களைச் செய்தாலும், போலீசுத்துறை கடுகளவும் மாறிவிடவில்லை என்பதற்கு இந்நிகழ்ச்சியே சான்று கூறப் போதுமானது.

ஜெசிகா டேவிஸ்
பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்க ஆக்ரா மஹால் விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து படுகாயமடைந்துள்ள ஜெசிகா டேவிஸ் என்ற லண்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி.

ம.பி.யில் சுவிட்சர்லாந்து பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வரோ, ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்தனியாக அரசால் பாதுகாப்பு கொடுக்க இயலாது என்கிறார். அவரது பேச்சை பொன்மொழி போல ஐரோப்பாவின் ஊடகங்கள் விளம்பரப்படுத்துகின்றன. “இந்தியாவுக்குப் போகும் பெண்களுக்குச் சில எச்சரிக்கைகள்” என்று ஐரோப்பிய ஊடகங்களும் அரசும் விளம்பரப்படுத்தும் அளவுக்கு, இந்தியாவின் யோக்கியதை கொடிகட்டிப் பறக்கிறது. பாலியல் வல்லுறவு நோயால் இந்திய ஜனநாயகம் சீக்குப் பிடித்துக் கிடக்கிறது என்று பல நாடுகளும் பரிகசிக்கின்றன. இவ்வளவுக்குப் பின்னரும் பெருகிவரும் இத்தகைய குற்றங்களைத் தடுக்கவும் பெண்ணினத்தின் உரிமைகளையும் சமத்துவத்தையும் நிலைநாட்டவும் உருப்படியாக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.

மாறாக, டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி மாண்டுபோன இளம்பெண்ணுக்கு நிர்பயா (அச்சமற்றவர்) என்று பெயர்சூட்டி, அவருக்கு வீரப்பெண்மணி விருதளித்தும், ரூ. 1000 கோடி முதலீட்டில் நிர்பயா என்ற பெயரில்பெண்களுக்கென தனி வங்கி தொடங்கப்போவதாக அறிவித்தும், பெண்ணினத்தின் மீது அதீத அக்கறை கொண்டுள்ளதைப் போல ஆட்சியாளர்கள் காட்டிக் கொள்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கப் போவதாகக் கூறிக்கொண்டு  கடந்த மார்ச் 19 அன்று புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளனர்.

தொந்தரவு செய்யும் நோக்கில் பெண்களைப் பின்தொடர்வது, பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது, அமிலம் வீசுவது, ஒளிந்திருந்து பெண்களின் மறைவிடங்களைப் படம் பிடிப்பது-பரப்புவது உள்ளிட்ட குற்றங்களுக்குக் கடுமையான  தண்டனைகள், பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகளுக்குக் குறையாமல் தண்டனை – முதலானவை இப்புதிய சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், வர்மா கமிசனும் பல்வேறு மகளிர் அமைப்புகளும் அளித்த முக்கியமான பரிந்துரைகளை முற்றாகப் புறக்கணிக்கத்துவிட்டு, ஆணாதிக்கப் பிற்போக்குத்தனத்தைக் கட்டிக்காக்கும் வகையிலேதான் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“காப்” எனப்படும் சாதியப் பஞ்சாயத்துகள் சட்டவிரோதமானவை என்றும், அவை திருமண உறவு தொடர்பாக எந்த தீர்ப்பும் அளிக்க உரிமை  கிடையாது என்றும் வர்மா கமிசன் பரிந்துரைத்தது. ஆனால், இச்சாதியக் கட்டப்பஞ்சாயத்துகளையும் கௌரவக் கொலைகளையும் தடுத்து நிறுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் இச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவில்லை. வரைமுறையற்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இராணுவப் படையினரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்கும் வகையில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்ற வர்மா கமிசனின் பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் அவள் மீது ஏவப்படும் பாலியல் உறவு முயற்சி அனைத்தும் வல்லுறவுக் குற்றமே என்றும், மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவன் அவள் மீது பாலுறவைத் திணிப்பதும் வல்லுறவுக் குற்றமே என்றும் வர்மா கமிசன் பரிந்துரைத்ததையும் தற்போதைய சட்டம் நிராகரித்துள்ளது.

சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ஆதிக்கத்திலும் உள்ள ஒருவர் பாலியல் குற்றம் செய்தால் அது கொடிய குற்றம் என்று கருதப்படவேண்டும்  என்ற முந்தைய 2010-ஆம் ஆண்டின் உத்தேச மசோதாவின் விதிகளை நீர்த்துப் போக வைத்து, “சமூக, பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தில் உள்ளவர்” என்ற சொல் திட்டமிட்டே இச்சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது. வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகளைத் தேர்தலில் நிற்க அனுமதிக்கக் கூடாது என்ற பரிந்துரையும் ஏற்கப்படவில்லை.

ஒருவர் பாலுறவுக்கு மனப்பூர்வமாக இசைவு தெரிவிக்கும் வயது வரம்பு 16-ஆகத்தான் நீண்டகாலமாக நம் நாட்டில்  இருந்தது. இருப்பினும், ஆணாதிக்கப் பிற்போக்குச் சிந்தனை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிர்ப்பந்தத்தால், அதை 18 வயதாக தற்போதைய குற்றவியல் சட்டத் திருத்த மசோதா(2013)வில் இந்திய அரசு மாற்றியமைத்துள்ளது.

உடல் மற்றும் மன வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு, உலகின் பெரும்பாலான நாடுகளில் பாலுறவுக்கான மனப்பூர்வ ஒப்புதல் அளிக்கும் வயது வரம்பு 16-ஆகத்தான் இருக்கிறது. பாலுறவுக்கான இசைவு வயது 16 என்று தீர்மானித்துள்ள நாடுகள், பாலியல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளதோடு, பள்ளிகளிலும் பாலியல் குறித்த விழிப்புணர்வை அறிமுகப்படுத்துகின்றன. ஆனால், நம் நாட்டில் சாதிய- மதவாத அமைப்புகள்  குழந்தைத் திருமணங்களை ஆதரித்துக் கொண்டே, பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயதை 16-ஆக இருப்பதையும் எதிர்க்கின்றன. தங்களது குடும்பம் மற்றும் சாதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் வேற்று சாதி இளைஞனைக் காதலிப்பதையும் திருமணம் செய்வதையும் தடுத்து தண்டிக்கும் நோக்கத்துடன்தான் ஆணாதிக்கப் பிற்போக்குவாதிகள் பாலியல் உறவுக்கான இசைவு தெரிவிக்கும் வயதை 18-ஆக உயர்த்த வேண்டுமென்கின்றனர். இதன் மூலம் பெருகிவரும் பாலியல் வன்முறைகளைத் தடுக்கப் போவதாக அரசு கூறிக் கொண்டாலும், காதலர்களை மிரட்டிப் பணம் பறிப்பதற்கான வாய்ப்பையும் அதிகாரத்தையும்தான் இது போலீசுக்கு வழங்கியுள்ளது.

கடந்த  பிப்ரவரி 6-ஆம் தேதியன்று, டெல்லி சிறீராம் வணிகவியல் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவுக்கு வந்த இந்துவெறி பயங்கரவாத மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரி வாயிலில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்குவந்த இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங்தள குண்டர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கி, மாணவிகளின் ஆடைகளைக் கிழித்தும், மார்பகங்களைப் பிடித்து இழுத்தும் அவமானப்படுத்தினர். நூற்றுக்கணக்கில் போலீசு நிறுத்தப்பட்டிருந்தபோதிலும், இக்குண்டர்களைத் தடுக்கவோ, கைது செய்யவோ முன்வரவில்லை. பட்டப்பகலில் நடக்கும் ஒரு பாலியல் தாக்குதலைக்கூட தடுக்க முன்வராத இத்தகைய போலீசிடம்தான், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டத்தை அமலாக்கவும் அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஆணாதிக்கத் திமிர்த்தனத்தில் ஊறிப்போயுள்ள நீதித்துறையிடம்தான் பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எவ்வாறு தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கவில்லையோ, அதுபோலவே இப்புதிய சட்டமும் பெண்கள் மீதான வன்கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் ஒழித்துவிடாது என்பதையே இவையனைத்தும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.

– பாலன்.

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

காங்கிரஸ் வாலா, தாமரை வாலா, போயஸ் வாலா -பாடல்

2

ஹவாலா ஊழல்டிகர்கள் மட்டும்தான் மாறுகிறார்கள். மேடையும் மாறுவதில்லை, பாத்திரங்களும் மாறுவதில்லை. 1990களில் ஹவாலா ஊழல் வெளிவந்த சமயத்தில் இயற்றி வெளியிடப்பட்ட பாடல் இது. இந்த பாடல் வரிகளில் ‘ஹவாலா ஊழல்’ என்பதற்கு பதில் ‘2G ஊழல்’ என்றும் ‘நரசிம்ம ராவு’ என்பதற்கு பதில் ‘மன்மோகன் சிங்கு’ என்றும் ‘ஜெயின்’ என்பதற்கு பதில் ‘நீரா ராடியா’ என்றும் மாற்றிக் கொண்டால் இன்றைய சூழலுக்கு அப்படியே பொருந்துகிறது.

ராஜீவ் காந்தி – வி.பி. சிங், நரசிம்ம ராவ் – அத்வானி, மன்மோகன் சிங் – சுப்ரமணிசாமி என்று இவர்கள் மேடையில் ஒருவரை ஒருவர் அடித்து மக்களுக்கு சிரிப்பு மூட்டிக் கொண்டிருக்க, திரைக்குப் பின்னால் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு ஆ. ராசா சிறைக்குப் போவதோ அல்லது ஒரு ப. சிதம்பரம் மீது வழக்கு தொடரப்படுவதோ கோமாளிகள் செய்து காட்டும் குட்டிகரணங்கள் போன்றவைதான். அதனால் எதுவும் மாறி விடப்போவதில்லை.

இனி பாடலைக் கேளுங்கள்!

==============

வாலா! ‘இது வரலாறு காணாத ஊழல்’ என்று எழுதுகிறார்கள் பத்திரிகைகள். இதில் ஆச்சரியம் இல்லை. முந்திரா ஊழல் முதல் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வரை ஒவ்வொரு முறை புதிய ஊழல் அம்பலமாகும் போதும் இவர்கள் இப்படித்தான் எழுதுகிறார்கள்.

ஹவாலா ஊழலில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட் ஒரு உண்மையைச் சொன்னார். ‘தேசத் தந்தை மகாத்மா காந்தியே பஜாஜ் என்னும் தரகு முதலாளியிடம் காசு வாங்கியவர்தான். அப்படியிருக்க எங்களை மட்டும் ஏன் ஏசுகிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை, சொல்லவும் முடியாது. ஏனென்றால் ஊழலில்தான் உயிர் வாழ்கிறது இந்த நாடாளுமன்றம்.

இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் முதலாளித்துவம் ஆட்சி செய்யும் நாடுகளில் இதுதான் உண்மை. தங்களுக்குள், தீவிரமான கொள்கை வேறுபாடுகள் இருப்பது போல நடிக்கின்ற ஓட்டுக் கட்சிகளிடையே ஒரு ஒருமைப்பாடு இருக்கிறது.  அதுதான் ஊழல்!

ரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மத்ராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…

கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…

அர்ஜூன்சிங்கும், என்.டி.திவாரியும் வந்தான் ராவுக்கு சவாலா …
கோரஸ் : வந்தான் ராவுக்கு சவாலா
அத அடக்க வேற வழியில்லேன்னு அவுத்து விட்டான் ஹவாலா…
கோரஸ்
: அவுத்து விட்டான் ஹவாலா
இப்ப நீயும் திருடன்… நானும் திருடன்னு ராவு பாடுறான் லல்லாலா…

கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…

அஞ்சு காசு கூட வாங்கலண்ணு அடிச்சி பேசுனான் ரொம்ப தில்லா…
கோரஸ் : அடிச்சி பேசுனான் ரொம்ப தில்லா…
அந்த அத்வானி வாங்குன காசுக்கு ஜெயினு எடுத்து வுட்டான் பில்லு பில்லா…
கோரஸ் : எடுத்து வுட்டான் பில்லு பில்லா…
அட ராமா…இவன் ராமராஜ்ஜிய கனவு எல்லாம் நொறுங்கிப் போச்சு சில்லு சில்லா…

கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…

வசனம் : வாங்கினவன் 115 பேர் அதில் சிக்குனவன் 67 பேர்
பொம்பள ஒரு பொம்பள – நம்பர் ஒம்பது மட்டும் சிக்கல…
சி.பி.ஐ. இவள சுத்தல – கேசு செத்தவன் கையில வெத்தல…

கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…

அந்துலே, முந்திரா, தர்மதேஜா…ஆவியா சுத்துறான் நகர்வாலா…
கோரஸ்
: ஆவியா சுத்துறான் நகர்வாலா…
அந்த இந்திரா மவனும் ஹவாலா – காச திங்கிறா சோனியா குசாலா…
கோரஸ் : திங்கிறா சோனியா குசாலா…
நேரு மாமா… இந்த மாமன் பரம்பர வறண்டி வறண்டி தேசம் போச்சு திவாலா

கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…

வசனம் : ஹவாலா.. ஊழல் 60 ஆயிரம் கோடி, அதில் அகப்பட்டது 65 கோடி…
சிக்கல மிச்சம் சிக்கல – அந்த பட்டியல் ஏண்டா சிக்கல
அமெரிக்க கம்பெனி யாரு அம்பானி டாடா பிர்லா யாரு
அவன்தாண்டா ஆணிவேரு ஜெயினு வெறும் புரோக்கரு…

நொங்கத் தின்னவனை வுட்டுட்டான் – அத
நோண்டி தின்னவன் சிக்கிட்டான்

கோரஸ் :
நரசிம்ம ராவு தில்லி வாலா…அத்வானிஜி சிந்தி வாலா…
புரட்சித் தலைவி மதராஸ் வாலா… போடு வந்தேமாதரம் எல்லாம் ஹவாலா…

____________________

க்கள் கலை இலக்கிய கழகத்தின் “ஓட்டு போடாதே, புரட்சி செய்” எனும் பாடல் ஒலிக்குறுந்தகடில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கிறது. ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி: 044-23718706
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

___________

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

_____________________________________

நீதியற்ற மோடியின் குஜராத்தில் ஒரு குடும்பமே தற்கொலை!

