Sunday, June 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 769

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1. லிபியா- அமெரிக்காவின் மறுகாலனியாகிறது!

2. ராஜீவ் கொலை வழக்கு- தூக்கு மேடையில் நிற்கிறது அரசியல் நியாயம்.

3. டோல்கேட் வழிப்பறி- தனியார்மயக் கொள்ளை!

4. தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு எதிராக….

5. அண்ணா ஹசாரே- கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!

6. அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது!

7. தனியார் கல்வி நிறுவனமா? கொலைகாரக் கூடாரமா?

8. நார்வே படுகொலைகள்- நவீன நாஜிசத்தின் கோரத் தாண்டவம்.

9. 108 ஆம்புலன்ஸ்- சேவையா? சுரண்டலா?

10. இலண்டன்: ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும்

11. தமிழக பட்ஜெட்- வருமானத்திற்கு வரி, சாராயம் கவர்ச்சிக்கு இலவசத் திட்டங்கள்

12. சமச்சீர் கல்வி- போராட்டத்தால் விளைந்த வெற்றி!

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!

25

ந்தியாவில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களை செம்மைப்படுத்த வேண்டும், அது பன்னாட்டு கல்வி நிறுவனங்களினால் மட்டுமே சாத்தியம் என்ற முழக்கத்தோடு எஞ்சியிருக்கும் அரசு கல்வி நிறுவனங்களையும் அடியோடொழிக்க, கல்விக்கான  மசோதாக்களை நமக்குத் தெரியாமல் அமல்படுத்தப் போவதை அம்பலப்படுத்தவே இக்கட்டுரை.

மைய அரசின் நேரடிக் கண்காணிப்பால் இயக்கப்படும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மாநில அரசால் நடத்தப்படும் அறிவியல், கலை,  பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அவற்றின் ஆராய்ச்சி நிறுவனங்கள், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்லூரிகள், தனியார் ஆராய்ச்சி மையங்கள், பாலிடெக்னிக்குகள்,  தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், திறந்த நிலைப் பல்கலைக் கழகங்கள் போன்ற அனைத்தும் உயர்கல்வி நிறுவனங்கள் என்கிற வரையறைக்குள் அடங்கும்.

47க்குப் பிந்தைய இந்தியாவில் சில நூறு உயர்கல்வி நிறுவனங்களே இருந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் கல்வி தனியார்மயமானதன் முலமாக அவற்றின் எண்ணிக்கை புற்றீசல்களைப் போல முளைத்து  ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் வளர்ந்துள்ளது. மத்திய  மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்கலைக் கழகங்களே தரங்கெட்டுப் போயுள்ள நிலையில், மக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே பல தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, அனைவருக்கும் இலவசக் கல்வியளித்தல் என்ற தன் அடிப்படைக் கடமையிலிருந்து இவ்வரசு விலகியுள்ளதை அதன் நடைமுறையிலிருந்து நாமறிவோம்.

இதற்கெல்லாம் மேலாக உலக வர்த்தகக் கழகம் மற்றும் உலக வங்கியின் ஆணையின் பேரில் கடந்த ஆண்டில் (2011) உயர்கல்விக்கான பல சட்ட முன்வரைவுகளைக் கொண்டுவந்துள்ளது மைய அரசு. அவற்றில் புத்தாக்கத்திற்கான பல்கலைக்கழக சட்டமுன்வரைவு – 2010 (Universities for innovations Bill – 2010), கல்வித்தீர்ப்பாயங்களுக்கான சட்டமுன்வரைவு (Educational tribunals Bill – 2010), பன்னாட்டுக் கல்விநிறுவனங்களுக்கான சட்டமுன்வரைவு (Foreign educational institutions bill – 2010) அகிய மூன்று உட்பட மொத்தம் 16 வகையான உயர்கல்விச் சட்டமுன்வரைவுகளைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக மேற்சொன்ன மூன்று சட்டமுன்வரைவுகள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கு வந்து சந்தை போடவும், அதன் மூலம் அமைக்கப் பெறும் கல்வித் தீர்ப்பாயங்களுக்கு நிகரில்லா அதிகாரம் கொடுக்கவும் ஒட்டுமொத்தமாக உயர்கல்வியில் மாணவர்களை முடமாக்கப் பார்க்கவும் வந்துள்ள திட்டங்களாகும்.

உலக அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் கிளைகளை இங்கு கொண்டு வந்து நமது உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் புத்துயிரூட்டலாம் மேலும் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை உலகத்தரத்திற்கு கொண்டுவரலாம், என்ற நோக்கத்திற்காக, 2010 ஆம் ஆண்டின் மத்தியில் புத்தாக்கத்திற்கான பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதை வரைவுத்திட்டத்தின் மூலமாக இச்சட்டமுன்வரைவுகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கொண்டு வந்தது. இவ்வகையான பல்கலைக்கழகங்கள் இந்தியாவை அறிவுத் துறைக்கான மையமாக மாற்ற வழிவகுக்கும் என்றும் மத்திய மாநில பல்கலைக் கழகங்களில் தனித் தன்மையான சிறப்புத்துறைகள் ஆரம்பிக்கப்பட்டு இந்தியாவில் காணப்படும் குறிப்பிட்ட சமூகப் பிரச்சினைகளுக்காக ஆராய்ச்சிகள் மேம்படுத்தப்படும் எனவும் இவ்வறிக்கைகள் கூறுகின்றன.

காட் ஒப்பந்தத்தின் மூலம் வரி மற்றும் வணிகத்துறையில் நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள், வணிகம் தொடர்பான சேவைத்துறைகளின் பொது ஒப்பந்தத்தின் மூலம் (GATS – General agreement of trade on services) சேவைத்துறகளான தொலைபேசி, மின்சாரம், வங்கி, காப்பீட்டு நிறுவனம், மருத்துவம், ஆராய்ச்சி, நீதிமன்றங்கள், ஊடகங்கள், கல்வி போன்ற அனைத்திலும் தனது தனியார்மயமெனும் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி காவு வாங்க ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு நீட்சியாகவே இந்த சட்ட முன்வரைவுகள் உயர்கல்வி நிறுவனங்களிலும் தனது அமெரிக்க விசுவாசத்தின் மூலம் பல பன்னாட்டு உயர்கல்வி நிறுவனங்களை கல்லா கட்ட கூவி அழைக்கின்றன. கரும்பு தின்னக் கூலியா என்பது போல வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களும் தனது கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் அனைவரையும் அடிமையாக்க திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றன.

அந்நிய நேரடி முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் இவை, மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதிலிருந்து இப்பல்கலைக்கழகங்களில் சேர அவர்கள் கட்டவேண்டிய கட்டணம், செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம்,தேவையான துறைகளை ஆரம்பிப்பது, புதிய பாடத்திட்டங்களை அமைப்பது, ஆசிரியர்களை நியமிப்பது,  நிர்வாகத்தின் மற்ற வேலைகளுக்கு ஆட்களை நியமிப்பது, அவர்களின் சம்பளம், அவர்களுக்குள் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்ற அனைத்தையும் குறிப்பிட்ட  பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களே கவனித்துக்கொள்வதற்கான முழு அதிகாரத்தையும் இச்சட்ட முன்வரைவு கொடுக்கிறது. மேலும் இக்கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளுக்காகப் பெறும் காப்புரிமையும் அந்தந்த நாட்டைச் சேர்ந்த பல்கலைகழகங்களே உரிமை கோரும் என்பது உட்சபட்சம்.

ஏற்கனவே எய்ம்ஸ், ஐ.ஐ.டிக்கள் போன்ற மத்தியக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தாமல் தனது ஆதிக்க சாதி மனபான்மையை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டிய இவ்வரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப்பல்களைக் கழகங்கள், தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்க அனுமதியளித்ததன் மூலம் அங்கும் இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்தது.  தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் அக்கல்விநிறுவனங்களில் நுழையாத அளவிற்குச் சவக்குழிவெட்டி நவீனத்தீண்டாமையைக் கடைபிடித்து வருகிற நிலையில், அது மேலும் புற்றுநோய் போல இப்புதியப் பல்கலைக் கழகங்களிலும் பரவவிருக்கிறது.

தற்போதைய உயர் கல்வி நிறுவனங்களில் இருப்பது போல மாணவர்களுக்கிடையில் தேர்தலோ, மாணக்க உறுப்பினர்களை முக்கிய முடிவெடுக்கும் சிண்டிகேட் கூட்டங்களில் நுழையவோ இப்பல்கலைக்கழகங்களில் அனுமதியில்லை. இவ்வாறு ஆரம்பிக்கப்படும் புத்தாக்கப் பல்கலைக்கழகங்கள் தங்கள் வரவு செலவு கணக்குகளை யாரிடமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை, இன்னும் சொல்லப் போனால் இப்பல்கலைக் கழகங்களை நடத்துபவர்கள் மீது ஏதேனும் ஊழல் நடந்திருக்கிறது போன்ற நம்பகத்தகுந்த தகவல்கள் வந்தால் கூட அதை சி.பி.ஐ அல்லது மத்திய  கணக்குத் தணிக்கை அலுவலகம் (CAG)  தலையிட்டு அதன் நிதி விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் கிஞ்சித்தும் இல்லை.

கல்விக்கானத்தீர்ப்பாயச் சட்டமுன்வரைவு – 2010, இது மாநிலத் தீர்ப்பாயம், மற்றும் தேசியத் தீர்ப்பாயம் என இரண்டு படிநிலைகளைக் கொண்டுள்ளது, இவை முறையே மூன்று மற்றும் ஆறு பேர் கொண்ட கமிட்டியை உள்ளடக்கியதாகும். பல்கலைக்கழகத்தின் பங்குதாரர்களான மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் போன்றவர்களுக்குள் எழும் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கவும், இத்தீர்ப்பாயம் குற்றவாளி என்று கருதுபவர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டிக்கவும் வரைமுறையில்லா அதிகாரத்தைக் கொடுக்கிறது இம்மசோதா. தீர்ப்பாயங்களின் முடிவே இறுதியானது, வேண்டுமானால் சிறப்பு அனுமதியுடன் உச்சநீதிமன்றம் அனுகலாம்.

இவ்வாறு பல்வேறு சட்டங்களின் மூலம் அனைவரது உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறித்துள்ள அரசு, இத்தீர்ப்பாயத்தின் மூலம் குறைந்தபட்சம் எஞ்சியிருக்கும் ஜனநாயகத்தையும் பறித்துக்கொண்டு, நம்மை அம்மணமாக்கும் நிலையும் வரப்போகிறது. இச்சட்டமுன்வரைவைக் கொண்டுவரபோவதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்சியினரையும் கூட்டி கருத்துக்கணிப்பு கேட்டுள்ள நிலையில் சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற போலி கம்யூனிஸ்டுகள் உட்பட எஸ்.யு.சி.ஐ, தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்துக் கட்சிகளும் இப்பகாசுர 16 சட்டமுன்வரைவுகளை எதிர்க்கவோ, அதைப் பற்றி வாய்த்திறக்கவோ, குறைந்தபட்சம் தன்னுடைய கட்சித் தொண்டர்கள் அல்லது கீழ்க்கமிட்டிகுக் கூட தெரிவிக்காதது ஆச்சரியப்படத்தக்கதல்ல.

உயர்கல்வி விஷயத்தில் கொண்டுவரப் போகிற இந்த சட்டமுன்வரைவுகள் மூலம் கடைசியாக மீதமிருக்கும் அரசுக் கல்லூரிகளையும் ஒழித்துவிட்டு பணம் இருப்பவர்கள் மட்டுமே இனி கல்வி கற்கலாம் என்கிற நிலை இன்னும் கூடிய விரைவில் வரப்போகிறது என்பதுடன் இடஒதுகீட்டை முற்றிலுமாக ஒழிப்பது,  கோடிகளில் கொள்ளையடிப்பது, தீர்ப்பாயங்களின் ஏகபோக அதிகாரம், மிச்ச சொச்ச சமூக நீதியை ஒழிப்பது போன்ற அபாயங்களும் நிகழவுள்ளன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாக்கி வரும் நிலையில், உயர்கல்விகான இச்சட்ட முன்வரைவுகள் சேவைத்துறையில் சோரம் போக வழிவகுப்பதுடன், நமது அறிவு வளத்தையும் திருடிக்கொண்டு போகப்போவது,  வெகுதொலைவில் இல்லை. மேலைநாட்டு கலாச்சாரங்களையும், பழக்கவழக்கங்களையும் பரப்புவதன்  மூலம் இன்று இருக்கும் அந்நிய மோகத்தை மேலும் வெறியாக்கி வளர்க்கவும், மாணவர்களை அதிக விலைபோகக்கூடிய பண்டமாக மாற்றவும் இறுதியில் கிஞ்சித்தும் சமூக அக்கறை இல்லாத, முடமாக்கப்பட்ட சமூகமாக மாற்றும் அபாயமும் உள்ளது.

தீவிர நிதி நெருக்கடியால் பாதிக்கப்படுள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தங்கள் கல்விச் சந்தையைத் திறக்கவே இச்சட்டத்தை இங்கு அமுல் படுத்த  நெருக்கடியைக் கொடுக்கின்றன என்பதுதான் நிதர்சனம். ஆனால் ஏதோ நமது குழந்தைகளின் எதிர்காலத்தில் பெரிய அக்கறை இருப்பது போலவும் அதற்காகத்தான் இக்கழிசடை மசோதாக்கள் வரவிருப்பதாகவும் ஒரு போலி பிம்பத்தை இவ்வரசு உருவாக்கி வருகிறது. இந்த அபாயச் சங்கைக்  குறிப்புணர்ந்து  போராடப் போகிறோமா அல்லது மேலும் இருளில் மூழ்கிச் சாகப்போகிறோமா என்பது நமது கையில்தான் உள்ளது.

______________________________________________________________

குட்டக்கொழப்பி
______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் கருப்புப் பண மோசடிகள்!