20

மிழ்நாட்டில ஜனநாயகமே இல்லை. சாதாரண மக்களுக்கு எந்த நாதியும் இல்லை. இந்த லோக்கல் கட்சிகளை எல்லாம் ஒழிச்சாத்தான் நமக்கு விமோச்சனம். காங்கிரஸ் ஊழலின் உருவம். தேசியக் கட்சியான, தேச பக்த கட்சியான பாரதீய ஜனதா கட்சியை, குஜராத்தில் முன்னுதாரண ஆட்சி நடத்திக் காட்டியிருக்கும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியில அமர்த்தினாத்தான் நாடு உருப்படும்.” இது நரேந்திர மோடி ரசிகர்களின் அங்கலாய்ப்பு.

குஜராத்தில் என்ன நிலைமை என்று பார்ப்போம்.

35 ஆண்டுகளாக ஒரு ஏழைக் குடும்பம் வசித்து வந்த இடத்தை பிடுங்குவதற்காக மேட்டுக்குடி வர்க்கத்தினரும், உள்ளூர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், நீதிமன்றமும் சேர்ந்து நடத்திய அராஜகங்களை பின் வரும் கட்டுரை விவரிக்கிறது.

காங்கிரஸ் ஆண்டாலும் சரி, பா.ஜ.க. ஆண்டாலும் சரி, மாநிலத்தில் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ எந்த ஓட்டுப் பொறுக்கி கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி இன்றைய போலி ஜனநாயக அரசமைப்பில் ஏழை, எளிய மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக்க வழியில்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

35 ஆண்டு காலமாக வாழ்ந்த இருப்பிடம் அநியாயமாக பிடுங்கப்பட்ட அநீதியை எதிர்த்து ஒரு குடும்பமே கூட்டாக தற்கொலை செய்து கொண்டுள்ளது. மனதை நொறுக்கும் இந்த தற்கொலை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கோட்டில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நடந்தது.

நேபாளத்தை சேர்ந்த மான்சிங் என்பவர் ராஜ்கோட்டிலுள்ள ரையாதர் பகுதியில் உள்ள சோட்டுநகர் கூட்டுறவு வீட்டு வசதி குடியிருப்பில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தவர். தங்கியிருந்து வேலை பார்ப்பதற்காக, குடியிருப்பு சங்கத்தினால் அவருக்கு 1978 ஆம் ஆண்டு 900 சதுரஅடி இடம் வழங்கப்பட்டுள்ளது. மான்சிங் அந்த இடத்தில் சிறிய வீடு கட்டிக்கொண்டு தன் குடும்பத்தாருடன் 35 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.

6 வருடங்களுக்கு முன் மான்சிங் காலமானார். அதற்கு பிறகு அங்கு தொடர்ந்து வசித்துவந்த குடும்பத்தினரை வீட்டை விட்டு உடனே காலி செய்யவேண்டும் என்று சோட்டுநகர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் உத்தரவிட்டது; அதை ஏற்றுக் கொள்ளாத மான் சிங் குடும்பத்தினருக்கு மின்சார இணைப்பை வெட்டுவது, தண்ணீர் தர மறுப்பது என்று பல தொல்லைகளை அளித்திருக்கின்றனர்.

2012 மே மாதம் சோட்டுநகர் வீட்டு வசதி சங்கம், மான்சிங் குடும்பம் ஒதுக்கப்பட்ட இடத்தைவிட அதிக அளவு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக ராஜ்கோட் நகராட்சிக்கு பொய் புகார் அனுப்பியது. நகரட்சி மான் சிங் குடும்பத்துக்கு இடத்தை விட்டு வெளியேறக்கோரி நோட்டீஸ் அனுப்பியது.

மான்சிங் குடும்பத்தினர் இடத்தை விட்டு உடனே வெளியேறவில்லை என்றால், அவர்களது வீடு ஏழு நாட்களுக்குள் தரைமட்டமாக்கப்படும் என்று மேலும் ஒரு நோட்டீஸில் ஆகஸ்ட் மாதம் பீதியூட்டப்பட்டது. ‘1978-ல் மான் சிங்கிற்கு வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் வழங்கி கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் வசித்து வரும் இடம் தங்களுக்கே உரிமையானது’ என்று மான்சிங்கின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

self-immolation-2ஏப்ரல் 2 ஆம் தேதி நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. அதை அறிந்த குடும்பத்தினர், இதற்கு மேலும் வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது என்ற விரக்தியோடு ராஜ்கோட் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணைய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டனர்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மான் சிங்கின் மகன் பரத் (40), அவரது மனைவி ஆஷா (35), மான் சிங்கின் இளைய மகன் கிரீஷ் (27) ஆகிய மூவரும் சம்பவத்தன்றே உயிரிழந்தனர். மான்சிங்கின் மனைவி வசுமதி (60), மகன் மகேந்திராவின் மனைவி ரேகா (35) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களுக்குப் பிறகு இறந்து விட்டனர்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய கிரீஷின் மனைவி கௌரி, ‘வீட்டு வசதி சங்கத்தினரும் அப்பகுதியில் செல்வாக்கு பெற்ற அரசியல்வாதிகளும், மான் சிங்கின் குடும்பத்தை தொல்லைகளுக்கும், வேதனைக்கும் தொடர்ச்சியாக ஆளாக்கி வந்தனர்’ என்றும். ‘குடியிருக்கும் இடத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால், வேறு வழியின்றி உயிரை விடத் துணிந்தோம்’ என்று கூறினார்.

இந்த குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு வீட்டு வசதி சங்கத்துடன் சேர்ந்து தொல்லை தந்த ஆளும் பி.ஜே.பி. கட்சி பிரமுகர்கள், தற்கொலை சாவுகளுக்கு பிறகு முதலை கண்ணீர் விட்டு, மாநகராட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பொய் வேடமிட்டு வருகின்றனர். கிரீஷின் மரண வாக்குமூலத்தில் அவரது குடும்பத்தை, பி.ஜே.பி. கவுன்சிலர்கள் ராஜ்பா ஜாலாவும், கமலேஷ் மிரானியும் சோட்டு நகர் கூட்டுறவு வீட்டு வாரிய சங்க உறுப்பினர்களுடன் சேர்ந்து மிரட்டியதாக கூறியுள்ளார்.

தீக்குளிப்புகாங்கிரஸ் கட்சி எம்.பி.யும், தேசிய மனித உரிமை கமிஷன் உறுப்பினருமான ராஜு பர்மர், மான் சிங் குடும்பத்தினருக்கு, நஷ்டஈடு தந்து அனுதாபங்கள் தெரிவிக்க சென்றிருக்கிறார். இறந்துபோன பரத்தின் மூத்த மகள் மது அவர் கொடுக்க வந்த காசோலையை ஏற்க மறுத்து, “எங்களுக்கு முன்பே உதவ ஏன் முன்வரவில்லை?” என்று விரட்டியிருக்கிறார். போலீசையும், மாநகராட்சியையும் பலமுறை அணுகியும் யாரும் உதவவில்லை என்றும், தந்தையும், தாயும், உறவினர்களும் நெருப்பில் எரியும் போதும் அவர்களை காப்பாற்ற ஒருவர் கூட வரவில்லை என்றும் புலம்பி அழுது இருக்கிறாள் அந்தப் பெண்.

‘சோட்டு நகர் கூட்டுறவு குடியிருப்பு சங்கத்தினர், அவர்கள் வீட்டிற்கு வரும் மின்சாரத்தை தடை செய்து, குழந்தைகள் தெரு விளக்கின் ஒளியில் படிக்க வேண்டியது ஏற்பட்டது’ என்றும், ‘தண்ணீர் வருவதை தடுத்து நிறுத்தினர்’ என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ராம் சிங் குடும்பத்தினர் நியாயம் கிடைக்கும் வரையில் இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்துள்ளனர். அவர்களுக்கு நீதிகிடைக்க உதவுவதாக அதிகாரிகள் வாக்குறுதி வழங்கிய பின்னரே சடலங்களை பெற்று சென்றுள்ளனர்.

வழக்கம் போல போலீஸார் குற்றச்சாட்டுகள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குற்றவாளிகளை கைவசம் வைத்துகொண்டே, குடும்பத்தினரை இந்நிலைக்கு ஆளாக்கிய அயோக்கியர்களை பிடித்தே தீருவோம் என்று முழங்கிவருகிறார் ராஜ்கோட் போலீஸ் கமிஷனர் பி. சிங். குடியிருப்பில் வசிக்கும் துஷ்யந்த் தனக், ஹரேஷ் வஜா, மற்றும் ஜெயந்தி டோலாக்கியா ஆகிய மூவரை பெயருக்கு கைது செய்துள்ளனர்.

சோட்டுநகர் போன்ற குடியிருப்புகள் பணம் சேர்க்க முடிகின்ற நடுத்தர வர்க்கத்தினரை தனித் தீவுகளாக வாழ வைப்பதற்காக அமைக்கப்பட்டவை. மான் சிங்கின் மறைவிற்கு பின், அவருடைய செக்யூரிட்டி வேலையை அவர் குடும்பத்தினர் யாரும் செய்யவில்லை எனினும் அவரது குடும்பத்தினர் அந்த பகுதியின் அங்கத்தினராகவே வாழ்ந்து வந்துள்ளனர். பணக்காரர்கள் வாழும் இடத்தில் அவர்கள் குடியிருப்பதை கூட்டுறவு குடியிருப்பு சங்கத்தினாலும், பிற குடியிருப்பவர்களாலும் ஏற்க முடியவில்லை. அவர்களை வெளியேற்றும் நோக்கில் அந்தப் பகுதியில் செல்வாக்கு பெற்ற அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இறுதியாக சட்டரீதியாக தாக்குதல் நடத்தி வெளியேற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

பணம் படைத்தவர்களுக்குத்தான் வாழும் உரிமை என்ற இந்த சமூக அமைப்பில் உழைத்து வாழும் ஏழைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. மோடியின் குஜராத் இதற்கு விதிவிலக்கு அல்ல.

மேலும் படிக்க
Fearing eviction, 5 of family set selves afire
Family self-immolation: Family agree to take bodies for cremation
NHRC member visits grieving family in Rajkot with aid

கருப்பியைக் கொன்ற போலிஸ் நாய்கள்: சிரமப்பட்டு வந்த நீதி!

1

கொட்டடிக் கொலைகள் சாதாரணமாக நடக்கும் தமிழகத்தில், 10 வருடங்களுக்கு முன் பாசிச ஜெயாவின் ஆட்சியில், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு பெண், போலீஸாரால் லாக்கப்பில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி வன்கொடுமைகளை கட்டவிழ்க்கும் அரசு மற்றும் ஆதிக்க சாதியினர் சார்பில் ஏவல் செய்வது போலீஸ் துறையின் இன்றியமையாத கடமைகளில் ஒன்று. தங்களிடம் சிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி ரீதியான அடக்கு முறையையும், தாக்குதலையும், போலீஸ்காரர்கள் செலுத்தாமல் விடுவதில்லை என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.

‘தி இந்து’ நாளேட்டில் வெளியான முன்னாள் தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷனின் தலைவர் டாக்டர். வசந்தி தேவியின் கட்டுரையை தழுவி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கொட்டடி கொலைகள்
கொட்டடி கொலைகள் – மிக மோசமான மனித விரோதச் செயல். (படம் உதவி : தி ஹிந்து)

48 வயது நிரம்பிய கருப்பி பரமக்குடியை சேர்ந்தவர். அருந்ததியர் சமூகப் பெண்ணான அவர் வீட்டு வேலைகள் செய்து பிழைத்து வந்தார். 2002 ஆம் ஆண்டு, பணியிடத்தில் தங்கச் சங்கிலியை திருடியதாக வீட்டு உரிமையாளர்களால் பழி சுமத்தப்பட்டு, போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.

காவல் நிலையத்தில் கருப்பி ஆறு நாட்கள் போலீஸாரால் சித்திரவதைக்கு ஆளானார். இறுதியில் அவரது உயிரற்ற சடலம், டிசம்பர் 1 2002 அன்று காவல் நிலையத்தின் பிற்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தது. நடந்தது தற்கொலை என்று போலீஸ் வழக்கு பதிவு செய்தது.

காவலில் இருக்கும் ஒருவர் தப்பித்து சென்று தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் சொல்லும் கதை நடைமுறையில் சாத்தியமற்றது என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. சம்பந்தப்பட்ட சாட்சிகளை போலீஸார் அச்சுறுத்துவதாக தெரிவித்து, இவ்வழக்கில் தலையிடுமாறு தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷனுக்கு பரிந்துரை செய்தன.

அப்போது கமிஷனில் தலைமை பதவியில் இருந்த வசந்தி தேவி இவ்வழக்கை விசாரித்தார். முதலில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் தொடர்பு கொண்டு, கருப்பியின் குடும்பத்தாரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டார்.

சம்பவம் நடந்த காவல் நிலையத்தை பார்வையிட்டவருக்கு, கருப்பியால் தப்பித்துச் சென்று தற்கொலை செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பது தெளிவாகியது. கருப்பியின் குடும்பத்தாரிடம் நடந்த விசாரணையில் அவர்கள் எல்லாரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதும் விளங்கியது.

அவர்களது வாக்குமூலங்கள், ‘கருப்பி திருடியதால் ஏற்பட்ட அவமானம் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாள்’ என்ற போலீஸின் கதையை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்தன. இக்கொலைக்கு போலீஸ் எந்த விதத்திலும் பொறுப்பில்லை என்று அவர்கள் உறுதியாக பதிவு செய்துள்ளனர்.

பயத்தால் தான் இவ்வாறு பேசுகிறார்கள் என்று உணர்ந்த வசந்தி தேவி, தன்னை நம்பி உண்மையை வெளியிடலாம் என்று கூறியும், அவர்களது பயம் குறையவில்லை. நடந்தது என்ன என்பதை இனியும் அறிய முடியாது என்று நம்பிக்கை இழந்து அங்கிருந்து புறப்பட இருந்த வசந்தி தேவிக்கு இறுதியில் திருப்பு முனையாக ஒரு ஆதாரம் கிடைத்தது.

கருப்பியின் நாத்தனார் கணவரான கிறிஸ்து தாஸ் என்பவர் இம்மரணத்தின் காரணத்தை மூடிமறைத்து இருந்த இரகசியத் திரையை விலக்கினார். “அம்மா என்னையும் என் பிள்ளைகளையும் தயவு புரிந்து காப்பாத்துங்க, நாங்க பெரிய ஆபத்திலே மாட்டியிருக்கோம்” என்று கூறி வசந்தி தேவியின் காலில் விழுந்து கதறியிருக்கிறார் கிறிஸ்து தாஸ். ‘உண்மையை நான் சொல்லியே ஆகணும், இல்லேனா ஈமத்தீயிலே என் நெஞ்சு வேகாது’ என்று சொல்லி நடந்ததை கூறியிருக்கிறார்.