13

பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் கருப்புப் பண மோசடிகள்!

லக வரலாற்றில் இடம் பெற்றுள்ள அதிகார வர்க்க காமெடி பீஸ்கள் அனைவரும் இரண்டு முறை ‘பல்பு’ வாங்கியவர்களாகவே இருக்கிறார்கள். முதல் முறை இந்த ‘கைப்புள்ளை’களின் வருகை சோகக் கதையாகவும், மறுமுறை கேலிக் கூத்தாகவும் அமைகிறது என்பது விதி.

இதற்கு சமீபத்திய உதாரணம், சுவாமி ராம்தேவ் (Swami Ramdev), அல்லது பாபா ராம்தேவ் என்றழைக்கப்படும் ‘வண்டு முருகனி’ன் கதை.

‘இவரு இதுக்கு சரிப்பட மாட்டாரு…’ என எவ்வளவுதான் கார்ப்பரேட் ஊடகங்கள் அடித்து விரட்டினாலும், ‘நானும் ரவுடிதான்’ கணக்காக எப்படியாவது ஊழல் ஒழிப்பு – கறுப்புப் பண மீட்பு போராளியாக ஜீப்பில் ஏறி விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் பாபா ராம்தேவ். அதனால்தான் வரும் செப்டம்பர் 20-ம் தேதி இரண்டாம் கட்ட யாத்திரையைத் தொடங்கப் போவதாக செய்தியாளர் கூட்டத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

உண்மையில் செய்தியாளர்கள் இந்தக் கைப்புள்ளயை தேடிச் சென்றது, ‘எப்போது ஊழலை ஒழிக்க – கறுப்புப் பணத்தை மீட்க யாத்திரை செல்வீர்கள்?’ என்று கேட்பதற்காக அல்ல.

உத்தரகண்ட் மாநிலம் அரித்துவாரில் உள்ள பதஞ்சலி யோக பீட அறக்கட்டளை, திவ்ய யோக மந்திர் அறக்கட்டளை, பாரத் ஸ்வாபிமான் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிலிருந்து ரகசியமாக பணம் வருவதாக கும்பகர்ண உறக்கத்திலிருந்து திடீரென்று கண் விழித்த அமலாக்கத் துறை ‘கண்டுபிடித்திருந்தது’. எனவே இந்த மோசடியில் ஈடுபட்ட, இந்த அறக்கட்டளைகளை நடத்தி வரும் பாபா ராம்தேவ்வின் மீது அன்னிய செலாவணி விதிமுறை மீறல் தடை சட்டத்தின் கீழ் ‘சட்டப்படி’ வழக்கு பதிவு செய்திருந்தது.

தவிர, ஆங்கிலேய தம்பதியரால் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தீவு, பாபா ராம்தேவ்வுக்கு பரிசாக அளிக்கப்பட்டிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்தத் தீவு அன்பளிப்பாகத்தான் வழங்கப்பட்டதா அல்லது வாங்கப்பட்டதா என்ற விவரத்தையும், லிட்டில் கும்ரே தீவில் செயல்படும் ராம்தேவின் சுகாதார மையம் குறித்த தகவலையும் இங்கிலாந்து அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இதுபோக இந்த வழக்கு தொடர்பாக மடகாஸ்கர் தீவில் உள்ள அதிகாரிகளிடமும், பாபா ராம்தேவ் சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் இயக்குனர்கள், அவற்றின் வர்த்தப் பங்குகளின் நிலை, அவற்றை வைத்துள்ளவர்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் விசாரித்து வருகின்றனர். கையோடு இந்தக் கைப்புள்ளையின் சீடரான சுவாமி பாலகிருஷ்ணன் மீது பாஸ்போர்ட் விஷயமாக ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலி படிப்புச் சான்றிதழ் கொடுத்து இந்தச் சீடர் பாஸ்போர்ட் வாங்கியிருக்கிறாராம்.

சுருக்கமாக சொல்வதென்றால் எந்தக் கறுப்புப் பணத்தை மீட்கப் போவதாக கடப்பாறையின் நுனியில் அமர்ந்தபடி பிரும்ம முகூர்த்தத்தில் தவம் செய்வதாக இந்தக் கைப்புள்ள பிலீம் காட்டுகிறதோ, அந்தக் கறுப்புப் பண பதுக்கலில் – கையாடலில் – பரிமாற்றத்தில் – மோசடியில் – அவரே ஈடுபடுவதாக அமலாக்கப் பிரிவு ‘கண்டுபிடித்து’ அது தொடர்பான விசாரணைக்கும் வெற்றிலை தாம்பூலத்துடன் அழைத்திருந்தது. இதைக் குறித்து கேள்வி கேட்கத்தான் செய்தியாளர்கள் சென்றனர். அப்போதுதான் ‘இரண்டாம் கட்ட ஊழல் ஒழிப்பு – கறுப்புப் பண மீட்பு யாத்திரை’யை தொடங்கப் போவதாக கிச்சுகிச்சு மூட்டினார்.

ஹவாலா ஏஜெண்டுகளாகவும், கறுப்புப் பண மோசடிக்கு துணை நிற்பவர்களாகவும் இந்தியாவிலுள்ள மடாதிபதிகளே – சாமியார்களே – யோக, லோக குருக்களே – செயல்படுகிறார்கள் என்பது சந்திராசாமியில் ஆரம்பித்து பிரேமானந்தா, ஜெயேந்திரன், நித்தியானந்தன் வரை நிரூபணம் ஆகியிருக்கிறது. அதாவது மடங்களையும், ஆஸ்ரமங்களையும் தொடங்குவதே ‘கறுப்பை’ வெள்ளையாக்கத்தான் என்பது அம்பலமாகியிருக்கிறது. இந்தப் பொறுக்கி லிஸ்டில் இடம்பெறும் தகுதி பாபா ராம்தேவுக்கு உண்டு என்பது அரசியலின் பால பாடத்தை பயிலும் குழந்தைக்கும் தெரியும். அப்படியிருக்க இப்போதுதான் இந்த ‘உண்மை’யை அமலாக்கப் பிரிவினர் கண்டுபிடித்திருக்கிறார்களாம். இதை ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளதாம்.

இந்த வழக்கும், விசாரணையும் எந்த லட்சணத்தில் இழுத்தடிக்கப்படும் என்பது பாபா ராம்தேவ்வின் தாடி உரோமத்துக்குக் கூட தெரியும். இந்தக் கைப்புள்ள வெளிநாடுகளுக்குச் சென்று வந்தது, வெளிநாட்டுச் சீடர்கள் அவருக்கு அதாவது அவரது டிரஸ்ட்டுகளுக்கு பணம் கொடுத்தது, அன்பளிப்பாக சொத்துகளை எழுதி கொடுத்தது முதலியவை ‘சட்டரீதியாக’ செய்யப்பட்டுள்ளன. தவிர அறக்கட்டளைகளை பதிவு செய்யும்போது ‘விவரங்களை’ கொடுத்துதான் பதிவு செய்வார்கள். சட்டமீறல்கள் இருந்திருந்தால், அப்பொழுதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தொடை தட்டி இப்போது ‘விசாரணை’ நடத்துவது சும்மா பயங்காட்டத்தான் என்பதை இந்த பொறுக்கி குரு மட்டுமல்ல, இவரை பிளாஷ் லைட்டில் காட்டும் கார்ப்பரேட் ஊடகங்களும் நன்றாகவே அறிவார்கள்.

அதற்கேற்ப டிரஸ்ட்டுகளின் சார்பில், டாக்டர் வேத் பிரதாப் வைதிக் என்பவர், ‘சட்டப்படி எல்லா நடவடிக்கைகளையும் எதிர்கொள்வோம். அரசு வேண்டுமென்றே, இத்தகைய கெடுபிடிகளை செய்து வருகிறது. அரசுக்கு முன்பே இந்த விவரங்கள் தெரியும் என்றால், ஏன் அப்பொழுதே நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கர்ஜித்திருக்கிறார். அதனால்தான் ஒருநாள் கூத்தாக இந்த விசாரணை வைபவத்தை ‘காட்டி’ முடித்துவிட்டார்கள்.

இந்த இடத்தில்தான் ஒரு கேள்வி எழுகிறது.

நியாயமாக பார்த்தால், இந்தக் கைப்புள்ள வரும் 20-ம் தேதி மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கும் இரண்டாம் கட்ட யாத்திரையை இந்திய காட்சி ஊடகங்கள் அனைத்தும் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும். ஏனெனில் பணம் காய்ச்சி மரமாக இப்போதைக்கு காட்சி ஊடகங்களுக்கு இருப்பது ‘ஊழல் ஒழிப்பு – கறுப்புப் பண மீட்பு’ என்ற வார்த்தை விளையாட்டுதான்.

இத்தனைக்கும் இந்த பணம் காய்ச்சி மரத்தை கண்டுபிடித்தது எப்படியெல்லாம் சட்டப்படியும் – சட்டத்துக்கு புறம்பாகவும் சுரண்டலாம் என்று ரூம் போட்டு திட்டமிடும் தொழில்முறை வல்லுனர்கள் அல்ல. ‘ஒரு சாதாரண’ குணச்சித்திர நடிகர். அதுவும் கைக்குட்டை நனையும் அளவுக்கு பார்வையாளர்களை அழ வைப்பதில் கில்லாடிகளான பீம்சிங் பட கம்பெனி ஆர்ட்டிஸ்டுகள் எஸ்.வி.ரங்காராவ், நாகைய்யாவை விட பலே கில்லாடியான ஒரு ப்ரெஷ் பீஸ் புனிதர். அவர்தான் அண்ணா ஹசாரே. 12 நாட்களுக்கு நான் – ஸ்டாப் ஆக அவர் உருண்டு புரண்டு நடித்ததை பார்த்து காட்சி ஊடகங்களே மிரண்டுவிட்டன. தேசியக் கொடியால் கண்ணீரை துடைத்தபடி கை வலிக்க வலிக்க ரசிகர்கள் கைதட்ட, காட்சி ஊடகங்களின் கல்லா பெட்டி திருப்பதி உண்டியல் கணக்காக நிரம்பி வழிந்தது. ஒரே இரவில் ‘ஜன் லோக்பால்’ என்ற வார்த்தை ஒவ்வொரு ரசிகராலும் பல லட்சம் முறை ஜெபிக்கப்பட்டது.

எனவே கோடி முறை விஷ்ணு சகஸ்ரநாமம் – லலிதா சகஸ்ரநாமத்தை ஜெபித்தாலும் அடைய முடியாத லட்சுமி கடாச்சத்தை ‘ஜன் லோக்பால்’ நாமாவளி ‘சிங்கிள் வாய்ஸில்’ தருவதை பார்ப்பன ஊடகங்கள் அனுபவப் பூர்வமாகவும், விஞ்ஞானப் பூர்வமாகவும் உணர்ந்து கொண்டன. எனவே வணிகச் சின்னமாக மாறிவிட்ட ‘ஊழல் ஒழிப்பு – கறுப்புப் பண மீட்பு’க்காக இந்தக் கைப்புள்ள மேற்கொள்ளப் போகும் இரண்டாம் கட்ட போராட்டத்தை காட்சி ஊடகங்கள் பிரைம் டைமில் ஹைலைட் செய்ய வேண்டும்.

ஆனால், செய்யவில்லை. தயக்கத்துடன் இருக்கிறார்கள் அல்லது பின் வாங்குகிறார்கள். அது ஏன்?

காரணம், நாடக மேடையில் கோமாளி அவ்வப்போதுதான் வர வேண்டும். அவனே முக்கிய கதாபாத்திரமாக மாறி விடக் கூடாது. அப்படி மாறி விட்டால், உணர்ச்சிப்பூர்வமான கட்டங்கள் நமத்துப் போய்விடும். இதற்கு உதாரணம், இந்தக் கைப்புள்ள கடந்த ஜூன் 4-ம் தேதி அன்று மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகையால் சிலாகிக்கப்பட்ட இந்த யோக குருவால், 10 நாட்களுக்கு மேல் கோலாகலமாக விளம்பரம் செய்யப்பட்ட மாபெரும் உண்ணாவிரத கலை நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. சுருண்டு விழுந்துவிட்டார். ஓபனிங்கும் சரியில்லை. ஃபினீஷிங்கும் சரியில்லை. அடித்த கைப்புள்ளைக்கே இந்தக் காயம் என்றால், அடி வாங்கிய – இந்த காமெடி பீஸை நம்பி ஏகத்துக்கு முதலீடு செய்திருந்த – கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எவ்வளவு காயம் ஏற்பட்டிருக்கும்?! தங்கள் தலையில் அடித்தபடி அப்போதுதான் தீர்மானித்தனர்: ‘ம்ஹும்… இவரு இதுக்கு சரிப்பட மாட்டாரு…’

இதன் பிறகுதான் அண்ணா ஹசாரே என்ற குணசித்திர நடிகர் இரண்டாவது முறையாக மேடையில் ஏற்றப்பட்டார். ‘கொடுத்த காசுக்கு மேலயே நடிக்கும் நடிகரைப் போல்’ நெகிழ்ச்சியுடன் நடித்து, பாபா ராம் தேவ்வால் காட்சி ஊடகங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டியதுடன் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக 288 மணி நேரங்களுக்கு விடாமல் ஒளி(லி)பரப்பப்பட்ட மெகா ஹிட் எபிசோடையும் வழங்கினார்.

எனவே தெரிந்தே ஒரு மொக்கையை மீண்டும் ஃபோகஸ் செய்ய வேண்டுமா… அண்ணா ஹசாரே மூலம் கிடைத்திருக்கும் வசூலில் இருந்து ஒரு பகுதியை கடலில் கரைத்த பெருங்காயமாக இழக்க வேண்டுமா என்று யோசிக்கிறார்கள்.

இந்த டம்மி பீஸாவது தனக்கு படியளிக்கும் கார்ப்பரேட் பரமன்களின் எண்ணத்தை அறிந்து சும்மா இருக்கலாம். அதை விட்டுவிட்டு செப்டம்பர் 3 அன்று செய்தியாளர்களின் முன்னால் ‘அண்ணா ஹசாரேவுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது சந்தேகமே. ஹசாரே உண்ணாவிரததத்தை தொடர்ந்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. ஹசாரேவின் எந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது? முன்பு ஒரு முறை அவர் ஏமாற்றப்பட்டார். பிரதமர், நீதித்துறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் லோக் பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று ஹசாரே போராட்டம் நடத்தினார். அரசு அவரது கோரிக்கையை ஏற்பதாக கூறிய போது, போராட்டத்துக்கு 50 சதவீத வெற்றி கிடைத்ததாக ஹசாரே கூறினார். ஆனால், இது வெற்றியின் முதல் படிதான் என்பது எனது கருத்து. அதிகாரத்தில் உள்ளவர்களால் ஹசாரே வஞ்சிக்கப்பட்டுள்ளார். உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுமா என்பது ஐயமே…’  என்று தாடியை தடவியபடி சகலருக்கும் தெரிந்ததை பேசியிருக்கிறார்.

அநேகமாக இதைக் கேட்டு காட்சி ஊடகங்களும், பன்னாட்டு தரகு முதலாளிகளும் அலறியிருக்க வேண்டும். ஏனெனில் ‘மாபெரும் உண்ணாவிரத போராட்ட கலைநிகழ்ச்சியின் பார்ட் 3’ஐ எடுக்க அவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். இதற்காக தொழில்முறை சுரண்டும் வல்லுனர்கள் குழு, பக்காவாக ஷாட் பை ஷாட் ஆக திரைக்கதை எழுதி வருகிறது. முந்தைய வசூல் ரெக்கார்டை முறியடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அவர்கள் 24 மணிநேரங்களும் உழைத்து வருகிறார்கள். இப்படி ப்ரீ புரொடக்ஷன் நடந்து வருகையில் – ஆராவாரமாக நாள், நட்சத்திரம் பார்த்து படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்னர் – இப்படியா ‘ஜஸ்ட் லைக் தட்’ அறிவிப்பது?

எனவேதான் ‘ம்ஹும்… இவரு இதுக்கு சரிப்பட மாட்டாரு…’ என அவர்கள் கழட்டி விட்டுவிட்டார்கள்…. ஆனாலும்

இப்படி காமெடி பீஸாக இருப்பதாலேயே பாபா ராம்தேவ்வை கார்ப்பரேட்டுகளும், பன்னாட்டு தரகு முதலாளிகளும், காட்சி ஊடகங்களும் கையாள்வது போல் உழைக்கும் மக்களும் அணுக முடியாது. ஏனெனில் கைப்புள்ளையாக இருந்தாலும், பாபா ராம் தேவ் அதிகார வர்க்க கைப்புள்ளை. கறுப்புப் பணமாக திரளும் பணத்தின் புரோக்கர். ‘பாரத் சுவாபிமான் ஆந்தோலன்’ என்ற அமைப்பை நிறுவி ஊழலை ஒழிப்பதாகவும், கறுப்புப் பணத்தை மீட்பதாகவும் பிலீம் காட்டும் பரதேசி. ‘சுதேசி சிக்சா, சுதேசி சிகித்சா’ என்ற முழக்கங்களுடன் இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும் என்றும் இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும் என்றும் பகிரங்கமாக போராடி வரும் விஷப் பாம்பு.

விஷப் பாம்புகளில் காமெடி பீஸ், கைப்புள்ளை என்று ஏதாவது இருக்கிறதா என்ன?

_______________________________________________________

–  அறிவுச்செல்வன்
_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

“விளம்பரங்களில் ஆங்கிலம்”, “அரசியலில் மாணவர்கள்” – கேள்வி பதில்!

17

கேள்வி 1:
தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் விளம்பரங்களே அதிக நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்றன.தமிழ் மற்றும் அனைத்து இந்திய மொழிகளையும் பின் தள்ளிவிட்டு ஆங்கிலமே முதன்மையாக விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.விளம்பரங்களில் தமிழோ அல்லது வேறு இந்திய மொழி மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என இந்த விளம்பர கம்பெனிகளுக்கு நெருக்கடி கொடுத்து போராட யாரும் முன்வருவதில்லையே ஏன்??

கேள்வி 2:
70
களில் மாணவர் போராட்டங்களினால் ஆட்சியை பிடித்தவர்கள், இன்று மாணவர் உரிமைக்காக போராடுவதற்கு மாணவர்களை அணி திரட்டி போராட களத்திற்கு வருவதில்லையே ஏன்??

– புதுநிலா

அன்புள்ள புதுநிலா,

விஷத்தை ஆழகான வண்ண பாட்டிலில் வைத்து பாய்சன் என்று ஆங்கிலத்தில் காட்டுவதற்கு பதில் நஞ்சு என்று தமிழில் காட்டவைத்து நாம் சாதிக்கப் போவது என்ன? உங்கள் கேள்வியிலேயே விளம்பரங்கள் அதிக நேரம் ஆக்கிரமித்துக் கொள்வதாக கவலைப்படுகிறீர்கள். அப்படி இருக்கும்போது அதில் ஆங்கிலம் இருந்தால் என்ன, தமிழில் வந்தால் என்ன?

சாதாரண மக்களையும் உள்ளிட்ட அன்றாட வாழ்வில் ஆங்கிலம் இரண்டறக் கலந்து விட்டதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்தக் கலப்பு ஒரு இயல்பான மொழிக் கலப்பில் உருவானதல்ல. முதலாளித்துவத்தின் உலகமயத்தால் திணிக்கப்பட்ட ஒன்று. சமூவியல், பண்பாட்டு துறைகளில் உலகம் முழுக்க ஒன்றாக இருந்தால் மட்டுமே அவர்கள் விரும்பும் நுகர்வுக் கலாச்சார சந்தையை விரிக்க முடியும். அதற்கு தேசிய இனங்களின் பண்பாடுகளை திட்டமிட்டு அழிப்பதை அவர்கள் செய்கிறார்கள். அந்த வரிசையில் தேசிய இனங்களின் தாய் மொழிகளும் சிதைக்கப்படுகின்றது.

கார்ட்டூன் நெட்ஒர்க்கோ, இல்லை டபிள்யு.டபிள்யு.இ.வோ, இல்லை அமெரிக்க அடையாளங்களோடு வரும் வீடியோ கேமோ இவை போன்ற அமெரிக்க வார்ப்புகளோடுதான் நமது குழந்தைகள் வளர்கிறார்கள். பெற்றது நாமென்றாலும் வளர்ப்பது அவர்கள்தான். அமெரிக்க நகரங்கள், நதிகள், நட்சத்திரங்கள் தெரிந்த அளவுக்கு நமது மண் சார்ந்த, மக்கள் சார்ந்த வாழ்க்கைகள் குழந்தைகளுக்கு தெரிவதில்லை.

ஒரு நண்பரது மகனை சமீபத்தில் சந்தித்தேன். ஏழாம் வகுப்பு படிக்கும் அவன் சாலையில் செல்லும் எந்தக் கார்களையும் பார்த்த மாத்திரத்திலேயே அது முன்புறமோ, பின்புறமோ எப்படி இருந்தாலும் கம்பெனி, மாடல் முதலியவற்றை சரியாக சொல்லுவானென்று அவனது தந்தை பெருமையாகக் கூறினார். அதை சோதித்துப் பார்த்த போது உண்மைதான் எனத் தெரிந்தது. பிறகு அவன் வாழும் நகரில் ஓடும் நதியின் பெயரைக் கேட்டேன். அவனுக்கு தெரியவில்லை!

இது எப்படி நடந்திருக்கும்? தொலைக்காட்சியில் பார்ப்பது ஒன்று, பின்னர் உணவகங்கள், சுற்றுலா மையங்கள், ஷாப்பிங் மால்கள் என்று நடுத்தர வர்க்கம் பொழுதைக் கழிக்கும் வர்த்தக இடங்களிலெல்லாம் புதுக் கார்களை பார்க்க முடியும். இதிலிருந்து அவன் சுயமாகவே தனக்கு காட்டப்பட்டதை மனப்பாடம் செய்து தேறிவிட்டான். மேலும் கார் என்பது அந்தஸ்தான வாழ்வின் அடையாளம் காட்டும் பொருளென்ற வகையிலும் அவனுக்கு நெருக்கமாக இருக்கிறது. இப்படித்தான் நமது சிறார்களை முதலாளித்துவத்தின் நுகர்வுக்கலாச்சாரம் வளர்க்கிறது. ஆனால் சிறுவர்களை விட பெரியவர்கள்தான் இதில் வேகமாக வென்றெடுக்கப்பட்டு வருகிறார்கள்.

செல்பேசி, இணையம், திரைப்படங்கள், தொலைக்காட்சி, பல்பொருள் சூப்பர் அங்காடி, மல்டி கசின் உணவகங்கள் என்று நவீன வாழ்க்கையின் மைல்கற்கள் அனைத்திலும் உலகமய பண்பாடுதான் ஆட்சி செலுத்துகிறது. புதிய புதிய உடைகள், அணிகலன்கள், வாகனங்கள், வீட்டுப் பொருட்கள், வீடுகள் என்று இந்த முடிவுறா ஆட்டத்தில்தான் நடுத்தர வர்க்கம் தனது நேரத்தையும், பொருளையும் இழந்து வருகிறது. இப்படித்தான் தொலைக்காட்சிகளின் விளம்பரங்களில் ஆங்கிலம் இயல்பாக வருவதாக நினைக்கப்படுகிறது. அதை யாரும் உறுத்தலாகக் கருதுவதில்லை.

ஆகவே உள்ளூர் சமூக விசயங்கள், மனிதர்கள், வாழ்க்கைகள் எல்லாம் காலம் செல்லச் செல்ல அந்நியமாகிப் போகிறார்கள். அதன்படிப் பார்த்தால் இது மொழிப் பிரச்சினை என்பதை விட ஒரு மனிதனின் சமூக உணர்வு குறித்த பிரச்சினையாகிறது. படித்த நடுத்தர வர்க்கத்தினர் பலர் மேலாட்டமாக அரசியல் பேசுவதும், பாசிசத்தை ஆதரிப்பதும், ஊழலை ‘எதிர்ப்பது’, அநாதைகளை ஆதரிப்பது போன்ற அவர்களது தர்ம சிந்தனைகளுக்கும் இதுவே அடிப்படை எனலாம்.

ஆகவே இந்த திணிக்கப்படும் ஆங்கிலத்தை எதிர்க்கும் நமது போராட்டம் நமது மக்களுக்கு சமூக உணர்வையும், அரசியலையும் கற்றுத் தருவதிலேயே வெல்ல முடியும். என்னதான் நுகர்வுக் கலாச்சாரம் ஒரு மேகமூட்டமாக கவிந்து வந்தாலும், வாழ்க்கை எனும் சூரியன் உண்மையினை எடுத்துச் சொல்வதை மறைக்க முடியாதே? அதனால்தான் நுகர்வு மோகம் கொண்டிருக்கும் மக்கள் கூட ஒரு கட்டத்தில் “செலவுக்காக வாழ்க்கை, பொருளுக்காக வாழ்க்கை” என்பதின் சிரமங்களை புரிந்து கொண்டு, தாம் சுரண்டப்படுவதை உணர்கிறார்கள். இன்று ஆங்கிலப் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக அவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவதை பார்க்கலாம். அந்த வகையில் “வாழ்க்கைதான் மிகப்பெரிய உண்மை”.

___________________________________________________

70களில் மாணவர்களை அணிதிரட்டிப் போராடியவர்கள் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? தி.மு.கவையா?

1960களில் தமிழக மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை தி.மு.க அறுவடை செய்து கொண்டது வரலாறு. மற்றபடி அவர்கள் என்றுமே மாணவர்களை அணிதிரட்டி அரசியல் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தியவர்கள் இல்லை. 60களுக்குப் பிறகு கூட தி.மு.க தனது அரசியல் மேலாண்மை கருதி மாணவர் அணி வைத்துக் கொண்டு, கல்லூரி தேர்தல்களில் வெற்றி பெற்று வந்தாலும் அதை மாணவரிடையேயான அரசியல் பணியாக கருத முடியாது. இன்றும் கூட இத்தகைய வழிமுறைகளை காங்கிரசு, அ.தி.மு.க கட்சிகள் பின்பற்றுகின்றன.

அதாவது இவர்களது ஆதிக்கம் இருக்கும் ஊர்களின் கல்லூரிகளில், பகுதிகளில், அரசியல், பண செல்வாக்கு காரணமாக ஏரியா பிரமுகரின் வாரிசுகள் தேர்தலில் நிற்பதும், அதற்கென்று எம்.எல்.ஏ தேர்தல் போன்று செலவழிப்பதும் யதார்த்தம். மற்றபடி மாணவருக்கென்று இருக்கும் பிரச்சினைகளில் இவர்கள் போராடியது கிடையாது. ஒவ்வொரு கல்லூரிகளிலும்  இருக்கும் ஒரு சில மாணவர்களை வைத்தே இவர்கள் தமது செல்வாக்கை காட்டிக் கொள்கிறார்கள்.

தி.மு.கவின் ஆரம்ப அரசியல் காலங்கள் எல்லாம் கல்லூரிகளிலும், விடுதிகளிலும், ஏன் முடி திருத்தும் நிலையங்களிலும் வளர்ந்து வந்தன. இன்றைக்கு பழம்பெருச்சாளிகளாக இருக்கும் பல்வேறு தி.மு.க தலைவர்களெல்லாம் அப்படி மாணவப் பருவத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள்தான். அந்தக் காலம் ஒருவகையான மறுமலர்ச்சிக் காலம் போன்றது. படிப்பது, பத்திரிகை நடத்துவது, கூட்டங்களில் பேசுவது என்று அறிவுசார் இயக்கம் கொடிக்கட்டிப் பறந்த காலம்.