நவம்பர் 26, 2002 அன்று இரவு கிறிஸ்து தாஸையும் அவருடைய மனைவியையும், கருப்பியின் மகள் மற்றும் மருமகன் ஆறுமுகத்தையும் பரமக்குடி போலீஸார் காவல் நிலையத்திற்கு இழுத்து வந்துள்ளனர். சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த கருப்பி திருடியதாக போலீஸார் அவர்களிடம் சொல்லியிருக்கின்றனர. அதன் பிறகு கிறிஸ்து தாஸின் ஆடைகளைக் களைந்து, கைகளில் விலங்கிட்டு, கால்களை மேசையில் கட்டி வைத்து விடியும்வரை உடல் ரீதியான தாக்குதல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாக்கியுள்ளனர்.

செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கத்தான், கருப்பியின் உறவினர்களை பிடித்துவந்து, அவளுடைய கண்முன்னரே போலீஸார் அடித்துள்ளனர் என்பதை உணர்ந்தார் கிறிஸ்து தாஸ்.

மூன்று நாட்களும், கருப்பியை நான்கு போலீஸார், மிருகத்தனமாக சித்திரவதை செய்துள்ளனர். லத்தியால் அடித்தும், விரல் நகங்களில் ஊசியால் துளைத்தும் துன்புறுத்தியுள்ளனர். தான் அப்பாவி என்று மன்றாடிய அப்பெண்ணின் கதறல்களுக்கு செவிசாய்க்காமல், பரிந்து பேச முயற்சித்த கிறிஸ்து தாஸையும் புடைத்து எடுத்துள்ளனர்.

மூன்று நாட்கள் கழித்து கிறிஸ்து தாஸ் குடும்பத்தை போலீஸார் விடுவித்தனர்.

டிசம்பர் 1 2002 அன்று, இறந்த பெண் ஒருவரின் உடல் காவல் நிலையத்தின் பின் கிடைத்துள்ளது என்றும், மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு கொள்வதற்கான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும் கேள்விப்பட்ட கிறிஸ்து தாஸ் அங்கு சென்றுள்ளார். அங்கு அவர் கருப்பியை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது.

வசந்தி தேவியின் விசாரணை துவங்குவதற்கு முன்பே, போலீஸார் கருப்பியின் குடும்பத்தை தொடர்ந்து மிரட்டி வந்தனர் என்ற உண்மையையும் கூறினார் கிறிஸ்து தாஸ்.

விவரங்களுடன் சென்னைக்கு திரும்பிய வசந்தி தேவி கருப்பி வழக்கின் முக்கிய ஆவணங்களான, பிரேத பரிசோதனை அறிக்கை, முதல் தகவல் அறிக்கை, ராமநாதபுரம் கலெக்டரின் மரண விசாரணை அறிக்கை இவற்றை சேகரித்தார். சம்பவத்திற்கு பிறகு நடந்த சப் கலெக்டர் விசாரணையில், ஐந்து போலீஸ் அதிகாரிகளும், ஒரு இன்ஸ்பெக்டரும் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அவருக்கு தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை, ராமநாதபுரம் கலெக்டரின் மரண விசாரணை அறிக்கை ஆகிய ஆவணங்களை சென்னை அரசு மருத்துவமனையின் மருத்துவ தடயவியல் துறை தலைவரின் கருத்துக்காக அனுப்பி வைத்தார்.

தடயவியல் துறைத் தலைவர் கீழ்க்காணும் முக்கிய குறிப்புகளை அனுப்பினார்.

  • மூச்சுத்திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளது.
  • உடல் முழுவதும் பல இடங்களில் கன்றிப்போன காயங்கள் உள்ளன.
  • இறப்பதற்கு 1-3 நாட்கள் முன்பு வரை கூர்மையற்ற ஆயுதத்தின் மூலம் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறார்.
  • இடது மற்றும் வலது பக்கங்களிலிருந்து தாக்குதல்கள் நடந்துள்ளன.
  • வலது நெற்றியில் உள்ள உறைந்துப்போன காயம் தான் அவர் தூக்கில் தொங்குவதற்கு முன்னதாக ஏற்பட்டுள்ள கடைசி காயமாகும்.

கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு இவ்வழக்கை சி.பி.ஐ. அல்லது மாநில கிரைம் பிரான்ச் மூலமாக, விசாரிக்கக் கோரி உள்துறை செயலாளருக்கும் தலைமை செயலருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். கடிதங்களுக்கும் நினைவூட்டல்களுக்கும் அரசாங்கத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷன் சட்டப்படியான அதிகாரங்கள் இல்லாத அமைப்பாக இருந்ததால் வழக்கின் சாட்சிகளை அழைத்து விசாரிக்கும் உரிமை அதற்கு கிடையாது. ஆகவே, வசந்தி தேவி, தேசிய பெண்கள் கமிஷன் தலைவராக இருந்த பூர்ணிமா அத்வானியை தொடர்பு கொண்டார். தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷன்கள் சேர்ந்து, அக்டோபர் 28 2003 அன்று கூட்டு பொது விசாரணையை மதுரையில் நடத்தினர்.

விசாரணைக்கு கருப்பியின் உறவினர்களும், பல சாட்சிகளும் பரமக்குடி சப்-கலெக்டரும், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களும் அழைக்கப்பட்டனர். கருப்பி, உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாகித்தான் இறந்திருக்கிறார் என்பது மேலும் தெளிவானது. நடந்து தற்கொலை அல்ல போலீஸாரால் நடத்தப்பட்ட கொலை என்பது உறுதியாகியது.

கொலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும், கருப்பியின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ 2 லட்சமும், கொடுமைகளுக்கு ஆளான ஆறுமுகம் மற்றும் கிறிஸ்து தாஸ் குடும்பத்தினருக்கு தலா ரூ 1 லட்சமும், நஷ்ட ஈடு தொகையாக வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், வசந்தி தேவியின் பணிக்காலம் முடிவடைந்த மார்ச் 2005 வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2006 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் அப்போது மாநில மகளிர் ஆணையத்தின் வழக்கறிஞருமான சுதா ராமலிங்கம் இவ்வழக்கை பரமக்குடி காவல் நிலைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து சி.பி.ஐ பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனுவினை நீதிபதி கே.என்.பாஷா விசாரித்தார். “பாதிக்கப்பட்ட பெண், போலீஸாரால் மனிதத் தன்மையற்ற விதத்தில் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை ஆதாரங்கள் நிரூபிக்கின்றன என்றும் போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிகளாக சம்பந்தப்பட்டிருப்பதால் இவ்வழக்கின் புலனாய்வை தன்னிச்சையான அமைப்பு ஒன்று செய்யவேண்டும்” என்று தீர்ப்பு வழங்கினார்.

5 வருடங்களுக்கு பிறகு, சென்ற பிப்ரவரி 14ம் தேதி அமர்வு நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. சதாசிவம் கருப்பியை கொன்ற எட்டு போலீஸ்காரர்களில் 5 பேருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு தண்டனையும் இன்னும் ஒருவருக்கு 3 வருட சிறை தண்டனையும் வழங்கியுள்ளார்.

லாக்கப் கொலையை தற்கொலை என்று சித்தரித்து கருப்பியின் உடலை மின் கம்பத்தில் தூக்கிலிட்ட காவல் நிலையத்துக்கு பொறுப்பாக இருந்த இன்ஸ்பெக்டர் சாஹில் ஹமீதுக்கு ரூ 1 லட்சம் ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.

சட்டத்தின் காவலர்களான போலீஸ்காரர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த ஆதரவுமற்ற ஒரு பெண்ணை படுகொலை செய்திருக்கின்றனர். அவரது குடும்பத்தையும் சித்திரவதை செய்திருக்கின்றனர். அந்த குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனைகளும் அபராதமும் மட்டும் விதிக்கப்பட்டுள்ளன. இதுதான் நமது நீதி நிர்வாக அமைப்பின் லட்சணம்.

மேலும் படிக்க
The rugged road to justice

தூக்குத் தண்டனையும் தினமணியின் கொலவெறியும் !

6

ருணை மனுவை நிராகரிப்பதில் குடியரசுத் தலைவர் காலதாமதமாக நடந்து கொண்டார் என்பதால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பஞ்சாபின் தேவேந்திரபால் புல்லர் தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து தினமணி இன்று ஒரு தலையங்கம் (சர்ச்சையில் நியாயமில்லை) எழுதியிருக்கிறது.

தேவேந்திரபால் சிங் புல்லர்
தேவேந்திரபால் சிங் புல்லர்

தலைப்பைப் பார்த்தால் கொஞ்சம் பவ்யமாகத் தெரியும். ஆனாலும் சோழியன் குடுமி சும்மா ஆடுமா, வைத்தி மாமாவின் பேனா விசம் கக்காமல் இருக்குமா?

உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது குறித்தும், பொதுவில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரியும் நாடெங்கும் நடக்கும் விவாதம் தினமணியின் தூக்கத்தைக் கெடுத்திருக்கும் அதே நேரம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வைத்தியின் மனதை கள்வெறியுடன் ஆடவைத்திருக்கிறது.

சில்லறைத் தகராறு கொலை வழக்குகளோடு தடா, தீவிரவாத வழக்குகளின் தூக்குத் தண்டனைகளை ஒப்பிடக்கூடாது, குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் அறிவுரை கூறக்கூடாது, மீண்டும் பரிசீலிக்குமாறு கேட்க முடியாது, காலதாமதத்தைக் காட்டி தண்டனையைக் குறைக்க முடியாது, என்று தீர்ப்பின் வைர வரிகளை மேற்கோளிடும் வைத்தி, தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் ஏனைய கைதிகளுக்குமான தீர்ப்பு இது; ஒற்றை வரிகளில் ஒவ்வொரு வாதத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ள தீர்ப்பும் இதுதான் என்று உச்சிமோருகிறார்.

தமிழக மூவர் மற்றும் சந்தன வீரப்பன் வழக்கிலுள்ள அப்பாவிகள் உட்பட அனைத்து கைதிகளையும் தூக்கில் போடவேண்டியதுதான் என்று நேரடியாக சந்தோஷப்படமால் தீர்ப்பின் வழியாக சட்டப்படியே மகிழ்ச்சியடைகிறார் வைத்தி. அதாவது இதற்காக யாராவது தினமணியை விமரிசித்திருந்தால் அது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும், ஜாக்கிரதை!

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

குடி அரசை கொலை அரசாக மாற்றிவரும் காங்கிரசு அரசு மற்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் காலத்தில் தினமும் மந்திரம் சொல்வது போல கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு ஏராளமான பேர் தூக்குத்தண்டனைக்கு காத்திருக்கும் நிலையை வைத்தி தீபாவளி போல கொண்டாடுகிறார். அதனால் ஜனாதிபதிகள் மீது வைக்கும் விமரிசனத்தை கொண்டு பொங்கி எழுகிறார்.

கருணை மனுவை கால தாமதாக தள்ளுபடி செய்வதில் குடியரசுத் தலைவர்களுக்கு உள்நோக்கம் இருப்பதாக கூறுவது அபாண்டம், குடியரசுத் தலைவர் பதவி மீதுதான் அரசியல் சாயம் பூசப்படாமல் இருக்கிறது, அதன் மீது சேற்றை வாரி இறைக்க கூடாது என்று பாடம் எடுக்கிறார் வைத்தி.

இந்திரா காந்தி காலம் தொட்டு சோனியா காலம் வரை இடையில் வாஜ்பாயி காலம் உள்ளிட்டு இருந்த குடியரசுத் தலைவர்களெல்லாம் சொக்கத் தங்கமாம். அரசியல் செய்யாத அரிய மாணிக்கங்களாம். இதைக் கேட்டால் பிரியங்கா குழந்தை கூட விழுந்து விழுந்து சிரிக்கும். தங்களது குடும்பத்திற்கு இத்தகைய ரப்பர் ஸ்டாம்ப் அடிமைகள் செய்த சேவைகள் அந்தக் குழந்தைக்குத் தெரியாதா என்ன?

வைத்தி மாமா இன்னும் கொஞ்சம் கூரிய பார்வையுடன் குடியரசுத் தலைவர்களின் யோக்கியதைக்கு சான்று தருகிறார். அதாவது தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிதான் கருணை மனுக்களை விரைந்து முடிவெடுத்தார். அவருக்கு முந்தைய தலைவர்கள் கிடப்பில் போட்டனர். ஏன்? அப்படியாவது அந்த கைதிகளுக்கு வாழ்நாள் கொஞ்சம் நீடிக்கட்டுமே என்ற நப்பாசைதானாம். அப்படி நீட்டி விட்டு இறுதியில் தூக்கு என்று முடிவெடுத்தால் அந்த நீட்டப்பட்ட நாட்கள் இலாபம்தானே என்று பச்சையாக பாயிண்டை முன்வைக்கிறார் வைத்தி. அதாவது வெட்டப்படும் ஆட்டிற்கு தழை வைத்து மஞ்சள் தண்ணி தெளித்தால் அந்த அளவிற்காவது ஆடு ஃபிரஷ்ஷாக இருக்குமே, அது இலாபமில்லையா என்கிறார். தேர்ந்த பாசிஸ்டுகள் கூட இப்படி வக்கணையாக யோசிக்க மாட்டார்கள்.

கருணை அரசியலாக்கப்பட்டு விடுமோ என்றுதான் பல தருணங்களில் மேற்கண்ட குடியரசுத் தலைவர்கள் கருணை மனுக்களை நிராகரிக்காமல் காலதாமதமே மேல் என்று நினைத்தார்களாம். அப்படி கருணை உள்ளம் கொண்டு யோசித்தவர்களைத்தான் நாமெல்லாம் நாக்கில் நரம்பே இல்லாமல் விமரிசிக்கிறோமாம்.

சரி, வைத்தி மாமாவின் பார்வையையே எடுத்துக் கொள்வோம்? அப்சல் குருவின் கருணை மனு தாமதத்திற்கு காரணம் காஷ்மீரில் மீண்டும் ஒரு தலைவலியை வரவழைத்துக் கொள்ள வேண்டாம் என்று ஆளும் வர்க்கம் கருதியதே. பின்னர் காஷ்மீரை விட ‘இந்துக்களின்’ ஓட்டு அதிகம் என்பதால் பாஜகவிற்கு போட்டியாக அப்சல் குருவை கொன்றார்கள். மூவர் தூக்கைப் பொறுத்தவரை தமிழகத்தில் நடந்த போர்க்குணமிக்க போராட்டங்களே இத்தனை ஆண்டு தாமதத்தை சாதித்தது. தற்போது அப்சல், கசாப் வழியில் வேறு வழியின்றி மூவர் தூக்கு கருணை மனுவை தள்ளுபடி செய்வதாக ஒரு கணக்கு காண்பித்து பிரணாப் முகர்ஜியை செயல்பட வைத்தது காங்கிரசு அரசின் முடிவு.