ஆனால் அண்ணாத்துரை காலத்திலிருந்தே இத்தகைய அறிவுசார் முனைப்புகள் எல்லாம் தொண்டர்களிடையே தத்தமது தனித்திறமையை காட்டிக் கொள்ளும் காரியவாதமாக மாறத் துவங்கியிருந்தது. மேலும் தி.மு.கவின் சமரசங்களும், காரியவாதமும் கூட அதன் தோற்றத்திலேயே வேர்விட்டிருந்தது. இருப்பினும் எளிய மக்களின் அரசியலை பேசும் இயக்கமாக அது தமிழகத்தில் குறிப்பிட்ட காலம் செல்வாக்குடன் இருந்ததையும் நாம் ஏற்க வேண்டும்.

இதைத்தாண்டி மாணவரிடையே ஒரு நீண்ட அரசியல் இயக்கமாக அது வளரவில்லை, வளர்ந்திருக்கவும் முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

தேசவிடுதலைப் போராட்டக் காலத்தில் சாதிரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் ஆண்ட பரம்பரைகளின் பிரதிநிதியாக விளங்கிய காங்கிரசு கட்சியில் அத்தகைய பின்னணியிலிருந்து மாணவர்களும் வந்தார்கள். காந்தியின் கோரிக்கையை ஏற்று படிப்பையும், பதவியையும் துறந்த சாதாரணமானவர்களும் உண்டு. ஆனால் காங்கிரசு, காந்தியின் சமரசப்பாதையினால் அது ஒரு வலுவாக மாணவர் இயக்கமாக வளரவில்லை. எதிர்மாறாக பகத்சிங் கொல்லப்படும் போது இந்திய மாணவர்களிடையே முதன்மையான நட்சத்திரமாக மிளிர்ந்தார்.

இதன் பாதிப்பை ஆரம்ப கால பொதுவுடைமை இயக்கங்களில் காணலாம். எனினும் காங்கிரசின் வாலாக செயல்பட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி காந்தியின் செல்வாக்கைத் தாண்டி மாணவரிடையே ஒரு சக்தியாக எழமுடியவில்லை. இருந்தபோதும் இன்றைக்கு போலிக்கம்யூனிஸ்டுக் கட்சியில் இருக்கும் தலைவர்கள் பலர் மாணவர் இயக்கங்களிலிருந்து வந்தவர்கள்தான்.

மேற்கு வங்கம், கேராளவில் சி.பி.எம்மின் அமைப்பு பலம் காரணமாக பரவலான கல்லூரிகளில் எஸ்.எஃப்.ஃஐ இருந்தாலும் அது மாணவரை அரசியல் ரீதியாக திரட்டும் அளவு உறுதியாக இல்லை. மற்ற மாநிலங்களில் குறிப்பாக ஆந்திரா, தமிழகம் போன்றவற்றில் போலிக் கம்யூனிஸ்டுகள் இதர ஓட்டுக் கட்சிகளைப் போல கல்லூரிக்கு ஓரிருவரை வைத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள். மாணவர்களின் தனிச்சிறப்பான கோரிக்கைகளுக்காக அவர்களை அணிதிரட்டி போராடுமளவு அவர்களுக்கு பலமும் இல்லை, நோக்கமும் இல்லை.

இன்றும் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பொதுவுடமை இயக்கம் சார்ந்த மாணவர்களே தேர்தலில் வெற்றிபெறுகிறார்கள். வட இந்தியாவில் குறிப்பாக இந்தி பெல்ட்டில் தமது அரசியல் பலத்தைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அகில பாரத வித்யார்தி பரிஷத் எனும் மாணவர் பிரிவை நடத்தி வருகிறது. நாட்டில் இருக்கும் மாணவர் அமைப்பிலேயே மிகவும் பிற்போக்கான இயக்கம் இதுதான். ஆசிரியர்களுக்கு குரு பூஜை, காதலுக்கு எதிர்ப்பு, முசுலீம் எதிர்ப்பு, ஹூசைன் எதிர்ப்பு என்று இவர்களது ‘போராட்டங்கள்’ அனைத்தும் அதன் திசைவழியைச் சொல்லும்.

மேலும் இவர்கள் ஆளும் வர்க்கங்களின் நோக்கத்திற்கேற்ற அரசியலைக் கொண்டிருப்பதனால் பல கல்லூரி நிர்வாகங்கள் ஏ.பி.வி.பியை வைத்திருக்கவே விரும்புகின்றன. அந்த வகையில் கல்வி முதலாளிகள் ஆசிபெற்ற சங்கமென்றும் இதனைச் சொல்லலாம்.

70களில் நெருக்கடி காலத்தின் போது ஜெயப்பிரகாஷ் நாராயணனது காங்கிரசு எதிர்ப்பு இயக்கத்தை ஏ.பி.வி.பி ஓரளவுக்கு அறுவடை செய்தது. பின்னர் ஜனதா ஆட்சி அமைப்பதற்கு காரணமான ஜெ.பியின் இயக்கத்திற்கு அம்பலப்பட்டு போன இந்திராவின் சர்வாதிகாரமும் ஒரு காரணம். மேலும் ரசிய சார்பு முதலாளிகள் இந்திராவையும், அமெரிக்க ஆதரவு முதலாளிகள் ஜனதாவையும் ஆதரித்தமையும் ஒரு முக்கியக் காரணமாகும்.

பிறகு அனைத்து ஒட்டுக்கட்சிகளும் பணத்தை இறைத்து தமக்கு மாணவர் அணி இருப்பதாக பிரமையை தோற்றுவிக்கின்றன. அ.தி.மு.க – காங்கிரசு – தி.மு.க முதலான கட்சிகளின் மாணவர் அணி போராட்டங்கள் என்று ஒரு செய்தியையோ, படத்தையோ நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கலாம். ஆனால் அதில் இருக்கும் கூட்டம் அனைத்தும் காசுக்கு அழைத்து வரப்பட்ட கூட்டம்தான். பல ஏழை மாணவர்களுக்கு இந்த முறையில் வருமானம் வருவதால் ஓட்டுக் கட்சிகளின் மாணவர் அணிகள் இன்றும் செவ்வனே ‘இயங்கி’ வருகின்றன.

60களின் பிற்பகுதியிலும், 70களின் முற்பகுதியிலும் இந்திய பொதுவுடமை இயக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாய் தோன்றிய நக்சல்பாரி இயக்கம் மாணவர்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. பல நூறு மாணவர்கள் படிப்பு, கல்லூரி, வாழ்க்கையை விடுத்து இயக்கத்தின் முழுநேர ஊழியர்களாக கிராமங்களுக்கு சென்றார்கள். மேற்கு வங்கம், பீகார், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா என்று பல்வேறு மாநிலங்களில் மாணவர் இயக்கம் காட்டாற்று வெள்ளமாய் திரண்டது.

ஆயினும் மார்க்சிய லெனினிய இயக்கம் செய்த தவறு மற்றும் ஆளும் வர்க்கத்தின் கொடூரமான அடக்குமுறை காரணமாக இயக்கம் பின்னடைந்தது. கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தோழர்களில் மாணவர்களும் கணிசமாக இருந்தார்கள். இக்காலமே இந்திய மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்ட காலமாக இருந்தது. இதன் பின்னர் நக்சல்பாரி இயக்கம் சிதறுண்ட போதும் பல்வேறு மாநிலங்களில் இருந்த பல்வேறு மா.லெ குழுக்களின் சமூக அடித்தளமாக மாணவர் இயக்கங்களே இருந்தன, இருக்கின்றன. மாவோயிஸ்ட்டுகள் தடை செய்யப்படுவதற்கு முன்னர் ஆந்திராவில் வலுவான மாணவர் இயக்கத்தை வைத்திருந்தார்கள். இன்றைய அதன் முழுநேர ஊழியர்கள் பலர் மாணவர் இயக்கங்களிலிருந்து வந்தவர்கள்தான்.

தமிழகத்தைப் பொறுத்த வரை இன்று மாணவரிடையே அமைப்பு ரீதியான பலமும், அரசியல் ரீதியான தலைமையும் கொண்ட நக்சல்பாரி இயக்கமாக ம.க.இ.கவின் தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திகழ்கிறது. ஈழம், சமச்சீர் கல்வி, மூவர் தூக்கு, தனியார் மயம், கட்டணக் கொள்ளை என்று பல்வேறு பிரச்சினைகளுக்காக பரவலான கல்லூரிகளில் இவ்வியக்கம் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தியிருக்கின்றது.

இன்று மாணவரிடையே சுயநிதிக் கல்லூரி முதலாளிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக அரசியல் பணிகள் பொதுவில் மந்தமடைந்துள்ளன. ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் முன்பை விட அரசியல் ஆர்வம் அதிகரித்துள்ளதையும் பார்க்கலாம். இவர்களும், சட்டக்கல்லூரி மாணவர்களும்தான் சமீபத்திய மூவர் தூக்கிற்கு எதிரான போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தினார்கள்.

தனியார் மயம், காசு இருப்பவனுக்குத்தான் கல்வி – வேலை என்ற சூழலில் மாணவர்கள் முன்பை விட அதிகம் அரசியல் ரீதியாக அணிதிரள்வதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. அதே நேரம் நுகர்வுக் கலாச்சார மோகம், சீரழிவு காரணமாக பண்பாட்டு சீர்கேடுகளும் அவர்களிடையே பரவி வருகிறது. எனினும் முந்தையக் கேள்விக்கு சொன்னது போல “வாழ்க்கைதான் மிகப்பெரிய உண்மை” என்ற அடிப்படையில் அந்த மயக்கங்களிலிருந்து மாணவர்கள் விடுபட்டு போராடுவார்கள், தமிழகத்தின் அரசியல் போக்கை நேர்மறையில் திசை திருப்புவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வல்லரசு இந்தியா கொலை செய்த 11 குழந்தைகள் !

5

வல்லரசு இந்தியா கொலை செய்த 11 குழந்தைகள் !லக நாடுகளைப் பொறுத்தவரை இந்தியாவில் மருத்துவம்  ஒரு ‘புகழ்’பெற்ற துறை.  இங்கு கிடைக்காத மருத்துவ வசதிகளே இல்லை. ஆபரேஷன் செய்த தடம் கூட இல்லாமல் சிறு துளைமூலம் அறுவைசிகிச்சை,  இதய சிகிச்சைக்கான சிறந்த வல்லுநர்கள், உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் தனிசிறப்பு பெற்ற “ஸ்பெஷாலிட்டி” மருத்துவமனைகள், குழந்தை பேறுக்கான சிகிச்சை மையங்கள் என்று இந்தியாவில்தான் மருத்துவங்கள் எத்தனை வகை! மருத்துவமனைக்குச் சென்றால் வீட்டுக்கு திரும்பி வரக்கூட விரும்ப மாட்டீர்கள் என்றெல்லாம் விளம்பரங்கள் வருகின்றன.

வெளிநாட்டினரை கவந்திழுக்க தனியாக மருத்துவ சுற்றுலா – அதாவது வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைவிட குறைந்த செலவில் இங்கு மருத்துவம் பெறுவதற்காகவே இதனை அரசாங்கம் தனியாகவே விளம்பரப்படுத்துகிறது. பெரியவர்களிலிருந்து கைக்குழந்தை வரை அதில் அடக்கம்.  அவ்வப்போது, செய்திதாள்களில் கூட பார்த்திருக்கலாம், ஒரு வெளிநாட்டுக் குழந்தை தாய் தந்தையின் அரவணைப்பில் சிரித்துக்கொண்டிருக்கும் – மருத்துவத்துக்காகவே இந்தியாவுக்கு பறந்து வந்த குழந்தையென்று தனியாகக் கட்டம் கட்டிப் போட்டிருப்பார்கள்.

ஆயினும் இந்த வசதிகளும் வாய்ப்புகளும் ஏழைகளுக்கு இல்லையென்றுதான் கடந்தவாரம் ஆந்திராவில் உயிரழந்த குழந்தைகள் மூலம் நிருபணமாயிருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் 11 குழந்தைகள், பிறந்து சில நாட்களேயான குழந்தைகள் இறந்திருக்கின்றன. ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பொது மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில்தான்  மனதை பிசையும் இந்த கொலைகள் நடந்திருக்கின்றன. அதே ஆந்திராவில் சாகக்கிடந்த சாயிபாபாவை உயிர் பிழைக்க வைத்த  அந்த ஆந்திராவில் 11 குழந்தைகள் இறந்தது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது இல்லையா?  கடந்தவாரத்தின் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில்  48 மணிநேரங்களுக்குள்ளாகவே   இக்குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்திருக்கின்றன.

இது தங்களது கவனக்குறைவினால் ஏற்பட்டதல்ல என்று ஆரம்பத்தில் மருத்துவமனையின் தரப்பிலிருந்து சொல்லப்பட்டாலும் உண்மை வேறாக இருந்தது. ஆக்சிஜன் போதாமையால் மூச்சடைத்து குழந்தைகள் இறந்ததாக தெரிவிக்கிறார்கள் பெற்றோர்கள்.மருத்துவமனை நிர்வாகத்துக்கு  இதனை சொல்லியும்  அவர்கள் கண்டுக்கொள்ளவேயில்லை.  குழந்தைகளை மிகவும் அபாயகரமான நிலையில்தான் கொண்டு வந்தார்கள் என்றும் அவர்களது ஆபத்தான நிலைதான் சாவுக்குக் காரணம் என்றும் வாதிட்டார்கள்.   இந்த மருத்துவமனையில் மொத்தம் 20 படுக்கைகள் இருக்கின்றன. ஆனால், எப்போதும் 30 குழந்தைகளாவது இருக்கும்.  அதோடு, ஆக்சிஜனுக்கான சாதனங்களில் இரண்டுதான் வேலை செய்யும். மீதி இரண்டு பழுதானவை.

“இது ராயலசீமாவின் பகுதியின் ஒரே  மருத்துவமனையாக இருப்பதால் நான்கு அல்லது ஐந்து மாவட்டங்களிலிருந்து வருகிறார்கள்.  போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும் அவர்களை திருப்பி அனுப்ப முடியாமல்  கவனித்துக்கொள்கிறோம். தேவையான மருத்துவ வசதிகளுக்காக  அரசாங்கத்தை அணுகியிருக்கிறோம் மேலும் இது குறித்து விசாரணை நடக்கும்” என்கிறார்  கர்னூல் மாவட்டத்தின் கலெக்டர் ராம்ஷங்கர் நாயக். ஆனால், அரசாங்கமோ இதற்கு நேர்மாறாக  சொல்கிறது.  ஆந்திராவின் குடும்பநல அமைச்சரான  ரவீந்திர ரெட்டி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கலெக்டர் அனுப்பிய ரிப்போர்ட்டில் டூட்டியில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் தங்களது சொந்த கிளினிக்கில் இருந்திருக்கின்றனர். இந்த கவனக்குறைவே குழந்தைகளின் மரணத்துக்குக் காரணம் என்றுசொல்லியிருப்பதாகக் கூறுகிறார். மேலும், இது மருத்துவர்களின் தவறாலேயும் கவனக்குறைவாலும்  நிகழ்ந்ததுதானென்றும் சொல்கிறார்

இப்படி இவர்கள் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கையில்  மருத்துவமனையிலிருந்து  ரிப்போர்ட்டை அனுப்பியிருக்கிறது, பிரபல மருத்துவர்களைக்கொண்ட குழுவொன்று.

அதாவது, மருத்துவமனையில் 16 இன்குபேட்டர்களும், 4 சூடேற்றிகளும், 4 வெண்டிலேட்டர்களும் பிற சாதனங்களும் இருக்கின்றன.  போதுமான அளவுக்கு மருந்துகளும் இருப்பில் உள்ளது,  கடந்த ஆக்ஸ்டு 30 -ஆம் தேதியும் செப்டம்பர் 1-ஆம் தேதியும் இறந்த 10 குழந்தைகளுள் ஒரு குழந்தைதான் அங்கேயே – அதாவது அந்த மருத்துவமனையிலையே பிறந்த குழந்தை.  அதில் 4 குழந்தைகள் குறிப்பிட்ட காலத்துக்கு முந்தி பிறந்தவை. மூச்சுத்திணறலின் காரணமாகவே  அனைத்துக் குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்று பிரபல  குழந்தை மருத்துவர்களைக் கொண்டு முதலமைச்சருக்காகத் தயாரிக்கப்பட்ட ரிப்போர்ட் கூறுகிறது.

இந்தியாவின் மருத்துவ வசதிகள் என்னதான் உலகமே மெச்சக்கூடியதாக இருந்தாலும் ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் இந்த வசதிகள் இல்லை. எங்கிருந்தோ வந்த குழந்தையானாலும் வசதியும் கையில் பணமிருந்தால் எந்த சிகிச்சையும் கிடைக்கும்.

இப்படி எவ்வளவோ வசதிகள் இங்கிருந்தும் அமெரிக்காவுக்கு பறக்கிறார் சோனியா. அவரைப் பற்றி கவலைப்பட  எத்தனை மீடியாக்கள், அரசியல்வாதிகள்!  ராமச்சந்திராவில்  மருத்துவம் பார்த்துவிட்டு மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் பறந்தார் ரஜினி. அவர் இட்லி சாப்பிட்டதும்,  தண்ணீர் குடித்ததும்,  நடந்ததும் தலைப்புச் செய்திகளாயின. அதோடு சிகிச்சை முடிந்து அவர் தனியாக நடந்து வந்ததை பார்த்து கோபமும் ஆவேசமும் கண்டனமும் தூள் பறந்தன.  செத்துப்போய் பலநாட்களான சாயிபாபாவுக்குத்தான் அலங்காரங்களும் அலப்பரைகளும் எத்தனை!

அதிகார வர்க்கமும், மேட்டுக்குடியும் மத பீடாதிபதிகளும் அதிஉயர் தொழில்நுட்பத்துடன் சிகிச்சை பெற்றுகொள்ள உழைக்கும் மக்களோ போதிய பாதுகாப்பும் வசதிகளும் இன்றி கால்நடைகளை கொட்டடியில் அடைப்பதுபோல அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சை என்பதைவிட கொலை செய்யப்படுகின்றனர் என்பதே பொருத்தமாக இருக்கும்.

உள்நாட்டில் மருத்துவர்கள் விகிதாச்சாரம் மிகக்குறைவாக இருந்தாலும் வெளிநாட்டுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைவதில்லை. இந்தியாவிலிருந்துதான் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு பணிபுரியச் செல்கின்றனர். அதிலும், ஊரகப்பகுதிகளுக்கு ஒரு வருடம் பணிபுரிய வேண்டுமென்று சொன்னதற்கே மருத்துவ மாணவர்கம் ஸ்டிரைக் செய்தனர். மருத்துவம், ஆசிரியர்  போன்ற தொழில்கள் அவற்றின் மகத்துவத்தை இழந்து பணம் பண்ணுவதற்கான தொழிலாக மாற்றியிருக்கிறது முதலாளித்துவம்.

ஆரம்பத்தில் சொல்லிய மருத்துவ சுற்றுலா வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வெளிநாட்டு பணம் படைத்த நோயாளிகள் மூலம்  அரசாங்கமும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறது.   இன்னும் வரும் வருடங்களில் இவர்களின் வரவு அதிகரிக்கலாமென்று  அதற்கான் முதலீடுகல், சொகுசு பங்களாக்கள், கலாச்சார சுற்றுலாக்கள் திட்டமிடப்படுகின்றன.  ஆனால், உழைக்கும் மக்களோ போதுமான வசதியின்றி மருத்துவமனை நிர்வாகத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பந்தாடப்படுகின்றனர். ஏனெனில், உழைக்கும் மக்களிடமிருந்து பறிப்பதற்கு எதுவுமில்லை உயிரைத்தவிர!

_______________________________________________________

– வேல்விழி

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

டெல்லி குண்டு வெடிப்பு : ஆரம்பிச்சுட்டாங்கையா !

87

புதுதில்லி உயர்நீதிமன்றத்தின் ஐந்தாவது வாயிலிற்கு வெளியே இன்று (7.9.2011) காலை 10.20அளவில் குண்டு வெடித்து 12 பேர் உயிரிழக்க, அறுபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் அருகாமை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். எவரும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்றத்தின் ஐந்தாவது வாயில்தான் முதன்மையான வாயிலென்பதால் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும், சேதம் அதிகமிருக்கும் என்று முன்னறிந்தே இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் சமீப ஆண்டுகளாக நிகழும் குண்டு வெடிப்பின் அரசியல் பரிமாணங்களை வினவில் பலமுறை எழுதியிருக்கிறோம். பொதுவில் அரச பயங்கரவாதம் மற்றும் இந்து மதவெறி பயங்கரவாதத்தின் எதிர் விளைவுதான் இத்தகைய பயங்கரவாதங்கள். எனினும் இதை யார் வைத்தார் என்று தேசவெறி ஊடகங்கள் சந்தேகமில்லாமல் எழுப்பும் இலக்குகளைத் தாண்டி பல குண்டுவெடிப்புகள் இந்துமதவெறி அமைப்புக்காளாலும் நடத்தப்பட்டிருக்கின்றன. இதனால் ஜிகாதி பயங்கரவாதம் இல்லை என்பதல்ல. ஆனால் எந்த குண்டு வெடித்தாலும், எந்த ஆதாரமும் இல்லாமல் உடனடியாக கைகாட்டப்படுபவை இசுலாமிய தீவிரவாத இயக்கங்கள்தான்.

தற்போதைய குண்டு வெடிப்பிற்கு கூட அர்கத் அல் ஜிகாத் இசுலாமி எனும் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டு மின்னஞ்சல் அனுப்பியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட கையோடு அவர்கள்தான் சந்தேகத்திற்கிடமற்ற குற்றவாளிகள் என்பதாக குற்றம் சாட்ட ஆரம்பித்து விட்டார்கள். இதில் டைம்ஸ் நௌ அம்பி ஆர்னாப் கோஸ்வாமி சாமியாடவே ஆரம்பித்து விட்டார்.

குண்டு வெடிப்பை அவர்கள் வைத்தார்களா, இல்லை வேறு யாரும் வைத்தார்களா என்பதை எதை வைத்து முடிவு செய்வது? ஒரு மின்னஞ்சல் மட்டுமே போதுமானது என்றால் இந்த நாட்டில் பலரும் ‘தேச விரோத’ கருத்தை பேசியதற்காக உள்ளே போக வேண்டும். ஒரு பாரிய குண்டு வெடிப்பின் பின்னே யார் வைத்தார்கள் என்பதை மட்டும் சுலபமாக சொல்ல முடியுமா? அல்லது அப்படி சொல்ல வேண்டுமா? இது யாருக்கு ஆதாயம்?

இந்த குண்டுவெடிப்பை யார் வைத்தார்கள் என்பது இப்போதைக்கு தெரியவில்லை என்றும், அந்த மின்னஞ்சலை வைத்து மட்டும் முடிவு செய்ய முடியாது என்றும் தேசிய புலனாய்வுத்துறை நிறுவன தலைமை அதிகாரி கூறிய பிறகும் ஊடக அம்பிகள் துள்ளிக் குதிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை உடனடி வில்லன். அந்த வில்லன் இசுலாமிய அமைப்பென்றால் அவர்களுக்கு கல்லா கட்டுவது சுலபம்.

குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலில் அப்சல் குருவை விடுவிக்க வேண்டும் என்று இருக்கிறதாம். இது தெரியமலேயே இந்த குண்டு வெடிப்பு செய்தியை கேட்ட மாத்திரத்திலேயே பலரும் மூவர் தூக்கு நிறுத்தி வைத்ததற்காக கடும் கண்டனங்களை பொழிய ஆரம்பித்துவிட்டார்கள். ராஜிவ் கொலைக்கான குண்டு வெடிப்பை நடத்தியவர்களையெல்லாம் தூக்கில் போடக்கூடாது என்பதுதான் இத்தகைய தீவிரவாதிகளுக்கு குளிர் விடக் காரணமென்று அவர்கள் ஆங்கில, தமிழ் ஊடகங்களில் ஆவேசம் பொங்க கத்துகிறார்கள்.

அப்சல் குருவுக்கும் எந்த தீவிரவாத இயக்கத்திற்கும் சம்பந்தமில்லை. அவரை இந்த வழக்கில் சிக்க வைத்தது இராணுவ, துணை இராணுவ படைகள்தான். அவரது வழக்கில் கூட உச்சநீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லையென்றாலும், தேசத்தின் மனசாட்சியை கருத்தில் கொண்டு தூக்குத் தண்டனை விதித்திருப்பதாக கூறியிருக்கிறது. இந்த மனசாட்சியைத்தான் இப்போது ஆங்கில ஊடகங்கள் எடுத்துக் கொண்டு தீர்ப்புகளை அள்ளி வழங்குகிறார்கள்.

அதில் அம்பி அர்னாப் கோஸ்வாமியின் டைம்ஸ் நௌ முன்னிலை வகிக்கிறது. அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் டி.ஆர்.பி ரேட்டிங்கை எகிற வைத்த அந்த தொலைக்காட்சிக்கு அடுத்த சென்சேஷனாக இந்த குண்டுவெடிப்பு கிடைத்திருக்கிறது. அதில் அவர்கள் அச்சு பிசகாமல் நடுத்த வர்க்கத்தின் மேலோட்டமான இந்துத்வ மற்றும் பாசிச அரசியல் பார்வையை திருப்திபடுத்தும் வகையில் பேசுகிறார்கள். இதுதான் சமூகத்தை பாசிசமாக்கும் நடவடிக்கை என்பதை எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள்?

டெல்லி உயர்நீதிமன்றத்தில் மெட்டல் டிடெக்டரும், சி.சி.டி.டிவியும் வேலை செய்ய வில்லை என்பதை உலகமகா கண்டுபிடிப்பாக எடுத்துக் காட்டும் டைம்ஸ் நௌ குத்தாட்டம் போடுகிறது. 120 கோடி மக்களை காப்பாற்ற ஒரு சில வேலை செய்கின்ற மெட்டல் டிடெக்டரும், சி.சி.டி.டிவியும் மட்டும் போதுமா? ஆனால் அவர்களது நோக்கம் மக்களை காப்பது அல்ல. ஆளும் வர்க்கத்தின் கேந்திரமான இடங்களை மட்டும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் உயிரைத் துச்சமென மதிக்கும் ஒருவன் இந்த கண்காணிப்புகளுக்கு ஏன் பயப்படப் போகிறான்?

குண்டு வெடித்து மக்களிடமிருந்து சிந்தும் இரத்தம் கூட நிற்கவில்லை. அதற்குள் குண்டில் என்ன ரசாயனம் இருந்தது, யார் வைத்தார்கள், என்று ஊடகங்களின் மொக்கை நிருபர்கள் கேள்விக்கணைகளால் துளைக்கிறார்கள். இது அமெரிக்காவாகவே இருந்தாலும் சோதனைச்சாலையில் ஆய்வு செய்த பிறகுதானே என்ன வகை குண்டு என்பதை சொல்ல முடியும்? அவர்களது நோக்கம் உடனடி நீதி வேண்டுமென்பதால் ஆதாரங்களை அவர்களே ஜோடிக்க முயல்கிறார்கள்.

வங்கதேசத்திற்கு சென்றிருக்கும் பிரதமர் நாட்டு மக்கள் இத்தகைய தீவிரவாதிகளின் செயல்களுக்கு பலியாகக்கூடாது என்கிறார். அப்படி பலியாகக்கூடாது என்றால் தீவிரவாதிகள் உருவாக காரணமாக இருக்கும் செயல்கள், சக்திகளை கண்டறிந்து ஒழிக்க வேண்டும். அதை விடுத்து இந்த ஃபார்முலா அட்வைசு சாதிப்பதென்ன?