இந்த முடிவால் தமிழகத்தில் காங்கிரசு சுத்தமாக துடைத்தெரியப்படும் என்று தெரிந்தும் சோனியாவிற்காகவோ இல்லை இலங்கை அரசை குஷிப்படுத்தவோ மூவர் தூக்கு கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய அரசியல் சதுரங்க ஆட்டத்தையெல்லாம் காந்தி குரங்கு போல கண், காது, வாய்களை மூடிக்கொண்டு காணாமல் போ என்று சொல்லிக் கொடுக்கிறார் வைத்தி.

இறுதியில் இனி யாரும் குடியரசுத் தலைவர் தாமதமாக முடிவெடுத்தார் என்று கூறிக்கொண்டு வழக்கு போட முடியாது என்று எச்சரிக்கை செய்கிறார் வைத்தி. ஆனாலும் அந்த எச்சரிக்கையுடன் கூடவே கொஞ்சம் கருணையையும் பிச்சை போல போடுகிறார்.

அதாவது குடியரசுத் தலைவரின் நடத்தைக்கு களங்கம் கற்பிப்பதை விட்டுவிட்டு நாடாளுமன்றம் மூலமாக மரண தண்டனை கூடாது என்று மாற்றுவது சரியான வழிமுறையாக இருக்கும் என்கிறார். அதாவது கண்ணுக்கெட்டிய தூரத்தில் மரண தண்டனை ஒழிப்பு என்பது இல்லை என்பதால் கும்பலோடு கும்பலாக மரண தண்டனை ஒழிப்பு என்று கோஷம் போடுவதற்கு வைத்தி மாமா வெட்கப்படவில்லை.

ஆனாலும் அடுத்த வரியில் இந்த வெட்கத்தை அவரது விசேடமான பாசிசம் காட்டிக் கொடுத்து விடுகிறது.

” ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதற்குச் சமமான தீவிரவாதத் தாக்குதல் நடத்தியவர்களுக்கான தூக்கு தண்டனையைக் குறைப்பது கூடாது என்று நாடாளுமன்றம் முழுஆதரவுடன் கருத்து தெரிவிக்குமேயானால், அத்தகைய குற்றவாளிகளுக்கு குடியரசுத் தலைவரும்கூட கருணை வழங்க முடியாது என்பதையும் சட்டப்படி உறுதி செய்துவிட்டால், இத்தகைய சிக்கல் ஏற்படாது. கயிறா? கருணையா? ஏதாவது ஒன்றை விட்டுவிடத்தான் வேண்டும்!”

தினமணிஇதுதான் வைத்தி மாமா எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று அம்மணமாக ஆடும் இடம்.

அதாவது தமிழக மூவர் போன்ற ‘தேசத்தின் மேல் படையெடுத்தவர்களுக்கு” குடியரசுத் தலைவரே கருணை வழங்க முடியாது என்று நாடாளுமன்றம் மூலம் ஒரு சட்டம் கொண்டு வந்துவிட்டால் அவரது கவலை முடிவுக்கு வரும். அதன்படி முதலாவதாக இனி யாரும் குடியரசுத் தலைவரை விமரிசிக்க முடியாது, இரண்டாவதாக தேசத்தின் மீது போர் தொடுத்த பயங்கரவாதிகளுக்கு தூக்கு நிச்சயம். இதுதான் சோழியன் குடுமி ஆடியதன் இரகசியம்.

ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதற்குச் சமமான தீவிரவாத தாக்குதலாக இல்லாமல் ஈழத்தமிழர் மீது போரே தொடுத்தவர்கள்தான் ராஜிவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம். இந்த அரசு பயங்கரவாதிகளை காப்பாற்றத்தான் அப்பாவி தமிழக மூவர்களை கொல்ல வேண்டும் என்று குதிக்கிறது வைத்தியின் மனது.

அரசு பயங்கரவாதத்தை ஒரு ஊடக பாசிஸ்டு எப்படி முட்டுக்கொடுப்பார் என்பதை கற்க வேண்டுபவர்கள் உடனடியாக வைத்தி மாமாவிடம் வேலைக்குச் சேருங்கள்! வைத்தி மாமாவின் அருமை பாசிச ஜெயாவுக்கு தெரிந்தது போல இந்திய அரசுக்கு தெரியவில்லையோ என இனி யாரும் கவலைப்படத் தேவையில்லை. தேனொழுக நஞ்சை தயாரிக்கும் லேகியம் வைத்தியிடம் அண்டா அண்டாவாக ஸ்டாக் உள்ளது.

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: காக்கிச்சட்டையின் காவிப்புத்தி !

69

டந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத் நகரில், தில்சுக் நகர் எனுமிடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் இறந்துபோனார்கள்; ஏறத்தாழ நூறு பேர் படுகாயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை தொடங்கும் முன்பே, இன்னும் சொல்லப்போனால் குண்டுவெடிப்பில் இறந்து போனவர்களையும் காயமடைந்தவர்களையும் அப்புறப்படுத்தும் முன்னரே, “அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காகவே இக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாகவும்; இந்தியன் முஜாஹிதீன் என்ற முசுலீம் தீவிரவாத அமைப்புதான் இக்குண்டு வெடிப்பை நடத்தியதாகவும்” மைய அரசு, மாநில அரசு, போலீசு, உளவுத் துறை, பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் என அனைத்து நிறுவனங்களும் ஒரே குரலில் அடித்துக் கூறின.

தில்சுக் நகர்
ஹைதராபாத் தில்சுக் நகரில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தடயங்களைச் சேகரிக்கும் போலீசு.

ஆனால், இக்குண்டு வெடிப்பு நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட பின்னும் இக்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக ஒரு துரும்பைக்கூட போலீசாலும் உளவு நிறுவனங்களாலும் காட்ட முடியவில்லை.  இக்குண்டு வெடிப்பு குறித்து தற்பொழுது போலீசிடமும் உளவுத் துறையிடமும் இருப்பதெல்லாம் ஏதாவதொரு முசுலீம் தீவிரவாதி அமைப்பு இக்குண்டு வெடிப்பை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் மட்டும்தான். இப்படியொரு சந்தேகம் கொள்வதற்குக்கூட அதனிடம் வலுவான ஆதாரங்கள் கிடையாது.  மாறாக, நாடெங்கும் போலீசுத் துறையிடம் ஊறிப்போயுள்ள முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியல் அடிப்படையிலிருந்து மட்டுமே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

இது காழ்ப்புணர்ச்சி காரணமாக போலீசு மீது சுமத்தப்படும் அபாண்டமான குற்றச்சாட்டு அல்ல.   “ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் நடந்தால், அது முசுலீம்களின் வேலையாகத்தான் இருக்கும்; அந்த முசுலீம் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவனாகத்தான் இருப்பான்.  இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உத்தரவுப்படிதான் இயங்கியிருக்கும் என்றுதான் தற்பொழுது போலீசு சிந்திப்பதாக” ராமன் என்ற முன்னாள் உளவுத்துறை அதிகாரி கூறியிருப்பதை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜுவும் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

எனினும், ஆந்திர மாநில போலீசோ தனது சந்தேகத்தை மட்டுமே முன்னிறுத்தி இக்குண்டு வெடிப்பு தொடர்பாக பல அப்பாவி முசுலீம் இளைஞர்களைச் சட்டவிரோதமாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.  இந்த அப்பாவி முசுலீம் இளைஞர்களுள் முப்பத்திரண்டு வயதான முகம்மது ரயீசுதினும் ஒருவர்.

முசுலீம் இளைஞர்கள்
2007-ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முசுலீம் இளைஞர்கள், இந்திய அரசை மன்னிப்புக் கேட்கக் கோரி நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

ஆந்திர போலீசார் ரயீசுதினைத் தீவிரவாதி என முத்திரை குத்தி வேட்டையாடுவது இது முதன் முறையல்ல.  2007-ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கிலும் ரயீசுதின் ஹைதராபாத் நகர போலீசாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டார்.  இரண்டு ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றம் அவரைக் குற்றமற்றவர் எனக் கூறி விடுதலை செய்தது.  பொய் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டதால் ஆந்திர மாநில அரசு ரயீசுதினுக்கு நட்ட ஈடு வழங்கியது.  ஆனாலும், போலீசு ரயீசுதினைத் தீவிரவாதிகள் பட்டியலில் வைத்தே கண்காணித்து வருகிறது.  ரயீசுதின், தில்சுக் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் எதிர்பாராதவிதமாகச் சிக்கிக் காயமடைந்ததையே காரணமாகக் காட்டி, குண்டு வைக்க போனபொழுது அவர் காயமடைந்திருக்கலாம் என்ற கதையைக் கட்டி, அவரைச் சந்தேகத்தின் பேரில் சட்டவிரோதமாகத் தூக்கிச் சென்று விசாரணை நடத்தியது, ஹைதராபாத் போலீசு.

முசுலீம் இளைஞர்களை போலீசு  வேட்டையாட, ஏதாவதொரு குண்டு வெடிப்போ அல்லது தீவிரவாதத் தாக்குதலோ நடக்க வேண்டும் என்ற கட்டாயம்கூட இப்பொழுது அருகிவிட்டது. போலீசும் உளவுத்துறையும் தாங்கள் இயங்கி வருகிறோம் எனக் கணக்குக் காட்டுவதற்கே, முசுலீம் தீவிரவாதத் தாக்குதல் பீதியைக் கிளப்பிவிடுவதையும்; தாங்கள் கிளப்பிவிடும் பீதியையே ஆதாரமாகக் காட்டி முசுலீம் இளைஞர்களைக் குறிவைத்துத் தூக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

அகமது மிர்ஸா, முத்தி-உர்-ரஹ்மான்
கர்நாடாகா மாநில போலீசாரால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட இளம் ஆராய்ச்சியாளர் அய்ஜாஸ் அகமது மிர்ஸா (இடது) மற்றும் பத்திரிகையாளர் முத்தி-உர்-ரஹ்மான் சித்திக்.

பெங்களூரூ நகர போலீசு கடந்த ஆகஸ்டு மாதம் பெங்களூரூ மற்றும் ஹூப்ளியில் 15 முசுலீம் இளைஞர்களை வீடு புகுந்து கைது செய்தது.  பெங்களூரூ போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் மகாராஷ்டிரா போலீசார் நான்டேட் நகரைச் சேர்ந்த 4 இளைஞர்களைக் கைது செய்தனர்.  “இந்த 19 இளைஞர்களும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொபா மற்றும் ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி என்ற இரு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்; கர்நாடகாவைச் சேர்ந்த முக்கியமான அரசியல் தலைவர்களையும் பத்திரிகையாளர்களையும் கொல்லும் திட்டத்தோடு இவர்கள் இயங்கி வந்தனர்.  இக்கும்பலைச் சேர்ந்த ஹகீன் ஜமாதார், ஷோயிப் அகமது ஆகிய இருவரையும் நாங்கள் அவர்கள் அறியாமலேயே வேவு பார்த்து வந்தோம்.  இந்த இருவரும் ஆகஸ்டு 29 அன்று கன்னட பிரபா பத்திரிகையைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹா என்ற பத்திரிகையாளரைச் சுட்டுக் கொல்ல முயன்றபோது, நாங்கள் இந்த இருவரையும் அமுக்கிப் பிடித்து விசாரித்து, இந்தக் கும்பலின் திட்டத்தை முறியடித்ததோடு, மற்றவர்களையும் கைது செய்தோம்” – என இந்தக் கைதுகள் குறித்து போலீசு ஒரு சுவாரசியமான கதையை அவிழ்த்துவிட்டது.

போலீசால் கைது செய்யப்பட்ட இந்த 19 இளைஞர்களுள் ஒருவரான அஜஸ் அகமது மிர்ஸா இந்திய இராணுவத்தின் ஆராய்ச்சி அமைப்பில் இளம் ஆராய்ச்சியாளராக வேலை பார்த்து வந்தார்; முத்தி-உர்-ரஹ்மான் சித்திக் டெக்கான் ஹெரால்டு என்ற ஆங்கிலப் பத்திரிகையைச் சேர்ந்த நிருபர்; இரண்டு இளைஞர்கள் முதுகலை மருத்துவ மாணவர்கள்; மற்றொருவர் கணினிப் பொறியாளர்.

முகமது ரயிசுதீன்
தில்சுக் நகர் குண்டுவெடிப்பு தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட முகமது ரயிசுதீன்.

இந்த இளைஞர்கள் அனைவரும் ஒரு மாதம் வரை போலீசு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.  எனினும், இவர்கள் குறித்து போலீசு புனைந்த கதைக்கு எந்தவொரு சிறு ஆதாரத்தையும் போலீசால் காட்ட முடியவில்லை.  “இவர்களுக்குச் சர்வதேச முசுலீம் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பு கிடையாது; தீவிரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டமும் இவர்களிடம் இல்லை” என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு பெங்களூரு நகர போலீசு தள்ளப்பட்டது.  எனினும், சட்டவிரோதமான முறையில் இந்த இளைஞர்களைக் கைது செய்ததை நியாயப்படுத்துவதற்காக, இந்த இளைஞர்கள் உள்ளூர் தீவிரவாதிகள் எனக் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, போலீசு.

கர்நாடகா பா.ஜ.க. அரசு புனைந்துள்ள இந்தப் பொய் வழக்கின் விசாரணையைத் தற்பொழுது மைய அரசின் தேசியப் புலனாவு அமைப்பு நடத்தி வருகிறது.  இந்த 19 இளைஞர்களுள் 15 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செயப்பட்டுள்ளது.  கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலான பிறகும் நான்கு இளைஞர்கள் மீது எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்த முடியாமல் போனதால், அவர்களைக் கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்திருக்கிறது.

விடுதலையானவர்களுள் இளம் ஆராய்ச்சியாளரான அஜஸ் அகமது மிர்ஸாவும் ஒருவர். அவர் குற்றமற்றவர் என்ற உண்மை ஏறத்தாழ சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமான பிறகும்கூட, இந்திய இராணுவம் அவரைத் திரும்ப வேலைக்கு அமர்த்திக் கொள்ளாமல், அவர் பிணையில் விடுதலையான அதே நாளில் அவரை வேலையிலிருந்து தூக்கியடித்து விட்டது.