இந்து மதவெறியர்களைப் பொறுத்த வரை இந்த குண்டு வெடிப்பு அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மூவர் தூக்கை நிறுத்தி வைக்க தமிழகம் காட்டிய முன்னுதாரணத்தை இதன் மூலம் ரத்து செய்து அப்சல் குருவை தூக்கிலேற்றி இந்துத்தவ வெறியை ஓட்டாக்கலாம் என்பது அவர்களது எண்ணம்.

இந்த குண்டு வெடிப்பை நாம் கண்டனம் செய்கிறோம். இது யார் வைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே. அப்பாவி மக்களின் உயிரைப் பணயம் வைத்து இலட்சியம் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அந்த உரிமையை வைத்துக் கொண்டுதான் இந்திய அரசு காஷ்மீரிலும், வடகிழக்கிலும், இந்துமதவெறியர்கள் குஜராத் உள்ளிட்ட இந்தி மாநிலங்களிலும் மக்கள் மீது குறிப்பாக சிறுபான்மையினர் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இந்த நிறுவன பயங்கவரவாதத்தை வேரறுக்காமல் நாம் குண்டு வெடிப்புகளை நிறுத்த முடியாது.

இனி மீண்டும் தடா, பொடா போன்ற சட்டங்கள் அவசியம் என்ற வாதம் எழுப்பப்படும். தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குரு, மற்றும் தமிழக மூவருக்கும் கருணை காட்டக்கூடாது என்ற இரைச்சல் ஊடகங்களை நிறைக்கும். மொத்தத்தில் அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாகவே இந்த குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது.

ஊழல் வழக்குளில் பிரதமர் உள்ளிட்ட பெரும் தலைகளெல்லாம் சிக்கியுள்ள நிலையில் முதல் ஆசுவாசமாக அண்ணா ஹசாரே இருந்தார், இரண்டாவதாக இந்த குண்டு வெடிப்பு! 11 பேர் உயிரிழந்ததை விட இதுதான் பெரிய இழப்பு!!

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

தூக்கு மேடையில் நிற்பது அரசியல் நியாயம் – தோழர் மருதையன்

மரண தண்டனை விதிக்கப்பட்டு, 21 ஆண்டுகளாகக் கொடுஞ்சிறையில் வைத்து வதைக்கப்படும் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு 8 வாரங்கள் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம். இம்மூவரின் சார்பில் ஆஜரான ராம் ஜெத்மலானி, காலின் கன்சால்வேஸ், வைகை ஆகிய வழக்குரைஞர்கள் கருணை மனுவின் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதில் நேர்ந்துள்ள 11 ஆண்டு காலத் தாமதத்தின் விளைவாக கைதிகள் மூவரும் அனுபவித்துவரும் துன்பம் மரணதண்டனையை விடக் கொடியது என்ற வாதத்தை முதன்மைப் படுத்தி, இம்மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். மனுவை ஏற்றுக்கொண்ட  உயர் நீதிமன்ற பெஞ்சு, 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசைக் கோரியுள்ளதுடன், செப்டம்பர் 9 ஆம் தேதியன்று நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை அதுவரை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மக்களுடைய பொதுக்கருத்தின் திரண்ட உருவமாக, உயர் நீதிமன்ற வளாகத்தில் அலைமோதிக் கொண்டிருந்த மக்கள் வெள்ளம், தீர்ப்பினை அறிந்தவுடன் மகிழ்ச்சிப் பெருக்கில் கொப்பளித்தது. இது இறுதி வெற்றி அல்ல என்றபோதிலும், குறிப்பிடத்தக்க வெற்றி. தமிழுணர்வாளர்களும் பல்வேறு அமைப்பினரும் தமிழகம் முழுவதும் செய்த பரப்புரைக்கும் பரவலாக நடைபெற்ற போர்க்குணமிக்க போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி. மக்கள் மத்தியில் கருத்து ரீதியான ஆதரவை உருவாக்குவதில் வைகோ, சீமான் போன்றோர் ஆற்றிய பங்கும், கருமமே கண்ணாக இருந்து இவ்வழக்கினைக் கொண்டு சென்ற உயர்நீதிமன்ற வழக்குரைஞர் புகழேந்தி போன்றோரின் பாத்திரமும் குறிப்பிடத்தக்கவை.

ஏறத்தாழ உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியான அதேநேரத்தில், மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு குடியரசுத் தலைவரைக் கோரும் தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா. அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோரைக் காட்டிலும் அதிர்ச்சி அடைந்தோரே அதிகம். முந்தைய நாள் இதே பிரச்சினை பற்றி சட்டமன்றத்தில் பேசிய ஜெயலலிதா, குடியரசுத்தலைவர் நிராகரித்த கருணை மனுவை அங்கீகரிக்கின்ற அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்று கூறி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதம் ஒன்றையும் அதற்கு ஆதாரம் காட்டினார். மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அதிகாரமில்லை என்பதுடன் அதில் தனக்கு  விருப்பமும் இல்லை என்பதை அவரது பேச்சு பளிச்சென்று காட்டியது.

முதல்வரைச் சந்திப்பதற்கு பேரறிவாளனின் தாயார் மற்றும் வைகோ உள்ளிட்ட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. வேலூர் சிறையின் தூக்கு மேடைக்கு பூசை போடப்படுவதையும் புதுப்பிக்கப்படுவதையும் வக்கிரப் பரவசத்துடன் வருணித்துக் கொண்டிருந்தது, தினமலர். ஜெயலலிதா கும்பலின் உறுப்பினர்களான பார்ப்பன பாசிஸ்டு சுப்பிரமணிய சாமி, சோ போன்றோர் நடைபெறவிருக்கும் நரகாசுரவதம் குறித்த தங்களது மறைக்கவொண்ணா மகிழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பகிர்ந்து கொண்டிருந்தனர். இந்நிலையில்தான் ஆகஸ்டு 30 ஆம் தேதியன்று வெளிவந்தது ஜெயலலிதாவின் அந்தர்பல்டி அறிவிப்பு.

மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று முந்தின நாள் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையை மறுத்து முதல்வர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதிய பி.யு.சி.எல் அமைப்பின் மாநிலத் தலைவர் டாக்டர். சுரேஷ் இது தொடர்பான அரசியல் சட்டத்தின் நிலையை அக்கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 161 ஆளுநருக்கு வழங்கியிருக்கும் இறையாண்மைமிக்க அதிகாரத்தையோ, இபிகோ பிரிவு 54 மற்றும் கு.ந.ச பிரிவு 433 மாநில அரசுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தையோ மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு நிர்வாகரீதியான அறிவுறுத்து கடிதம் பறிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது. மேலும், இந்திய ஒன்றியத்தின் மாநில மைய அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பிரிவினைகள் வரையறுக்கப்பட்டுள்ள துறைகளில், குடியரசுத்தலைவர் மேல் என்றும் ஆளுநர் கீழென்றும் (அதாவது மைய அரசு மேல், மாநில அரசு கீழ் என்று) கருதும் அதிகாரப் படிநிலை அணுகுமுறை பொருந்தாது என்பதே அரசியல் சட்டத்தின் நிலை. எனவே, குடியரசுத்தலைவர் நிராகரித்த மனுவை மீண்டும் குடியரசுத்தலைவர்தான் பரிசீலிக்க இயலும் என்ற கருத்து தவறு என்று அவரது கடிதம் விளக்குகிறது.

ஆர்த்தெழுந்தது தமிழகம்: மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திய ரயில் மறியல் போராட்டம்

இவையெல்லாம் தமிழக அரசுக்கோ, ஜெயலலிதாவின் ஆலோசகர்களுக்கோ தெரியாததல்ல. சட்டப்பிரிவு 161 அம்மாவின் கருணைக்கரங்களைக் கட்டிப் போட்டிருப்பதனால்தான், தூக்கு தண்டனையை அம்மா ரத்து செய்யமுடியவில்லை என்று அ.தி.மு.க வைச் சேர்ந்த அடிமுட்டாளும்கூட நம்பமாட்டான். ஏனென்றால் கடந்த 20 ஆண்டுகளாக ஜெயலலிதா தமிழகத்தில் நடத்திவரும் அரசியலின் மையப்புள்ளியே புலி பீதியூட்டுவதுதான் . ராஜீவ் கொலைப் பழியை தி.மு.க.வின் மீது போட்டு, ராஜீவின் பிணத்தின் மீதேறித்தான் ஜெயலலிதா முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார். அன்று ஈழத்தமிழர்களுக்கும், ஈழ ஆதரவாளர்களுக்கும் எதிராக அவர் ஆடிய பேயாட்டத்தை யாரும் மறந்துவிடவில்லை.

தடா, பொடா சட்டங்களை ஏவியதாக இருக்கட்டும், புலிகள் இயக்கத்தை வேரறுப்பதற்கு முனைந்து நின்றதாக இருக்கட்டும், தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு இரங்கல் கவிதை எழுதியதற்காக கருணாநிதியைக் சாடியதாக இருக்கட்டும் அனைத்திலும் ‘மாறாத கொள்கை உறுதி’யை பார்ப்பன பாசிச ஜெயலலிதா காட்டி வந்திருக்கிறார். ஒரு தாய் என்ற காரணத்தினால் நளினியின் மரண தண்டனையை அன்றைய தி.மு.க. அரசு ஆயுள்தண்டனையாக குறைத்தபோது, அதையும் எதிர்த்த இந்த அம்மையார்தான், “மூவரின் கருணை மனுவை நிராகரித்தவர் கருணாநிதி” என்ற உண்மையை இன்று உலகுக்கு அறிவித்து அவரது சந்தர்ப்பவாதத்தை சாடுகிறார்.

“எதுவும் செய்யமுடியாது” என்று முந்தின நாள் கைவிரித்து விட்டு, மறுநாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் அம்மாவின் அந்தர்பல்டிக்கு அடிப்படை என்ன? மனிதாபிமானமோ, தமிழுணர்வோ 24 மணி நேரத்துக்குள் முதல்வரிடம் ஊற்றெடுத்துப் பெருகி சட்டமன்றத்தில் பாய்ந்துவிடவில்லை. தமிழக மக்களின் மனநிலை குறித்த அவரது மதிப்பீடுதான் மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதன் விளைவாக முடிவிலும் மாற்றம் வந்திருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகை இட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர்

முதலாவதாக, இம்மரணதண்டனைக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் அவதானிக்கத்தக்கதொரு போர்க்குணம் இருந்தது. அமைப்பு சார்ந்த போராட்டங்கள் மட்டுமின்றி, தன்னெழுச்சியாக  நடைபெற்ற மாணவர்கள்  வழக்குரைஞர்களின் போராட்டங்களும் ஈழப்போரின் இறுதி நாட்களில் தமிழகம் இருந்த நிலையை நினைவூட்டின. சமச்சீர் கல்விக்கான  போராட்டங்களுக்காக தெருவுக்கு வந்து பழகிய மாணவர்களும், ஈழம் மற்றும் உயர் நீதிமன்ற போலீசு தாக்குதல் தொடர்பான பிரச்சினைகளில் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தியிருக்கும் வழக்குரைஞர்களும் தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கக் கூடிய சாத்தியப்பாடு  விளங்கிக் கொள்ள முடியாததல்ல.

மூவரின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்த தீர்ப்பினை அறிந்தவுடன் மகிழ்ச்சிப் பெருக்கில் கொப்புளித்த மக்கள் வெள்ளம்.

1991-இல் ராஜீவின் உடலைக் கண்டு தமிழகம் அழுததும், அந்தக் கண்ணீரை ஓட்டுகளாக ஜெயலலிதா மாற்றிக் கொண்டதும் உண்மைதான். ஆனால், அது வேறு தமிழகம். இன்று, இன அழிப்புப் போரைத் தடுக்க முடியாமல் தோற்றது மட்டுமின்றி, போர்க்குற்றவாளி ராஜபக்சேவை  தண்டிக்க முடியாமல் பாதுகாத்து நிற்கும் டெல்லியைக் கண்டு குமுறிக் கொண்டிருக்கிறது, ஒரு தலைமுறை. இந்த குமுறலின் மீது உப்புக் காகிதத்தைத் தேய்க்கும் விதமாக மூவரின் தண்டனையை நிறைவேற்ற முற்பட்டால், அது தோற்றுவிக்கும் காயமானது பார்ப்பனக் கும்பலையும் அவர்களது தேசியத்தையும் வெறுக்கின்ற புதியதொரு  தலைமுறையை உருவாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்க, ‘அபாயகரமான’ அந்த சாத்தியப்பாட்டினைத் தடுப்பதற்கானதொரு உபாயமாகவும் அம்மா இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கக் கூடும்.

மூன்றாவதாகவும் ஒரு காரணம் இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை கிடைத்துவிடும் என்பது ஓரளவு சட்டம் தெரிந்த அனைவரும் எதிர்பார்த்த விடயம். வேறொரு வழக்கில் கருணை மனுவின்மீது கருத்து கூறாமல் 2 ஆண்டுகள் தாமதித்ததையே காரணம் காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். 11 ஆண்டுகள் என்பது எவ்விதத்திலும் நியாயப்படுத்த இயலாத தாமதம் என்பதால், இவ்வழக்கில் நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைப்பதற்கான சாத்தியம் அதிகம் என்றே சொல்லவேண்டும். இத்தகைய சூழலில், சட்டமன்றத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு விடப்படும் வேண்டுகோள் அரசியல் ரீதியில் தனக்கு உபயோகமானதாக இருக்கும் என்றும் ஜெயலலிதா கணக்கிட்டிருக்கக் கூடும்.

இக்காரணிகள் அனைத்தின் கூட்டல் கழித்தலில் வந்திருக்கக் கூடிய விடைகளில் ஒன்றுதான் ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானம். இது அமைச்சரவை முடிவல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆட்சிக்கு வந்த மறுகணமே உடுக்கை இழந்தவன் கைபோல மெட்ரிக் முதலாளிகளின் இடுக்கண் களைவதற்காக நீண்ட கரங்கள் அல்ல இவை. இது அரசியல் ஆதாயத்தை ஜேப்படி செய்வதற்காக நீண்டிருக்கும் கரம். அதிலும் கூட கொஞ்சம் வேண்டா வெறுப்பாகவே நீட்டப்பட்டிருக்கும் கரம். இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்குமாறு மத்திய அரசைக் கோருகின்ற தீர்மானத்தைப் போல, இது இன்னொரு தீர்மானம். அவ்வளவே.

உண்மை இவ்வாறிருக்க, “இலங்கை அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை இக்கட்டில் ஆழ்த்துவதற்காகத்தான் காங்கிரசு அரசு கருணை மனுவை நிராகரித்திருக்கிறது” என்றொரு நகைக்கத்தக்க காரணத்தைக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறார்கள், “ரூம் போட்டு” சிந்திக்கும் சில அறிஞர் பெருமக்கள். ‘தமிழினத்தின் மானத்துக்கு மரணதண்டனை விதிக்காதீர்கள்’ என்பதுதான் நாம் இவர்களிடம்  பணிந்தளிக்கும் கருணை மனு.

குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை நிராகரித்து கடிதம் அனுப்பியிருப்பது மத்திய உள்துறை அமைச்சகம். அதன் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் ஓட்டுக்கட்சி அரசியல் களத்தில் முரண்பாடுகள் இருந்த போதிலும், ஈழப்போராட்டத்தை ஒடுக்குவதில் அவர்கள் கொள்கை ரீதியான ஒற்றுமை உடையவர்கள். தமக்கிடையிலான சில்லறை முரண்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘தேசியநலனுடன்’ தொடர்புள்ள விடயங்களில் சேர்ந்தியங்கும் ‘பக்குவம்’ உடையவர்கள். மேலும், தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அம்மாவின் ஆட்சி அமைந்திருக்கும் இந்தச் சூழல்தான் சுமுகமாகவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏதும் இல்லாமலும் தூக்கு தண்டனையை நிறைவேற்றத் தகுந்த சூழல் என்று மத்திய உளவுத்துறைகளும் மதிப்பிட்டிருக்கும். தமது மதிப்பீடு முற்றிலுமாய்ப் பொய்த்துவிடும் என்று உளவுத்துறையினர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அவர்கள் மட்டுமா, ஆகஸ்டு 30  ஆம் தேதியன்று இப்படியொரு அந்தர்பல்டி தீர்மானத்தை முன்மொழியப் போகிறோம் என்பதை ஆகஸ்டு 29  ஆம் தேதியன்று ஜெயலலிதாவே எண்ணிப்பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல, இத்தகையதொரு துரதிருஷ்டம் குறித்து சோதிடர்கள்கூட முதல்வரை எச்சரித்ததாகத் தெரியவில்லையே.

இந்த சட்டமன்றத் தீர்மானம் சில அரசியல் துணை விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. “ஜெயலலிதாவைப் போல, காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு எதிராக நான் ஒரு தீர்மானம் நிறைவேற்றினால், அதற்கான எதிர்வினை இவ்வளவு அமைதியாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. “இதே தீர்மானத்தை இந்தக் கருணாநிதி நிறைவேற்றியிருந்தால் பிரிவினை வாதம், தேசத்துரோகம் என்று பத்திரிகைகள் என்னை பிரித்து மேய்ந்திருக்க மாட்டார்களா உடன்பிறப்பே”  என்று கேட்கத்தான் கலைஞரும் நினைத்திருப்பார்.

நாம் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், அம்மா உதைத்து விட்டிருக்கும் இந்தப்பாறையானது உருண்டு போகிற போக்கில் பல ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ விளைவுகளை ஏற்படுத்தித்தான் செல்கிறது. தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்காக சுயேச்சையான பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா அசைத்திருக்கும் இந்த ஆப்பில், அதிகாரபூர்வ பார்ப்பன பாசிஸ்டுகளான பாரதிய ஜனதாவினரின் உயிர்நிலை மாட்டிக்கொண்டுவிட்டது. அவர்கள் வாயைத் திறக்கிறார்கள், பல்லைக் கடிக்கிறார்கள். ஆனால் வார்த்தை வரமறுக்கிறது. ‘அப்சல் குருவை உடனே தூக்கில் போடு’ என்று தொடைதட்டியவர்கள், அம்மாவின் சட்டமன்றத் தீர்மானத்துக்குப் பின்னர், ‘ஒமர்  அப்துல்லா இப்படிப் பேசுவது துரதிருஷ்டவசமானது’ என்று நெளிகிறார்கள்.

மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு, 21 ஆண்டுகளாகச் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி.

வட இந்திய ஆங்கில ஊடகங்களைப் பொருத்தவரை மூவர் தூக்குக்கு எதிராக தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ள பொதுக்கருத்தையோ, போராட்டங்களையோ அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அத்தகைய பொதுக்கருத்து தோன்றுவதற்கான நியாயம் ஈழத்தின் இனப்படுகொலையிலும் இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்பிலும் இருக்கிறது என்பதையும் அவர்கள் அங்கீகரிப்பதில்லை. ‘இந்திய தேசியத்தின்’ சந்தேகப் பட்டியலில் நிரந்தரமாக அவர்கள் தமிழகத்தை வைத்திருக்கிறார்கள். ‘திராவிடதமிழ் அரசியலை’ தைரியமாக எதிர்கொண்டு நின்ற ஜெயலலிதாவும் இப்போது அதற்குப் பணிந்து விட்டார் என்பதுதான் அவர்களது மனக்குமுறல்.

தேசத்தின் முன்னாள் பிரதமரையே கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வீதியில் போராட்டம் நடத்துவதும், அதனையொட்டி சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுவதும் அவர்களை நடுங்கச் செய்கிறது. இது நீதித்துறையின் செயல்பாட்டில் குறுக்கிடுவதும் மிரட்டுவதும் ஆகும் என்று அந்த ஊடகங்களில் கருத்துரைக்கின்றனர் அதிகாரபூர்வ அறிவுஜீவிகள்.

இது அபத்தமானதும் அரசமைப்புச்சட்டம் அரசுக்கு வழங்கியுள்ள மன்னிக்கும் அதிகாரத்தை மறுப்பதும் ஆகும். நீதிமன்றம் தனக்கு முன்னால் வைக்கப்படுகின்ற சாட்சியங்களின் அடிப்படையில் குற்றத்தின் தன்மையையும் குற்றவாளிகளையும் முடிவு செய்து தண்டனை விதிக்கிறது. ஆனால் மன்னிக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கும் அரசு (Ececutive)  குற்றத்தின் தன்மையை ஆராய்வதில்லை. குற்றவாளிகளின் சமூக, கலாச்சார பின்னணி, குறிப்பிட்ட குற்றத்தை இழைக்குமாறு அந்தக் குற்றவாளியைத் தூண்டிய காரணிகள், குற்றத்தின் சமூகப் பின்புலம் ஆகியவற்றை பரிசீலித்து மன்னிப்பு வழங்குவது பற்றி முடிவு செய்கிறது. மரண தண்டனையை ஆயுளாகக் குறைப்பது, ஆயுள்தண்டனையின் காலத்தை குறைப்பது ஆகியவை பற்றி மட்டும்தான் அரசு முடிவு செய்கிறதேயன்றி, குற்றத்திலிருந்து குற்றவாளிகளை விடுவிப்பதில்லை.

ராஜீவ் கொலை வழக்கையே எடுத்துக் கொள்வோம். இந்திய அரசு அதனை ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக சித்தரிப்பது மட்டுமின்றி, ராஜீவ் கொலை செய்யப்பட்ட நாளை பயங்கரவாத எதிர்ப்பு தினமாகவும் கடைபிடிக்கிறது. ஆனால் ‘ராஜீவ் கொலை ஒரு பயங்கரவாதக் குற்றமல்ல’ என்று தனது தீர்ப்பில் அழுத்தம் திருத்தமாகக் கூறும் உச்ச நீதிமன்றம், ராஜீவைத் தவிர வேறு யாரையும் கொலை செய்யும் நோக்கமோ இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கமோ கொலையாளிகளுக்கு இல்லை என்றும், எனவே இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தடா சட்டத்தின் கீழ் தண்டிக்க இயலாது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது. இத்தீர்ப்புக்குப் பின்னரும் ராஜீவ் கொலையுண்ட நாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளாகத்தான் இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இந்த அயோக்கியத்தனத்தை அதிகாரபூர்வமான நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்வதா, அதிகாரபூர்வமற்ற அரசியல் குறுக்கீடு என்பதா?

ஒரு சாதாரண கொலைவழக்கை பயங்கரவாதமாக சித்தரிக்கும் இந்த அரசியல் மோசடியின் அடிப்படையில்தான் மூவருக்கும் எதிரான மரண தண்டனை மட்டுமின்றி, புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கின் வாக்குமூலங்களும் சாட்சியங்களும் கைதிகளிடம்  மிரட்டிப் பெறப்பட்டவை, அல்லது போலீசால் தயாரித்துக் கொள்ளப்பட்டவை. தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்த சாட்சியங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்காவிட்டால், குற்றவாளிகளை தண்டித்திருக்கவே முடியாது என விசாரணை அதிகாரி கார்த்திகேயன் அன்று கூறியது இங்கே நினைவு கூரத்தக்கது. “ஆனானப்பட்ட ஜோன் ஆப் ஆர்க்கூடச் சித்திரவதை பொறுக்காமல் தன்னை ஒரு சூனியக்காரி என்று ஒப்புக்கொண்டாள். சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் மனிதன் எதையும் ஒப்புக்கொள்வான். எனவே தடா சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் வாக்குமூலம் செல்லத்தக்கது என்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படுகிறதெனினும், அது பலவீனமான சாட்சியமே” என்று கூறி உல்ஃபா இயக்கத்தை சேர்ந்த புய்யான் என்பவரை சமீபத்தில் (17.2.2011) விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். அப்படிப்பட்ட ‘பலவீனமான’ சாட்சியம்தான் இம்மூவரின் மரண தண்டனைக்கும் அடிப்படை.

தனது மகன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிப் போராடிய தமிழக மக்களுக்கு, தீர்ப்பின் பின் கண்ணீர் பெருக்கோடு நன்றி சொல்லும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்.

அது மட்டுமல்ல, எந்த ஜெயின் கமிசன் அறிக்கையில் தி.மு.க. வின் புலி ஆதரவு பற்றிக் குறிப்பிட்டுள்ளதைக் காட்டி 1998   இல் ஐக்கிய முன்னணி ஆட்சியைக் காங்கிரசு கவிழ்த்ததோ, அதே ஜெயின் கமிசன் அறிக்கை ராஜீவ் கொலை தொடர்பாக சந்திராசாமி, சுப்பிரமணியசாமி  ஆகியார் விசாரிக்கப்படவேண்டும் என்று கூறியிருந்தும், அதற்காகவே பலநோக்கு கண்காணிப்பு முகமை (MDMA) ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தும் அத்தகைய விசாரணை எதுவும் நடைபெறவில்லை. ஒரு அரசியல் கொலை வழக்கில், சந்தேகத்திற்கிடமான சிலரை விசாரிக்காமலிருக்கும்போதே ஏனையோரின் உயிரைப் பறிப்பது, அப்பட்டமான அநீதி மட்டுமல்ல, சந்தேகத்திற்கு இடமளிக்கும் சதியும் ஆகும்.

இந்திய  இலங்கை ஒப்பந்த திணிப்பு, இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு, அமைதிப்படையை திரும்பப் பெற்ற வி.பி.சிங் மீது ராஜீவ் வெளியிட்ட கண்டனம் — ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும் எதிர்வினையாகவும் நடைபெற்றதே ராஜீவ் கொலை என்று கூறுகிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு. இதுதான் இந்தக் ‘குற்றத்தின்’ அரசியல் பின்புலம். ராஜீவ் கொலையை  ஏற்றுக் கொள்ள இயலாதவர்களும் எதிர்ப்பவர்களும் கூட, அதன் அரசியல் நியாயத்துக்குத் தம்மையறியாமல் தலைவணங்குவதன் விளைவுதான் மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிரான பொதுக்கருத்து.

‘சங்கடமளிக்கும்’ இந்த அரசியல் பின்புலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மனிதாபிமானம், நிரபராதிகள், மரணதண்டனை ஒழிப்பு என்றெல்லாம் பேசுவதன் மூலம் பரந்த மக்கட்பிரிவினரையும் அரசியல் கட்சிகளையும் இக்கோரிக்கைக்கு ஆதரவாகத் திரட்டிவிட முடியும் என்று கருதுவோர் அம்மயக்கத்திலிருந்து விடுபடவேண்டும்.  இம்மூவரின் இடத்தில் நிற்பவர்கள் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளாக இருந்திருப்பின், தமிழகம் இவர்களைத் திரும்பியும் பார்த்திருக்காது. தன்னுடைய ரத்தத்தின் ரத்தங்களேயானாலும், அவர்களுக்காக ஜெயலலிதா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கவும் முடியாது.

மரண தண்டனை ஒழிப்பு என்ற பொதுக்கோரிக்கை, ராஜீவுடைய போர்க்குற்றத்தை மூடும் வெள்ளைத்துணி ஆகிவிடக்கூடாது. குற்றம் ராஜீவுடன் முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் முடித்துப் புதைக்கும் வரையில் இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு துணை நின்றது. இன்னமும் நிற்கிறது. அதனால்தான் பேரறிவாளனும், சாந்தனும், முருகனும் தூக்கு மேடையில் நிற்கிறார்கள். இந்திய இராணுவம் காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை மறித்து நிற்பதனால்தான் அப்சல் குருவும் தூக்குமேடையில் நிற்க நேர்ந்திருக்கிறது.