இந்து மதவெறிக் கும்பல் நடத்திய குண்டு வெடிப்பு வழக்குகளில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ள கர்னல் புரோகித் விவகாரத்தில், இந்திய இராணுவம் இதே அளவுகோலைப் பயன்படுத்தவில்லை.  இந்திய இராணுவம் கர்னல் புரோகித்தை இன்னமும் பதவியிலிருந்து விலக்காமல், சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையை அம்பலப்படுத்தியிருக்கிறது, ஜமாத் இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பு.

லியாகத் அலிஷா
டெல்லியில் குண்டு வைக்க வந்த தீவிரவாதி என்று டெல்லி போலீசாராலும்; பாகிஸ்தானிலிருந்து சரண்டைய வந்த முன்னாள் தீவிரவாதி என்று காஷ்மீர் அரசாலும் கூறப்படும் லியாகத் அலிஷா (வட்டத்துக்குள்)

இந்து மதவெறிக் கும்பலின் தளபதியான மோடியின் குஜராத் அரசு மட்டுமல்ல, மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள்கூட முசுலீம் தீவிரவாத பீதியைக் கிளப்பி, தம் மனம்போன போக்கில் முசுலீம்களைக் கைது செவதில் மும்மரமாக உள்ளன.  அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்கும் விதத்தில் டெல்லி நகரில் குண்டு வைக்கும் நோக்கத்தோடு, பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமான முறையில் டெல்லிக்கு வந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த காஷ்மீரியான லியாகத் என்ற தீவிரவாதியைக் கைது செய்ததோடு, “அவரிடமிருந்து ஏ.கே.47 துப்பாக்கி உள்ளிட்டுப் பல்வேறு வெடிபொருட்களையும் கைப்பற்றியிருப்பதாக” டெல்லி போலீசு சமீபத்தில் அறிவித்தது. ஆனால், டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரைச் சேர்ந்த லியாகத், பாகிஸ்தானிலிருந்து சரணடையும் நோக்கத்தோடுதான் இந்தியாவிற்கு வந்ததாகவும்; தங்கள் மாநில போலீசு அவர் சரணடைவதற்கு அனுமதித்திருப்பதையும் எடுத்துக் கூறி, டெல்லி போலீசின் பித்தலாட்டத்தை காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவே அம்பலப்படுத்தியிருக்கிறார்.

போலீசும் உளவுத்துறையும் பரிசு, பதவி உயர்வுக்காகவே இது போன்ற பித்தலாட்டங்களில் ஈடுபட்டு, அப்பாவி முசுலீம்களைக் கைது செய்து, பொய் வழக்குகளில் சிக்க வைத்து வதைத்து வருவது அடுத்தடுத்து அம்பலமாகி வந்தாலும், ஆட்சியாளர்களும் நீதிமன்றங்களும் போலீசின் இந்த அதிகார அத்துமீறல்களைக் கண்டித்து ஒரு வார்த்தைகூடப் பேச மறுக்கின்றனர்.  முசுலீம் இளைஞர்கள் சட்டவிரோதமான முறையில் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டு வருவது குறித்து சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் பாசுதேவ் ஆச்சாரியா எழுப்பிய கேள்விக்கு, “மைய அரசிடம் அந்த முசுலீம் இளைஞர்கள் குறித்தெல்லாம் எந்தவிதமான ஆவணப் பதிவுகளும் கிடையாது” எனத் தான்தோன்றித்தனமாகவும் திமிராகவும் பதில் அளித்திருக்கிறார், உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 1994-ஆம் ஆண்டு ஜகந்நாத் பூரி ரத யாத்திரை நடந்த சமயத்தில் மதக் கலவரத்தைத் தூண்டிவிட முயன்றதாகக் கைது செய்யப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 11 முசுலீம்களை விடுதலை செய்த உச்ச நீதிமன்றம், அவர்கள் மீது பொய் வழக்கு புனைந்த போலீசு அதிகாரிகளைக் கண்டிப்பதற்கு மாறாக, “தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பணிபுரிந்து வரும் போலீசு அதிகாரிகளின் பதற்றத்தையும், அப்பணியின்பொழுது அவர்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகளையும் நீதிமன்றம் புரிந்துகொள்வதாக” அத்தீர்ப்பில் குறிப்பிட்டு, போலீசின் அத்துமீறல்களுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறது.

தேசிய மற்றும் உள்ளூர் பத்திரிகைகள் இது போன்ற வழக்குகளில் போலீசின் ஊதுகுழல்களாகவே செயல்பட்டு வருகின்றன.  “ஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில், குண்டு வெடிப்பை நடத்துவதற்கு தீவிரவாதிகள் எப்படியெல்லாம் திட்டம் தீட்டினார்கள்” என்றெல்லாம் புலனாய்வு என்ற பெயரில் தெலுங்கு ஊடகங்கள் முசுலீம்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை நடத்தியுள்ளன.  பெங்களூரு வழக்கில், “பத்திரிகையாளர் முத்தி-உர்-ரஹ்மான் சித்திக், இராணுவ ஆராய்ச்சியாளர் அஜஸ் அகமது மிர்ஸா ஆகிய இருவர்தான் இந்த நடவடிக்கையின் மூளைகள்” என்றவாறு கன்னட ஊடகங்களால் கதை கட்டப்பட்டன.  அந்த இருவர் மீதும் போலீசால் எந்தவிதமான குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லை என்ற உண்மை அம்பலமான பின்னரும்கூட, கன்னட ஊடகங்கள் தங்கள் அவதூறு பிரச்சாரத்திற்கு மன்னிப்புக் கேட்க முன்வரவில்லை.

பீற்றிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் முசுலீம் வெறுப்பு இந்து மதவெறி பாசிச அரசியலில் ஊறிப் போயிருப்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் அழுந்தச் சொல்லுகின்றன.

– குப்பன்.

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

மறையாது மடியாது நக்சல்பரி…. பாடல்!

3

பாடலில் வரும் உரை:

இது ஜனநாயகம் இல்லை, தரகு முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் நடத்தும் சர்வாதிகாரம் என்று நாம் சொன்னோம்.

‘இல்லை, இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு’ என்று மார்தட்டியவர்கள் ‘ஐயோ, கிரிமினல்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறதே’ என்று இப்பொழுது மார்பில் அடித்துக் கொள்கிறார்கள். ‘இந்திய ஜனநாயகத்தை சுத்திகரித்து விடலாம்’ என்றும் ஆசை காட்டுகிறார்கள்.

பேசுபவர்கள் எல்லாம் பெரிய அறிவாளிகள், அதாவது பெரிய பெரிய முதலாளிகளின் கையாள்கள். புதிய பொருளாதாரக் கொள்கையை, நாட்டை மீண்டும் காலனியாக்கும் காட் ஒப்பந்தத்ததை ஆதரிப்பவர்களும் இந்த அறிவாளிகள்தான். திடீர் பணக்கார அரசியல் ரௌடிகள் பாசிச ஆட்சிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் குண்டர் படையாக இருந்து மக்களைத் தாக்கும் போது இவர்கள் தொண்டர் படையாக இருந்து அதை ஆதரிப்பார்கள்.

நக்சல்பரி

ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் இந்த அமைப்பையே தகர்த்தெரியாமல் கிரிமினல்களின் ஆதிக்கத்தைத் தகர்க்க முடியாது. கட்சிகளை மாற்றுவதால் காரியம் நடக்காது என்பதை நம் சொந்த அனுபவமே நிரூபித்துள்ளது. மிஞ்சியிருப்பது ஒரே பாதை, அது புரட்சிப் பாதை. அன்னிய ஆதிக்கம், பண்ணை ஆதிக்கம், கிரிமினல் கும்பல்களின் ஆதிக்கம், அனைத்திலிருந்தும் இந்த மண்ணையும் மக்களையும் விடுவிக்க வல்ல பாதை. அந்தப் பாதையில் மக்கள் அதிகாரத்தை நிறுவும் வரையில், புதிய ஜனநாயக இந்தியாவை படைக்கும் வரையில் நக்சல்பாரிகளின் முழக்கம் ஓயாது.

இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் இமயத்தின் அடிவாரத்தில் எழும்பிய அந்த போர் முழக்கம் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும். மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும்.

பாடல்:

ஏ… தன்னே னான னன்னே, தன்னானே னான னன்னே னானே னன்னே…
நக்சல்பரி, நக்சல்பரி
கோரஸ் : நக்சல்பரி, நக்சல்பரி
மறையாது மடியாது

கோரஸ் :
மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி
மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி
கோரஸ்: கண்ணீரில் தோன்றி, கண்ணீரில் தோன்றி
உயிருக்கு நிகரான செங்கொடி ஏந்தி
கோரஸ்: செங்கொடி ஏந்தி, செங்கொடி ஏந்தி
திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பை
கோரஸ்: திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பை
இடியாய் பிளந்ததே நக்சல் பரி – மக்கள்
இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பரி

கோரஸ்: நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

மிட்டார் மிராசுகளின் கொட்டம் அடக்கி – அவன்
பட்டாக்களைப் பிடுங்கி நெருப்பில் எரித்து
கோரஸ்:
மிட்டார் மிராசுகளின் கொட்டம் அடக்கி – அவன்
பட்டாக்களைப் பிடுங்கி நெருப்பில் எரித்து

பறை தட்டி… உழவர் படை கட்டி …
கோரஸ் : பறை தட்டி… உழவர் படை கட்டி …
இந்த பாரெங்கும் பண்ணைகள் மடிகின்ற வரையில்

கோரஸ் :
மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

அன்னியன் ஆணைக்கு ஆடும் அரசாங்கம்
கோரஸ் : ஆடும் அரசாங்கம், ஆடும் அரசாங்கம்
மண்டியிடும் தரகர்க்கு நாற்காலி மோகம்
கோரஸ் : நாற்காலி மோகம், நாற்காலி மோகம்
அடிமைக்கெதற்கு சுதந்திர வேடம்
கோரஸ் : அடிமைக்கெதற்கு சுதந்திர வேடம்
அலையாய் எழுந்ததே நக்சல்பரி – அரி
தாரம் கலைத்ததே நக்சல்பரி

கோரஸ்:
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

வங்கம் அரபிக் கடல் எங்கும் வலை விரித்து
கோரஸ்: வங்கம் அரபிக் கடல் எங்கும் வலை விரித்து
எங்கும் விழுங்க வரும் கொள்ளை வல்லரசு
கோரஸ்: புவி எங்கும் விழுங்க வரும் கொள்ளை வல்லரசு
இனம் கண்டு.. போரில் எதிர் கொண்டு..
கோரஸ்: இனம் கண்டு.. போரில் எதிர் கொண்டு..
அடி வேரோடு பூவோடு பிடுங்கிடும் வரையில்

கோரஸ் :
மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

அரசாளும் வர்க்கத்தை திரைபோடும் மன்றம்
கோரஸ் : நாடாளுமன்றம், நாடாளுமன்றம்
பொது நீதி எனும் பெயரில் சதி செய்யும் மன்றம்
கோரஸ் : அது நீதி மன்றம், அது நீதி மன்றம்
வதை செய்து வெறியாடும் எதிரியின் படையை
கோரஸ் : வதை செய்து வெறியாடும் எதிரியின் படையை
எதிர்கொண்டு நின்றதே நக்சல் பரி – மக்கள்
இதயத்தை வென்றதே நக்சல் பரி

கோரஸ் :
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

எங்கே நீதி என்று ஏங்கும் நிலை முடிக்க
கோரஸ் : எங்கே நீதி என்று ஏங்கும் நிலை முடிக்க
விடை இங்கே என்று அதிகாரம் பறித்தெடுக்க
கோரஸ் : விடை இங்கே என்று அதிகாரம் பறித்தெடுக்க
தடை எங்கே? மக்கள் படை அங்கே…!
கோரஸ் : தடை எங்கே? மக்கள் படை அங்கே…!
அது முன்னேறும் முன்னேறும் விடிகின்ற வரையில்.

கோரஸ்
மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி
____________________

க்கள் கலை இலக்கிய கழகத்தின்’அண்ணன் வர்றாரு’ பாடல் ஒலிப்பேழையில் இடம் பெற்ற ‘மறையாது மடியாது நக்சல்பரி’ என்ற பாடல். ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி: 044-23718706
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

___________

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

ஜெர்மனியில் நோவார்டிஸுக்கு காவடி தூக்கும் மன்மோகன் சிங்!

95
முதலாளித்துவம்
முதலாளித்துவ நியாயம்.

“பல் இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறான், அது போல பணம் இருக்கிறவன் காபி ஷாப்பில் காபி சாப்பிடுவான், 7 நட்சத்திர ஹோட்டலில் தண்ணி அடிப்பான், வேலியிட்ட குடியிருப்பில் வீடு வாங்குவான், அப்பல்லோவில் சிகிச்சை பார்த்துப்பான்.’ அதைப் பார்த்து ஏன் பொறாமைப்படுறீங்க?”

‘யாருக்கு பொருட்களும் சேவைகளும் கிடைக்க வேண்டும்’ என்பதற்கு முதலாளித்துவ சிந்தனையாளர்களின் பதில் இதுதான்.

ஒருவருக்கு ரத்தப் புற்றுநோய் வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். முதலாளித்துவ கனவு உலகத்தில், ஐடியல் சந்தை பொருளாதாரம் செயல்படும் ‘பூலோக சொர்க்கத்தில்’, மருந்து வாங்குவதற்கு அவர் மாதம் ரூ 1.5 லட்சம் செலவழிக்க வேண்டும். அதாவது கிலிவெக் என்ற பெயரில் நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருந்தை வாங்கிச் சாப்பிட்டு நோயை கட்டுக்குள் வைத்திருக்க ஒரு ஆண்டுக்கு ரூ 18 லட்சம் செலவழிக்க வேண்டும். 5 ஆண்டுகள் உயிரோடு இருக்க ரூ 90 லட்சம், 10 ஆண்டுகள் உயிரோடு இருக்க ரூ 1.8 கோடி.

இவ்வளவு பணத்தை யார் செலவழிக்க முடியும்? அந்தப் பணம் எப்படி வந்திருக்கும் என்று யாரும் கேட்கப் போவதில்லை. ‘நாய் விற்ற பணம் குரைக்கப் போவதில்லை’, அதனால் நாயையோ, பேயையோ விற்று பணம் குவித்த முதலாளிகளுக்கு மட்டும்தான் வாழும் உரிமை இருக்கும்.

‘அப்படி பணம் குவித்திருக்காதவர்கள் செத்து விட வேண்டியதுதான். அவ்வளவு பணம் சம்பாதிக்க வக்கில்லாத ஒருவர் இந்த உலகத்தில் வாழ்ந்து என்ன பலன்’ என்கிறது முதலாளித்துவம்.

“உயிர் காக்கும் மருந்துகளை கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சிக்கு பெருத்த செலவாகிறது. கண்டு பிடித்த மருந்துகளை மருந்தகங்களில் பரிசோதனை செய்து, தேசிய மருந்து ஒழுங்குமுறை கழகங்களிடம் ஒப்புதல் வாங்க இன்னும் பெரும் தொகை செலவாகிறது. இவ்வளவு செலவு செய்த மருந்தை அதிக விலைக்கு விற்றால்தான் எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு பணம் கிடைக்கும்” என்ற வாதத்தின் அடிப்படையில் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் நலனை பாதுகாக்க மேற்கத்திய நாடுகளில் காப்புரிமை சட்டம் நடைமுறையில் உள்ளது. ஒரு புதிய மருந்தை முதலில் கண்டுபிடித்து சந்தைக்கு கொண்டு வந்த நிறுவனத்துக்கு அந்த மருந்தை உற்பத்தி செய்து விற்பதற்கு 20 ஆண்டுகள் தனி உரிமை கொடுக்கப்படுகிறது. கண்டுபிடித்த நிறுவனத்தின் அனுமதி இன்றி மற்ற நிறுவனங்கள் அந்த மருந்தை நகல் செய்து உற்பத்தி செய்வது சட்டப்படி குற்றம்.

அறிவியல் ஆராய்ச்சி, தொழில் நுட்ப முன்னேற்றம் அனைத்தும் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் உழைப்பின் பலன்கள்; ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முன் வந்த ஆயிரக்கணக்கான முன்னோடிகளின் தோள்களின் மீது நின்றுதான் புதிய அறிவியல் முன்னேற்றங்களை நிகழ்த்துகிறது.

அறிவியல் என்பது நோவார்டிஸ் கம்பெனியின் கிணற்றுக்குள்ளோ, ஒரு தனிநபர் வீட்டு புழக்கடையிலோ விளைவதில்லை. உலகெங்கிலும் உள்ள பொதுமக்களின் பணத்தில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் நோய்களின் உடற்கூறு பற்றியும் அவற்றுக்கான மருந்துகள் பற்றியும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. புகழ் பெற்ற ஆய்வு இதழ்களில் வெளியாகும் இந்த ஆராய்ச்சி முடிவுகள்தான் புதிய மருந்துகள் உருவாக்குவதற்கான விளைநிலம். சுருக்கமாகச் சொல்லப் போனால், ஒட்டு மொத்த உலகும் சேர்ந்து ஆதரிப்பதுதான் அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சி; எந்த தனிப்பட்ட நிறுவனமும் அதற்கு சொந்தம் கொண்டாட முடியாது. இப்போது மேற்கத்திய அறிவுசார் சொத்துரிமை சட்டங்களின் படி அறிவுக்கு சொந்தம் கொண்டாட வேண்டுமானால், மனித குலத்தின் பொது அறிவுக் களஞ்சியத்திலிருந்து எந்த ஆதாயமும் பெறாத ஒரு குழுவை நிறுவனம் உருவாக்க வேண்டும்.

கிலிவெக் மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமெரிக்காவின் ஒரேகான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் பிரியன் டிரக்கர், ‘தங்களது ஆய்வுக்கான செலவில் 10% மட்டுமே நோவார்ட்டிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்றும், 90% அரசு மற்றும் கல்வி ஆய்வு நிறுவனங்களின் பங்களிப்பு’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் அறிவியலை வளர்த்துச் செல்ல முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் முறையின் முட்டாள்தனம் விரிவாக விவாதிக்கப்பபட வேண்டிய விஷயம். இங்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு தொடர்பான விபரங்களை மட்டும் பார்ப்போம்.

பன்னாட்டு நிறுவனங்கள்
நாட்டு உரிமைகளை விழுங்கும் பன்னாட்டு நிறுவனங்கள்.

காப்புரிமை பெறுவது மூலம் மருந்து நிறுவனம் 20 ஆண்டுகள் வரை நேரடி உற்பத்திச் செலவை விட 20-30 மடங்கு அதிக விலை வைத்து மருந்துகளை விற்க முடிகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு காப்புரிமை காலாவதி ஆன பிறகு, மற்ற நிறுவனங்களும் உற்பத்தியில் நுழைய விலை 20-ல் ஒரு பங்காக வீழ்ந்து விடுகிறது.

ஆனால், இந்தியாவின் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இயற்றபட்ட இந்திய காப்புரிமை சட்டம் 1970 வித்தியாசமாக இருந்தது. மருந்து பொருட்களுக்கு காப்புரிமை வழங்குவது சட்டத்தில் இல்லை. மாறாக, மருந்தை உற்பத்தி செய்யும் முறைக்குத்தான் காப்புரிமை வழங்கப்பட்டது. அதுவும் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்கப்படும். இதன்படி பன்னாட்டு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்த புதிய மருந்தை மாற்று முறையில் இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்து அதே மருந்தை பல மடங்கு குறைந்த செலவில் சந்தைப் படுத்த முடிந்தது. இப்படி உருவாக்கப்பட்ட மருந்துகள் அடிப்படை மருந்துகள் (generics) என்று அழைக்கப்படுகின்றன.

இதன் மூலம் இந்தியாவிலும் மற்ற மூன்றாம் உலக நாடுகளிலும் மேற்கத்திய நிறுவனங்களின் மருந்து விலைகள் கட்டுப்படியாகாத மக்கள் கோடிக்கணக்கான பேர் பலன் பெற்றார்கள்.

1990களுக்குப் பிறகான ஒற்றைத் துருவ மேலாதிக்க உலகில் ‘ஒரு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் என்ன சொன்னாலும் சரி, அமெரிக்கா வைப்பதுதான் சட்டம்’ என்பதை நிரூபிக்கும் விதமாக காட் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ். ‘அப்படி உலகப் பொருளாதாரத்தோடு இரண்டற கலந்து விடா விட்டால் நாட்டில் சோறு, தண்ணீர் கிடைப்பது நின்று போகும்; குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் இறந்து போவார்கள்; பள்ளிக் கூடங்கள் நடப்பது நின்று போகும்; மருத்துவமனைகள் செயலிழந்து விடும்’ என்றெல்லாம் பயமுறுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்திலும் (TRIPS) இந்திய அரசு கையெழுத்திட வைக்கப்பட்டது. அதற்கேற்ப இந்தியாவின் காப்புரிமை சட்டம் 1999, 2002, 2005, 2006 ஆண்டுகளில் மாற்றப்பட்டது. இனிமேலும் புதிய நிபந்தனைகள் பன்னாட்டு நிறுவனங்கள் முன் வைக்கும் போது அவற்றிற்கு ஏற்ப சட்டம் மாற்றப்படும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

இந்த திருத்தங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் என்ன செல்லுபடியாகுமோ அதுதான் இந்தியாவிலும் செல்லுபடியாகும். ‘மருந்து நிறுவனங்களுக்கு மருந்து மீதான காப்புரிமை வழங்கப்பட வேண்டும், அதுவும் 20 ஆண்டுகளுக்கு ஏகபோக சந்தை உரிமை வழங்கப்பட வேண்டும். அடிப்படை வடிவிலான மருந்துகளை இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்ய முடியாது.’

இதன் விளைவாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்திய மருந்து நிறுவனங்கள் ரான்பாக்ஸி, பிரமல், மேட்ரிக்ஸ் லேப், ஆர்சிட் நிறுவனத்தின் ஒரு பிரிவின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி துறைகள் என்று வரிசையாக பன்னாட்டு நிறுவனங்களால் விழுங்கப்பட்டன.

இனிமேல் புதிதாக கண்டுபிடிக்கப்படும் எந்த ஒரு மருந்துக்கும் சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனம் வைப்பதுதான் விலை. அதற்கான காப்புரிமையை இந்திய அரசு வழங்கியே தீர வேண்டும். இனிமேல் மார்பகப் புற்றுநோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டால் கோடீஸ்வரர்கள் மட்டும்தான் சிகிச்சை பெற்று உயிர் வாழ முடியும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த நிலைமையை இம்மியளவு கூட மாற்றி விடவில்லை. அமெரிக்க காப்புரிமை சட்டங்களை வளைத்து விளையாடும் பன்னாட்டு நிறுவனங்களின் ஒரு உத்தியை மட்டும் இந்தியாவில் தடுத்திருக்கிறது, அவ்வளவுதான்.

நோய் பற்றி ஆராய்ச்சி செய்வது, அதற்கான புதிய மருந்து ஒன்றை கண்டுபிடிப்பது, அதற்கான பரிசோதனைகளை நடத்துவது என்று நீண்ட முயற்சிக்குப் பிறகு லாபம் கிடைப்பதை முதலாளிகளின் லாப வேட்கை சகித்துக் கொள்ளப் போவதில்லை. குறுக்கு வழியில் லாபத்தை பெருக்க கண்டு பிடித்த வழிகளில் ஒன்றுதான் “என்றென்றும் பசுமை” என்ற முறை. அதாவது ஒரு மருந்தின் மூலம் என்றென்றும் லாப அறுவடை செய்யும் வழிமுறை.

மருந்தின் 20 ஆண்டு கால காப்புரிமை காலாவதி ஆவதற்கு முன்பு அந்த மருந்தின் உள்ளடக்கத்தில் ஒரு சிறு மாற்றம் மட்டும் செய்து புதிதாக காப்புரிமைக்கு விண்ணப்பிப்பார்கள். ‘இந்த மாற்றத்தினால் நோய்க்கான சிகிச்சை பல மடங்கு மேம்பட்டிருக்கிறது’ என்று விளம்பரம் செய்வார்கள். ஒரிஜினல் மருந்துக்கும் ‘புதிய’ மருந்துக்கும் இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஏகபோக சந்தை உரிமை கிடைத்து விடும்.

கிலிவெக் மருந்தின் காப்புரிமை காலம் முடியப் போகிறது. சென்ற ஆண்டு மட்டும் நோவார்டிஸ் $8.5 பில்லியன் மதிப்பிலான கிலிவெக் மருந்துகளை உலகம் முழுக்க விற்றிருக்கிறது. அந்த ஏகபோக சந்தை வருமானத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள கிலிவெக் மருந்தில் அப்படி ஒரு மாற்றம் செய்து இமதினிப் மெசிலேட் என்ற வேதி சேர்மத்துக்கான காப்புரிமைக்கு சென்னை அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தது நோவார்டிஸ்.

சென்னை அலுவலகம் அந்த விண்ணப்பத்தை 2006-ம் ஆண்டு நிராகரித்து விட்டது. ‘இந்திய காப்புரிமை சட்டம் (2005)ன் பிரிவு 3(d)ன் படி அப்படி சிறு அளவு மாற்றம் செய்யப்பட்ட மருந்துகளுக்கு காப்புரிமை இல்லை’ என்று சொல்லி விட்டது.

அதை எதிர்த்து நோவார்டிஸ் சென்னை உயர் நீதி மன்றம், இந்திய அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டுக் கழகம் இவற்றில் மேல் முறையீடு செய்து இறுதியாக ஆகஸ்ட் 2009-ல் உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கை கொண்டு வந்தது. அந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. ‘சென்னை அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தின் முடிவு சரியானதுதான், நோவார்டிஸூக்கு கிலிவெக் மருந்தில் சிறிதளவு செய்த மாற்றத்தின் அடிப்படையில் காப்புரிமை வழங்க முடியாது’ என்று முடிவு செய்திருக்கிறது.

ஆனால், இதே அடிப்படையில் சீனா, ரஷ்யா, தாய்வான் உட்பட 40 நாடுகளில் நோவார்டிஸ் காப்புரிமை பெற்றிருக்கிறது. எதிர்காலத்தில் மற்ற நாடுகளிலும் காப்புரிமை பெறுவதற்கான தடைகளை தகர்த்தெறிவதற்கு முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

மன்மோகன் சிங் - ஏஞ்சலா மெர்கல்
மன்மோகன் சிங் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உடன்.

ச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனேயே ‘இனிமேல் இந்தியாவுக்கு அன்னிய முதலீடுகள் வருவதே குறைந்து போகும்’ என்று எச்சரித்தார் நோவார்டிஸ் இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் ரஞ்சித் ஷாஹானி. இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு எங்கு அடித்தால் வலிக்கும் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

இப்போது ஜெர்மனிக்கு காவடி தூக்கிக் கொண்டு போயிருக்கும் மன்மோகன் சிங், ‘இது தொடர்பான புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று ஜெர்மனி வலியுறுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கெல்லுடனான மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் வகிக்கப் போகிறது. அந்த ஒப்பந்தத்தில் அறிவு சார் சொத்துரிமையில் உலக வர்த்தக நிறுவன பொறுப்புகளை விட உறுதியான சட்டங்களை நிறைவேற்ற ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவை வலியுறுத்துகிறது.

இந்திய நீதித் துறையில் சாதகமான தீர்ப்பு கிடைக்கா விட்டால், சட்டத்தையே மாற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.

“பொருளாதாரத் தேக்கம், விலைவாசி உயர்வு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவைதான் நாம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்” என 2012-13 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை உரையில் குறிப்பிட்ட நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘இதிலிருந்து நம்மைக் காப்பாற்ற அந்நிய மூலதனத்திடம் சரணடைவதைத் தவிர வேறு நாதி நமக்கில்லை’ என்று பிரகடனம் செய்து, ‘அந்நிய மூலதனத்திற்கு காட்டப்படும் சலுகைகளை யாரும் எதிர்க்கக் கூடாது’ என்றும் அறிவுரை சொல்கிறார்.

அதன்படி, இந்த ஆண்டு இல்லா விட்டால் அடுத்த சில ஆண்டுகளுக்குள், காங்கிரசு தலைமையிலான ஆட்சியில் இல்லா விட்டால் பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருக்கும் அசௌகரியங்கள் நீக்கப்பட்டு தடையின்றி அன்னிய மூலதனம் இந்தியாவிற்குள் பாய்வதற்கான மடை வெட்டப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய தரகு முதலாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலமும் சாதாரண மக்களுக்கு அடிமை வாழ்வும் உறுதி.

– அப்துல்

மேலும் படிக்க
HIV cancer patients seek access to affordable medicines
A Just order
Top three MNC pharma companies Novartis, Pfizer and Abott lose 10 in 2013
Novartis loses Indian Glivec patent case
Novartis denied cancer drug paten

தமிழகத்தைத் துண்டாட குஷ்பு சதி!

21

விசுவ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலுக்கு ஒரு அவசரக் கடிதம்

______________________________________________________________________________________________________________________

ஜெயபாரதம்

அயோத்தியில் ராமனுக்கு                                                                                                        ஆலயம் அமைப்போம்

பூஜ்ய ஸ்ரீ அஷோக் ஷிங்கால்ஜி அவர்களின் சமூகத்திற்கு
ராமஸ்வாமியின் பணிவான விக்ஞாபனம்:

ஸ்ரீராம பாதுகா ஊர்வலம் பற்றிய செய்தியைப் பார்த்தேன். ஸ்ரீராமனின் ஜென்மபூமியைக் கண்டு பிடித்ததுடன், பரதன் பாதுகையைப் பெற்ற மரத்தடியையும் நீங்கள் கண்டு பிடித்து விட்டது பற்றி ரொம்ப ஸந்தோஷம். இந்த மரத்தடியை முஸல்மான்கள் எப்படி விட்டு வைத்தார்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. போகட்டும். இங்கே தமிழ்நாட்டில் நம்மவா ஆட்சிதான் என்றாலும் அவ்வப்போது மனக்கிலேசத்தை உண்டு பண்ணக்கூடிய கார்யங்கள் நடக்காமலில்லை. நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.

குஷ்பு
இந்து கடவுள் படங்கள் கொண்ட சேலையை அணிந்தார் என்று தமிழகத்து ஸ்ரீராம் சேனாவான இந்து மக்கள் கட்சி குஷ்புவை எதிர்த்தது.

ஸமீபத்தில் மதறாஸ் ‘குமரன் சில்க்ஸ்’ கடையில் என் பெண்ணுக்கு பட்டுப்புடவை வாங்கப் போயிருந்தேன். இந்த வருஷ தீபாவளிக்கு அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் புடவைக்கு ‘குஷ்பு சேலை‘ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதைக் கேட்டவுடன் நான் கடையைவிட்டு வெளியில் வந்துவிட்டேன். கடை முதலாளியும் ஹிந்துதான் என்பதை சொல்லத்தேவையில்லை. இங்கே திரும்பின இடமெல்லாம் குஷ்பு வளையல், குஷ்பு பொட்டு, பொட்டுக்கும் குஷ்புவுக்கும் என்ன ஸம்பந்தம்? கேட்க சகிக்கவில்லை. அதிகம் சொல்வானேன். பள்ளிக்கூடத்தில் படிக்கும் என் கடைசிப் பையன் கூட நோட்டுப் புஸ்தகத்துக்குள் இந்தப் பிசாசின் படத்தை ஒட்டி வைத்திருக்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த குஷ்பு என்பவள் தமிழ் சினிமாவில் இன்றைக்கு நம்பர் ஒன் நடிகை. இருந்து விட்டுப் போகட்டுமே என்று அலட்சியம் பண்ணிவிடாதீர்கள். அவள் ஒரு முஸ்லீம். அவளுடைய உண்மைப் பெயர் நக்கத். பம்பாய்க்காரியாம். இந்துவா முஸ்லீமா என்று கண்டு பிடிக்க முடியாதபடி குஷ்பு என்று வேண்டுமென்றே ஈரெட்டாக தன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறாள். இந்த விஷயத்தையே நான் தற்செயலாக ஒரு சினிமா பத்திரிகையைப்பார்த்துதான் தெரிந்துகொண்டேன். ‘ஹிந்துவே விழிப்புணர்வுகொள்’ என்று சொல்லிக்கொண்டு நம் பத்திரிகைகள் தூங்குகின்றன.

ஹிந்து சமுதாயத்துக்கு ஏன்தான் இப்படி புத்திகெட்டுப் போனதோ தெரியவில்லை. விநாயகர் சதுர்த்தி பந்தலில் ‘கூந்தலிலே என்ன பூ குஷ்பு’ன்னு மைக்செட்டில் பாட்டு போட்டு போடறான் ஒரு சேரி ஹிந்து. ஹிந்து சமூகத்தில் பிளவு உண்டாகிவிடப் போகிறதே என்று ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு பேசாமல் வந்தேன். நம்மவாளே சினிமாவில் இப்படி பாட்டு போடும்போது நாம் அவனை எப்படி கேட்க முடியும்? பாலசந்தர், மணிரத்தனம், விசு, ஜீவி இவாளுக்கெல்லாம் நீங்களாவது சொல்ல வேணும். இல்லையானால் ஆசாரிய சுவாமிகளையாவது இதில் தலையிட்டு அவாளுக்கு புத்தி சொல்லச் சொல்லவும். இப்படியெல்லாம் எழுதுவதால் லெளகிக நிலைமை புரியதாவன் என்று என்னை எடைபோட்டு விட வேண்டாம்.

இன்றைக்கு ஸினிமாதான் எல்லாம் என்று ஆனபிறகு நாமும் இறங்கி ஒருகை பார்த்துவிட வேண்டியதுதான். இந்த அகண்ட ஹிந்து தேசத்தில் ஹிந்து பெண்களுக்கா பஞ்சம்? நமக்கு பாரம்பர்யம்தான் இல்லையா? ரம்பை, ஊர்வசியென்ன, திலோத்தமையென்ன, அப்ஸரஸ் ஸ்திரீகள் என்ன…. ஆனானபட்ட விஸ்வாமித்ரனையே வழிக்குக் கொண்டுவந்த மேனகை பிறந்த பூமியல்லவா இது. அந்த காலத்தில் ஆலயங்கள் இந்தமாதிரி விஷயங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தன. இப்போ எல்லாமே ஸினிமா கொட்டகைதான். சிற்பிகளும் இப்போது சுவாரசியமில்லை.

தமிழ் பார்ப்பனர்போன எலக்ஷனில் சத்ருக்னன் சின்ஹா மாதிரி ஹிந்து நடிகர்களை ஈடுபடுத்தியதிலிருந்து நீங்கள் இந்த விஷயத்தைப் புரிந்து கொண்டிருப்பது தெரிகிறது. இருந்தாலும் லக்ஷணமான ஸ்திரீகள் இல்லாத பக்ஷத்தில் ஹிந்து தர்மத்தின்பால் வாலிபர்களை ஈர்ப்பது கஷ்டம். உமாபாரதியெல்லாம் இதற்கு லாயக்கில்லை. ஜீ.வியிடம் இந்த விஷயத்தை நீங்கள் காதில் போட்டுவிட்டால் போதும். ஆக வேண்டியதை பார்த்துக்கொள்வார்.

ஏதோ ஒரு அலையில் நம்மவா ஆட்சி இங்கே வந்துவிட்டது. ஆனால் அடுத்த வேர்தலில் இந்த ராக்ஷஸி (குஷ்பு) போட்டி போட்டால் நிலைமை என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எனக்கு இன்னொரு ஸம்சயமும் உண்டு. தமிழ்நாட்டைத் துண்டாட பாகிஸ்தான் நடத்தும் சதியாகவும் இது இருக்கலாம். வடக்கே காஷ்மீரில் ஏ.கே.47ஐக் கொடுப்பவன், தெற்கே மோகனாஸ்திரத்தை ஏவுகிறான். இதில் கருணாநிதியும் உள்கையாக இருக்கலாம். எதற்கும் நீங்கள் பிரதமர் காதில் இதைப் போட்டுவைக்கவும்.

ராமஜன்ம பூமி விஷயமே இன்னும் முடியாத போது இப்போதைக்கு இதை பெரிய விஷயமாக கிளப்புவது நமது கக்ஷிக்கு உசிதமில்லை. தமிழ்நாட்டுக்கு கோவிந்தாசார்யாவை அனுப்பியிருக்கிறீர்கள். விஷயத்தை அவரிடம் விட்டுவிட்டால் பிரமாதமாக கவனித்துவிடுவார். குறைந்த பக்ஷம் ஹிந்து தயாரிப்பாளர்கள் ஹிந்து நடிகைகளைப் போட்டு படம் எடுக்க வேண்டும் என்று பிரச்சாரத்தைக் கிளப்பினாலே இந்த சனியனை சீக்கிரம் ஒழித்து விடலாம். எப்படியோ இந்த முஸல்மான் மோகினியிடமிருந்து ஹிந்து தர்மத்தைக் காப்பாற்ற பகவான் அருள் பாலிக்கட்டும். ஜெய் சியாராம்.

அனந்தகோடி நமஸ்காரங்களுடன்
ராமஸ்வாமி (ஐயர்)

பின் குறிப்பு: ஸ்ரீராம பாதுகா ஊர்வலம் பற்றிய செய்தியை இண்டியன் எக்ஸ்பிரஸ் 10-ம் பக்கத்தில் போட்டிருக்கிறார்கள். தலைப்பு செய்தியாகப் போடாவிட்டாலும் முதல் பக்கத்திலாவது போடக்கூடாதா? பாதுகையை ‘ஸ்லிப்பர்’னு இங்கிலீஷில் மொழி பெயர்த்து எழுதறாள். இதெல்லாம் ரொம்ப அநியாயம். சம்பந்தப்பட்டவாளிடம் சொல்லி கவனிக்கச் சொல்லவும்.

___________________________________________________________________________________________________________________

புதிய கலாச்சாரம், அக்டோபர் 1992

____________________________________________

அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!

162

ஹியுகோ சாவேஸ்

ஹியுகோ சாவேஸ் 1954-2013: அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!

வெனிசுலாவின் அதிபர் ஹியுகோ சாவேஸ் மார்ச் 5-ஆம் தேதியன்று மறைந்தார். அவருக்கு வயது 58. “யோ ஸா சாவேஸ்” (நானே சாவேஸ்) என்று கண்களில் நீர் வழிய முழங்கியபடியே இருபது இலட்சம் மக்கள் தங்களுடைய தேசத்தின் வீரப்புதல்வனது உடலை ஏந்திச் சென்றனர். “வாழ்வதும் மரிப்பதும் வேறுவேறல்ல. வாழ்தலின் மரித்தல் சிறந்ததாகவும் இருக்கலாம் – வாழும் காலத்தில் செயவேண்டியதை ஒருவன் செய்திருந்தால்” என்று கூறினான் கியூபாவின் மறைந்த விடுதலைப் போராளியும் கவிஞனுமான ஜோஸ் மார்ட்டி. செய்ய வேண்டியதைச் செய்தவர்தான் சாவேஸ் என்ற போதிலும், அரியதொரு தலைவனைத் திடீரென்று இழந்த அதிர்ச்சியில் தவிக்கின்றனர் வெனிசுலா மக்கள்.

“அவர் மீது புற்றுநோய் ஏவப்பட்டிருக்கிறது என்றும், அந்தச் சதியை விரைவில் கண்டுபிடிப்போம்” என்றும் கூறியிருக்கிறார் கூறுகிறார், சாவேஸிற்குப் பின் பொறுப்பேற்றிருக்கும் நிக்கோலஸ் மாதுரோ. “விரைவிலேயே இந்த மர்மம் வெளியே வரும்” என்கிறார் பொலிவிய அதிபர் இவா மொரேல்ஸ். தென் அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் தலைவர்கள் 6பேர் அடுத்தடுத்து புற்றுநோய்க்கு ஆட்பட்டிருக்கின்றனர். உணவு, பரிசுப் பொருட்கள், உள்ளாடைகள் போன்றவற்றை இரகசியமாக கதிரியக்கத்துக்கு ஆளாக்குவதன் மூலம், தமது அரசியல் எதிரிகளைக் கொலை செய்வதாக சி.ஐ.ஏ – வைப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பிடல் காஸ்டிரோவைக் கொல்வதற்குப் பல வழிகளில் முயன்று தோற்ற இழிபுகழ் பெற்றதுதான் சி.ஐ.ஏ. என்பதால் இந்தக் குற்றச்சாட்டு அலட்சியப்படுத்தக் கூடியது அல்ல.

சாவேஸின் மீது கொலைவெறி கொள்வதற்கான எல்லா முகாந்திரங்களும் அமெரிக்காவுக்கு இருந்தன. அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பின் வலிமையான குறியீடாக சாவேஸ் இருந்தார். 2001-இல் இராக்கிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்து, சதாமுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று உலக நாடுகள் அனைத்தையும் அமெரிக்கா மிரட்டி வைத்திருந்தபோது, சாவேஸ் இராக் சென்றார். புஷ் கண்டனம் தெரிவித்தபோது, “வெனிசுலா இறையாண்மை கொண்ட ஒரு நாடு என்பதை புஷ்ஷுக்கு நினைவுபடுத்துகிறேன்” என்று அலட்சியமாக பதிலளித்தார். ஆப்கான், இராக் ஆக்கிரமிப்புகளை வெளிப்படையாக எதிர்த்துக் குரல் கொடுத்தார். 2008-இல் காசாவின் மீது இசுரேல் படையெடுத்த மறுகணமே, தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டார்.

சாவேஸ் இறப்பு துயரம்
தமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அதிபர் ஹியுகோ சாவேஸின் மரணச் செய்தியைக் கேள்வியுற்றுக் கதறியழும் வெனிசுலா மக்கள்.

2006-ஆம் ஆண்டு ஐ.நா.-வில் உரையாற்றிய சாவேஸ், “நேற்று சாத்தான் இங்கே வந்திருந்தது. இதே இடத்தில், இதோ நான் நிற்கிறேனே இதே இடத்தில் நின்றிருந்தது. கந்தக நெடிகூட இன்னும் போகவில்லை” என்று ஐ.நா.-வில் முந்தைய நாள் உரையாற்றிச் சென்றிருந்த போர்வெறியன் ஜார்ஜ் புஷ்ஷை எள்ளி நகையாடினார். அது அவை நாகரிகத்தில் பொருந்திய ராஜதந்திர மொழியன்று. ஆனால், அமெரிக்காவின் நடத்தைக்குப் பொருந்திய மொழி. ஆகவேதான் சங்கடத்தில் நெளிந்தாலும் அவையோரால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

1954-இல் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து பிழைப்புக்காக இராணுவத்தில் சேர்ந்தவர் சாவேஸ். இராணுவத்தில் சேர்ந்தவுடன், செங்கொடி இயக்கம் என்றழைக்கப்பட்ட மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒடுக்குவதற்கான படைப்பிரிவுக்குத்தான் அனுப்பப்பட்டார். ஏழைகளுக்காகப் போரிட்ட மாவோயிஸ்டுகள் மீது அரசு ஏவிய சித்திரவதைகளும் படுகொலைகளும் அவரைச் சிந்திக்கத் தூண்டின. 1989-இல் சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைக்கேற்ப வெனிசுலாவில் அதிரடியாக அமல்படுத்தப்பட்ட மானியவெட்டுகள் மற்றும் தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டம் ஒடுக்கப்பட்டு, நாடு முழுவதும் 3000 பேர் கொல்லப்பட்டனர்.

சாவேஸ்

1973-இல் சிலியில் நிகழ்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு, அலண்டே கொலை, இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் அமெரிக்காவால் திணிக்கப்பட்ட இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் என்ற பின்புலத்தில் தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும், அமெரிக்க எதிர்ப்பும் சோசலிச நாட்டமும் கொண்ட பலவிதமான ஆயுதக் குழுக்கள் தோன்றியிருந்தன. அத்தகைய குழுவொன்றை இராணுவத்திற்குள் சாவேஸும் உருவாக்கியிருந்தார். 1992-இல் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த முயன்று தோற்றார். “தோழர்களே, துரதிருஷ்டவசமாக எங்கள் இலட்சியத்தில் வெற்றி பெற இயலவில்லை – இப்போதைக்கு” என்று தொலைக்காட்சியில் பேசினார் சாவேஸ். “இப்போதைக்கு” என்ற அந்த ஒரு சொல் மக்கள் நினைவில் பதிந்திருந்தது. சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த பின்னர், 1998-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சாவேஸ் வெற்றி பெற்றார்.

வெனிசுலாவின் எண்ணெய் வளம் முழுவதையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்காவின் எக்சான் மொபில் உள்ளிட்ட நிறுவனங்கள் தம் இலாபத்தில் ஒரு விழுக்காட்டை மட்டுமே ராயல்டியாக கொடுத்து வந்ததை 13 சதவீதமாக உயர்த்திச் சட்டமியற்றியவுடன், சாவேஸுக்கு எதிரான இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை அமெரிக்கா அரங்கேற்றியது. ஆனால், உலகம் முழுவதும் பல நூறு ஆட்சிக்கவிழ்ப்புகளை நடத்திய அனுபவம் கொண்ட அமெரிக்கா, வெனிசுலாவில் மண்ணைக் கவ்வியது. பல்லாயிரக்கணக்கான மக்கள், குறிப்பாகப் பெண்கள் இராணுவத்தை முற்றுகையிட்டுப் பணிய வைத்தனர். 28 மணி நேரத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு தோற்றது. சாவேஸ் மீண்டும் பதவியில் அமர்ந்தார். தமக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் வேலை நிறுத்தத்தை அமெரிக்க முதலாளிகளே தூண்டிவிட்டனர். பொருளாதாரம் நிலைகுலைந்தது. உள்நாட்டிலேயே மக்களுக்கு எரிபொருள் இல்லை. “முதலாளிகளிடம் பணியாதே சாவேஸ். நாங்கள் தாக்குப்பிடிக்கிறோம்” என்று கூறி அத்தனை துன்பங்களையும் சகித்துக் கொண்டார்கள் மக்கள்.

சாவேஸ் இறுதி ஊர்வலம்
பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட சாவேஸின் இறுதி ஊர்வலம்.

நாட்டின் எண்ணெய் வளம் தந்த வருவாயை மக்கள் நலத்துக்குப் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதுதான் சாவேஸின் வெற்றிக்கு காரணம். 2005-இலேயே நூறு விழுக்காடு கல்வியறிவு சாதிக்கப்பட்டுவிட்டது. மக்களுக்கு உணவு உத்திரவாதம் செயப்பட்டிருக்கிறது. சுமார் 3 இலட்சம் பேருக்கு நிலம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான கூட்டுறவுக் கழகங்கள் எல்லாத் துறைகளிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கியூபாவிலிருந்து சுமார் 25,000 மருத்துவர்கள் பணியிலமர்த்தப்பட்டு மக்களுக்கு தரமான மருத்துவம் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரையில் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. வீடற்றவர்களுக்கு 5 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. வெனிசுலாவில் வீடற்றவர்களே இல்லை என்று கூறும் விதத்தில், அடுத்த 6 ஆண்டுகளில் மேலும் 20 இலட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. மற்ற உற்பத்தி சார்ந்த உழைப்புகளைப் போலவே பெண்களின் குடும்ப உழைப்புக்கும் ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று கூறி, குடும்ப உழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கு அரசு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது.

ஏழை, எளிய உழைக்கும் மக்கள் மீது இயல்பிலேயே அவரிடம் ததும்பிய நேசத்தையும், உண்மையான அக்கறையையும் அவரது எதிரிகள்கூட மறுக்க முடிந்ததில்லை. சாவேஸ் மக்களுடன் நேருக்குநேர் உரையாடி, அவர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் “ஹலோ பிரசிடென்ட்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி இதற்கு சான்றாக அமைந்தது.

கல்வி, மருத்துவம் போன்றவற்றை மக்களின் அடிப்படை உரிமைகளாக சாவேஸ் மாற்றியதை எதிர்க்கவும் முடியாமல், இத்துறைகளிலிருந்து தனியார் முதலாளிகள் விரட்டப்பட்டதை ஏற்கவும் முடியாமல் தவித்தனர் அமெரிக்க சார்பு முதலாளிகள், “மாதம் 25,000 ரூபாய் (450 டாலர்) தருகிறோம். நீங்கள் விரும்பிய வண்ணம் தரமான சேவையை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்” என்று ‘உங்கள் பணம் உங்களை கையில்‘ திட்டத்தைப் போலவே தனியார்மயத்தின் தந்திரத்தை கடைவிரித்துப் பார்த்தனர். மக்கள் மசியவில்லை.

வெனிசுலா மருத்துவத் துறை
இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகளில் மருத்துவமும், பொது சுகாதாரமும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வரும் வேளையில் சாவேஸ் அச்சேவைகளைத் தேசியமயமாக்கினார். கியூபா நாட்டைச் சேர்ந்த மருத்துவர்களால் பரிசோதிக்கப்படும் வெனிசுலாவின் ஏழைக் குழந்தைகள் (கோப்புப் படம்).

சாவேஸின் திட்டங்கள் வெனிசுலாவின் கஜானாவைக் காலியாக்கிவிடும் என்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் கடந்த பத்தாண்டுகளாகக் கூக்குரலிட்டுப் பார்த்தன. வெனிசுலாவின் பொருளாதாரம் கடந்த பத்து ஆண்டுகளில் சராசரியாக 5.8 % வளர்ச்சியைக் கண்டது. மானியவெட்டு, மக்கள் மீது வரிவிதிப்பை அதிகப்படுத்துவது, தனியார்மயம் போன்ற வழிமுறைகள் மூலம்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் தீர்வை சாவேஸ் பொய்ப்பித்தார். இதன் காரணமாக வெனிசுலாவின் முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற குரல்கள் நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகளில் எழத்தொடங்கின.

எண்ணெய், மின்சாரம், தொலைபேசி, சிமென்டு உற்பத்தி உள்ளிட்ட கேந்திரத் தொழில்துறைகளை பொதுச்சொத்தாக்குவது, மற்ற தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுடனான வணிகத்துக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வணிகத்துக்கு அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களைச் சார்ந்திருப்பதிலிருந்து விடுவிப்பது, தென் அமெரிக்காவைத் தனது சுதந்திர வர்த்தக வலையத்துக்குள் கொண்டு வர முயன்ற அமெரிக்காவின் சதியை முறியடித்து, தென் அமெரிக்கக் கண்டத்தின் நாடுகளுக்கான தனி வர்த்தக வலையத்தை உருவாக்கியது, உலக வங்கிக்குப் போட்டியாக தென் அமெரிக்க நாடுகளுக்கான ஒரு பொது வங்கியை உருவாக்கியது, தேசிய எல்லைகளைக் கடந்து தென் அமெரிக்கக் கண்டம் என்ற முறையில் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிராக நாடுகளை ஒன்றுபடுத்தியது, வணிகம்-இலாபம் என்ற முதலாளித்துவ அளவுகோல்களை நிராகரித்து வெனிசுலாவின் எண்ணெய், எரிவாயுவை கியூபாவுக்கும் பிற தென் அமெரிக்க நாடுகளுக்கும் மலிவு விலையில் வழங்கியது  போன்றவையெல்லாம் மிகவும் குறுகிய காலத்தில் சாவேஸ் நிகழ்த்திய சாதனைகள்.

வெனிசுலா ஆட்சிக் கவிழ்ப்பு
அமெரிக்க ஆதரவுடன் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து வெனிசுலா மக்கள் கார்கஸ் நகரில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம் (இடது); வெனிசுலா இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த சாவேஸ், மக்களின் போராட்டத்தையடுத்து விடுதலை செய்யப்படுகிறார் (கோப்புப் படம்).

இவையனைத்தும் வெனிசுலாவின் முதலாளித்துவ அரசமைப்புக்கு உட்பட்டு, முதலாளித்துவக் கட்சிகளையும், பெரும் தனியார் முதலாளிகளையும், அவர்களால் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு எந்திரத்தையும், 95% அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களையும் வைத்துக்கொண்டே செயப்பட்ட சீர்திருத்தங்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் இவர்கள் தடைக்கற்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

மென்மேலும் மக்களிடம் செல்வதன் மூலமும், தங்களுடைய கோரிக்கைக்கான போராட்டத்தில் அவர்களையும் ஈடுபடுத்துவதன் மூலமும் சாவேஸ் அவற்றை எதிர்கொண்டிருக்கிறார். முதலாளித்துவத்தைக் கட்டுப்படுத்துகின்ற, அதிகாரவர்க்கத்தின் அதிகாரங்களைக் குறைத்து மக்களின் அதிகாரத்தை அதிகப்படுத்துகின்ற சட்டங்கள், திட்டங்களைக் கொண்டுவரும்போது, அவை குறித்துத் தேசம் தழுவிய வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்பது என்ற முறையின் மூலம், எதிரிகளை அரசியல்ரீதியில் பலமிழக்கச் செய்திருக்கிறார்.

தேர்ந்தெடுத்தவர்களைத் திருப்பி அழைக்கும் உரிமை என்பதை வெனிசுலாவின் அரசியல் சட்டத்தில் சாவேஸ்தான் அறிமுகப்படுத்தினார். சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்ற அவதூறு பிரச்சாரத்தில் தொடங்கி ஆட்சிக்கவிழ்ப்பு வரையில் அனைத்தையும் முயன்று பார்த்த அமெரிக்க அடிவருடிகள், திருப்பி அழைக்கும் உரிமையையும் பயன்படுத்திப் பார்த்தனர். அதிலும் தோற்றனர்.

மாதுரோ
வெனிசுலாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாவேஸின் உற்ற தோழர் நிக்கோலஸ் மாதுரோ.

சாவேஸ் தன்னை ஒரு சோசலிஸ்டு என்றும் கிறித்தவர் என்றுமே சொல்லிக் கொண்டார். அவருடைய கட்சி பல்வேறு விதமான குட்டி முதலாளித்துவ, தேசியவாத, சோசலிச சக்திகளின் கூட்டணியாகவே இருந்தது. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெனிசுலாவின் விடுதலைப் போராளியான சைமன் டி பொலிவாரையே தனது வழிகாட்டியாக அவர் அறிவித்துக் கொண்டிருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு, தென் அமெரிக்க ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவை இணைந்த, கம்யூனிசத்தின்பால் பெருமதிப்பு கொண்ட ஒரு கண்ணோட்டம் சாவேஸை வழிநடத்தியது. தான் படைக்க விரும்புவது 21-ஆம் நூற்றாண்டின் சோசலிசம் என்று அவர் கூறிக்கொண்டபோதும், அதனை அவர் விளக்கவுமில்லை. ரசிய – சீன சோசலிசங்களுக்கு எதிராக நிறுத்தவுமில்லை.

“சாவேஸ் ஒரு புரட்சிகரமான தேசியவாதி. அவருடைய ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியத்தின் புரட்சிகரமான தன்மை அவரை சோசலிசத்தை நோக்கித் தள்ளிக்கொண்டே இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, தேசிய எல்லை கடந்து தென் அமெரிக்க கண்டத்தை ஒற்றுமைப்படுத்த முயன்ற பொலிவார், ஜோஸ் மார்டி ஆகியோர் விதைத்த மரபு சாவேஸின் பின்புலமாக அமைந்தது” என்று மதிப்பிடுகிறார் அஜாஸ் அகமது.

தனது கொல்லைப்புற சோதனைச்சாலையாக தென் அமெரிக்க நாடுகளைப் பயன்படுத்தி வரும் அமெரிக்கா, 1970-களில் தனது கைப்பாவை ஆட்சிகளைப் பல நாடுகளில் நிறுவியதுடன், 1980-களிலேயே தனியார்மய தாராளமயக் கொள்கைகளை அந்த நாடுகளில் சோதிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, 1980-களின் இறுதியில், ஆசிய நாடுகளில் புதிய தாராளவாதக் கொள்கை தீவிரமாக கடைவிரிக்கப்பட்ட காலத்தில், அங்கே “ஏகாதிபத்தியங்களின் கடையை மூடுவதற்கான” மக்கள் கலகங்கள் வெடிக்கத் தொடங்கி விட்டன.

இந்தப் பின்புலம் வலிமையானதொரு கம்யூனிஸ்டு கட்சியை அதிகாரத்துக்குக் கொண்டுவரும் அளவுக்கு மக்களைப் புரட்சிகரமான மாற்றத்துக்கு உள்ளாக்கவில்லை என்ற போதிலும், சாவேஸ் என்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆளுமையைத் தோற்றுவித்திருக்கிறது. “நானே சாவேஸ்” என்ற கதறியபடியே அவரது உடலைப் பின்தொடர்ந்து செல்லும் வெனிசுலாவின் உழைக்கும் மக்கள், சாவேஸ் தங்களைக் காலத்தால் முந்திக் கொண்டுவிட்டதைத் தம் கண்ணீரால் உணர்த்துகிறார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் வெனிசுலா அரசின் வழக்குரைஞர், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார். வெனிசுலாவில் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றிருந்த சாவேஸ், நிகழ்ச்சி முடிந்த பின் மேடையேறி, ஒரு சிறுமியிடம்

“நீ அணிந்திருப்பது என்ன உடை கண்ணு?” என்று கேட்க, நான் ஒரு மாஜிக் நிபுணர்” என்று பதிலளித்தாள் அந்தச் சிறுமி.
“அய்யோ, அப்படியானால் என்னை காணாமல் போக வைத்து விடுவாயா?” என்றாராம் சாவேஸ்.
“இல்லை. உங்களைப் போலவே பல பேரை உருவாக்கிக் காட்டுவேன்” என்றாளாம் அந்தச் சிறுமி.

அந்தச் சிறுமி சொன்னதைத்தான் வெனிசுலா மக்கள் எதிரொலிக்கிறார்களோ!

– சூரியன்

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________