கருப்புத்துணி மூடித் தூக்கிலிடப்படவோ, கருணை மனுவினால் விடுவிக்கப்படவோ முடியாத, உண்மையின் இந்த முகம்தான் மக்களைப் போராட்டத்தில் இறக்கியிருக்கிறது. மூவரையும் தூக்குமேடையிலிருந்து இறக்க வல்லதும் அதுதான்.

_________________________________________________________________

மருதையன், புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2011

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

பா.ஜ.கவின் தியாகச் செம்மல் ஜனார்த்தன ரெட்டி கைது!

6
பா.ஜ.கவின் தியாகச் செம்மல் ஜனார்த்தன ரெட்டி கைது!
ஜனார்தன ரெட்டி

புண்ணிய வர்ஷமாம் பாரத திருநாட்டின் தெற்கிலே முதல் இந்துத்தவ அரசின் பிதாமகனும், கர்நாடக பா.ஜ.கவின் ஆள், பணம், அடியாள் புரவலர்களாக பட்டையைக் கிளப்பும் ரெட்டி சகோதரர்களின் மூத்த தலயான ஜனார்த்தன ரெட்டியை சி.பி.ஐ அதிகாரிகள் 5.9.2011 அன்று காலை முகூர்த்த நேரத்தில் கைது செய்திருக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் எடியூரப்பா இவரோடு டேக்கா கொடுத்த போது ஆட்சியையே கவிழ்க்க முயன்று மேலிடத்திற்கு பாடம் புகட்டிய ரெட்டி பிரதர்சின் மேல் அத்வானிக்கே கொஞ்சம் பயமுண்டு. மேலும் முன்பு சுஷ்மா ஸ்வராஜ் பெல்லாரி தொகுதியில் போட்டியிடும் போது ரெட்டி பிரதர்ஸ் கவனிப்பில் திக்கு முக்காடிப் போனார்.  மேலும் ரெட்டி பிரதர்சின் பிசினசோடும் அவருக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அந்த வகையிலும் பா.ஜ.க மேலிடம் இவர்கள் மீது பெருங்கருணை வைத்திருக்கிறது.

இதனாலேயே பா.ஜ.க அமைச்சரவையில் யார் அமைச்சர்கள் என்று முடிவு செய்யும் வீட்டோ அதிகாரம் இவர்களிடமே இருந்தது. இவர்களோடு மோதி எடியூரப்பாவே மூக்குடைபட்டுள்ளார். அவரது ஆட்சியைக் கவிழ்க்க ரெட்டிகாருகள் நடத்திய பாரதப் போரை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் மாநில லோக்அயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான சுரங்கம் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதனால் அரசுக்கு பல நூறு கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. சுரங்கத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட் பணித்திருந்தது. சுரங்கத்தில் இருந்து கனிமத்தை வெட்டி எடுக்கவும் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 10 பேர் கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள் குழுவினர் பெல்லாரியில் உள்ள மாஜி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தினர். தொடர்ந்து ரெட்டியை கைது செய்து ஐதராபாத் அழைத்து சென்றனர். ரெட்டியின் உறவினரும் ஒபலாபுரம் சுரங்க நிறுவனத்தின் மானேனஜிங் டைரக்டருமான சீனிவாச ரெட்டியையும் கைது செய்துள்ளனர். இருவரும் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

ரெய்டுக்கு போன சி.பி.ஐ அதிகாரிகளால் ரெட்டி வீட்டிலிருந்து நாலரைக் கோடி ரூபாயும் முப்பது கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. கூடவே இரண்டு ஹெலிகாப்டர்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ரெட்டிகளின் கைச்செலவுக்கான விசயங்களை. இதையே ஏன் பூதகரமான செய்தியாக காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை உண்மையான பிரம்மாண்டமான சுருட்டல்களை மறைப்பதற்கான தந்திரமோ தெரியவில்லை.  ரெட்டியின் 7 நட்சத்திர வாழ்க்கையோடு ஒப்பிடும் போது துபாய் ஷேக்கெல்லாம் பிச்சை வாங்க வேண்டும். ரெட்டியின் ஆடம்பர வாழ்க்கை குறித்த பதிவு விரைவில் வெளியிடுகிறோம்.

மேலதிகமாக சட்டவிரோத சுரங்கத் தொழில் செய்து இரும்புத் தாதுவை இவர்கள் எந்த நாட்டிற்கு அனுப்பி பலநூறு கோடிகளைச் சம்பாதித்தார்கள்? சீனா என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆம். ஆர்.எஸ்.எஸ்இன் ஜன்ம விரோதியான சீனத்திற்கு ஏற்றுமதி செய்துதான் இந்த ஆர்.எஸ்.எஸ் அம்பி பிரம்மாண்டமான சொத்துக்களை சம்பாதித்தார்.

ரெட்டி சகோதரர்கள் மோசடி செய்து, அரசின் உதவியோடு, அரசின் ஆசிர்வாதத்தோடு அரசையே ஏமாற்றி சுரங்கத் தொழில் செய்து சில ஆயிரம் கோடிகளையாவது சுருட்டியிருப்பார்கள். இந்த ஊழல் வெளிவந்து இத்தனை மாதங்கள் ஆகியும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இத்தனை காலம் இவர்களை விட்டு வைத்திருந்ததே தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் செய்து கொள்வதற்காகத்தான் போலும்.

அதனால்தான் பா.ஜ.க மேலிடம் இத்தனை நடந்தும், ரெட்டி ஒரு புண்ணியவான் என்று மெச்சுவதோடு அவர் சட்டப்படி தன்மீதான குற்றச்சாட்டுகளை தகர்ப்பார் என்று தெம்பாக சொல்கிறார்கள். ஆனாலும் தற்போது ரெட்டி கைது சூடாக கர்நாடக அரசியலை மையம் கொண்டிருப்பதனால் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் முப்பது பேர் ராஜினாமா செய்வார்களா என்றொரு தகவல் பெங்களூரூவில் வலுவாக வலம் வருகிறது. அது நடந்தால் எடியூரப்பாவின் பினாமி சதானந்தா சமாளிப்பது கடினம். ஆகவே கர்நாடகாவின் முதல் இந்துத்வ அரசை காப்பாற்ற வேண்டுமென்றால் ரெட்டிகாருக்களை காப்பாற்றுவது பா.ஜ.கவிற்கு அவசியம்.

லோக்அயுக்தா அறிக்கையின் படி எடியூரப்பா மற்றும் ரெட்டி பிரதர்ஸ் முன்னிலை வகிக்கும் இந்த சுரங்க ஊழலில் மட்டும் 16,000 கோடி ரூபாய்க்கும் மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய கேடிகளை காப்பாற்றும் கட்சிதான் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் முன்னிலை வகித்தது. பதிலுக்கு அந்த மேளாக் கும்பலும் எடியூரப்பா, ரெட்டி பிரதர்ஸ் கொள்ளை கேங் குறித்து ஒன்றும் சொல்லவில்லை. எல்லாம் பரஸ்பர புரிந்துணர்வுதான்.

4.9.211 அன்று நடந்த விஜய் டி.வியின் நீயா நானா நிகழ்ச்சியில் அண்ணா ஹசாரே ஊழல் மேளா குறித்து விவாதம் நடத்தினார்கள். அதில் ஆர்.எஸ்.எஸ் அம்பி அரவிந்தன் ( முன்னாள் காலச்சுவடு ஆசிரியர், முன்னாள் இந்தியா டுடே, ) என்பவர் ரொம்பவும் ஜனநாயகமாக அண்ணாவுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தார். இவர்களைப் போன்ற கொள்கைச் சிங்கங்கள் முதலில் எடியூரப்பா, ரெட்டி பிரதர்சு கேங் பற்றி கருத்துச் சொல்லட்டும். அவர்களை கண்டித்து களமிறங்கட்டும். பிறகு நம்மைப் போன்ற பாமரர்களுக்கு ஊழல் ஒழிப்பு பற்றி வகுப்பெடுக்கட்டும்.

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

உயர்நீதிமன்றத்தில் “தினமலர்” எரிப்பு போராட்டம்! படங்கள்!!

75
உயர்நீதிமன்றத்தில் தினமலர் எரிப்பு போராட்டம் புகைப்படங்கள்

5.09.2011 பதிப்பில் “ராஜீவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்”  (தினமலர் அந்த செய்தியை இணையத்தளத்திலிருந்து நீக்கிவிட்டதால் வேறொரு சுட்டி இணைக்கப்பட்டுள்ளது – வினவு) என்ற தலைப்பில் தினமலர் நாளேடு பார்ப்பன வன்மத்துடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. மூவரையும் தூக்கிலேற்ற வேண்டும் என்ற வெறியுடன் எழுதியிருந்த தினமலர் அதில் “காதல் தோல்வியால் தீக்குளிக்கும் செங்கொடிகள்” என்று அயோக்கியத்தனமாக எழுதியிருந்தது. மூவர் தூக்கை நிறுத்த வேண்டுமென்று தன்னை எரித்துக் கொண்ட அந்த இளம்பெண்ணை கொச்சைப்படுத்தி இதே தினமலர் ஏற்கனவேயும் எழுதியிருந்தது. தற்போது அந்த அவதூறு காதல் தோல்வி என்று தூற்றுமளவு வெறுப்புடன் ஆடுகிறது. இதைக்கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அரசியல் அக்கறையுள்ள வழக்குரைஞர்கள் குறிப்பிட்ட தினமலர் நாளேட்டை எரித்து தங்களது எதிர்ப்பை காண்பித்தார்கள். அந்த போராட்டத்தின் புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

பார்ப்பன தினமலரின் சதியை வேரறுப்போம்!

மங்காத்தா: அண்ணா ஹசாரேவை ‘என்கவுண்டர்’ செய்த தல!

106
மங்காத்தா வினவு

மங்காத்தா வினவு

“மனதினை மாற்றடா ஒகே
மகிழ்ச்சியை ஏற்றடா ஒகே
குறைகளை நீக்கடா ஹேஹே
தடைகளை தூக்கிப்போட்டு போடா
உடலுக்குள் நெருப்படா ஹொஹொ
உணர்வுகள் கொதிப்படா ஹஹ
புதுவிதி எழுதடா ஹேஹே
புரட்சியை செய்து காட்ட வாடா…”

– மங்காத்தா பாடல் வரிகள்….

கண்ணில் தெரியும் காட்சிகளை எல்லாம் தனித்தனியாக இரசிப்பதே நமக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கும் பழக்கம். அந்தக் காட்சிகளினிடையே ஊடாடியும், ஊடுறுவியும், வேர்விட்டும் நிற்கும் அந்த மாய இழையை கண்டுபிடிக்கும் போது மட்டுமே, தனித்தனிக் காட்சிகள் இணைந்து எழுப்பும் விரிந்த அந்த பிரம்மாண்டமான ஓவியத்தின் முப்பரிமாணத்தை தொட்டுணர்ந்து உள்ளிழுக்க முடியும். ‘ஆன்மீக’ மொழியில் வருணித்தால் அதுதான் தன்னையே பரப்பிரம்மமென உணரும் தெவிட்டாத பரவச தருணம். எங்கள் மொழியில் சொன்னால் அதுதான்……………? அது என்ன என்று சொல்லிவிட்டால் ஒரு ஆக்சன் த்ரில்லர் பட விமரிசனத்திற்கு செய்யப்படும் அநீதியாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தின்படி இது ஒன்றும் அநீதியல்ல. ஆனாலும்……

நாத்திகத் தமிழினவாதிகள் கோபித்துக் கொண்டாலும் கூட எந்த கட்டுரையும், விசயமும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதுதான் தமிழ் மரபு. இந்து மரபும் கூட. ஆகவே…………

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், விநாயகர் சதுர்த்தி – ஸ்பெசல் டின் பாக்ஸ், நெய் அப்பம், இனிப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, திரட்டி பால், முள்ளு முறுக்கு, கடலை உருண்டை, லட்டு, மனோகரம், தேன் குழல்……. விலை ரூ.279 மட்டுமே. அன்புப் பரிசாக விநாயகர் சிலை, விநாயகர் சி.டி இலவசம்.

ரம்ஜான் தினத்தன்று தினமலரில் வந்த விளம்பரம். அப்துல் காதரும் அம்மாவாசையும் போல் மங்காத்தாவுக்கும் கொழுக்கட்டைக்கும் என்ன தொடர்பு?

ஒரு தேசத்தின் ஊடக விளம்பரங்களை காட்டுங்கள், அந்த தேசத்தின் சமூகத் தரத்தைக் கூறுகிறோம்.…எனும் பொன்மொழிக்கேற்ப….

கவனியுங்கள், கொழுக்கட்டையின் விலை ரூ.279, கொழுக்கட்டையுடன் கூட விநாயகர் சிலை இலவசம். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை பிடிக்கும். அதனால் அவரது நைவேத்தியத்தில் தொந்தி, தும்பிக்கையருகே தரையில் இருக்கும் கொழுக்கட்டை பிரதானம். ஆனால் கிருஷ்ணா ஸ்வீட்சைப் பொறுத்தவரை கொழுக்கட்டை கடவுளாகவும், கடவுள் இனாமாகவும் மாறிய விந்தையின் பொருள் என்ன? நைவேத்தியத்திற்கு விலை, அந்த நைவேத்தியம் படைக்கப்படும் ஆண்டவன் இலவசம் என்றால் உண்மையான ஆண்டவன் யார்?

தின்று செரித்து மலமாகப் போகும் ஒரு கொழுக்கட்டையின் மதிப்பு கூட அதை விரும்பி முழுங்கும் இறைவனுக்கு இல்லை எனில்? ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பாக்சை விலை கொடுத்து வாங்கிச் செல்லும் பார்ப்பன மேட்டுக்குடி பக்தர்களின் தரம் இதுதான் என்றால்?

இங்கே பக்தி ஒரு முகாந்திரம் மட்டுமே. அந்த பக்தியின் பின்னிருந்து இயக்கி முக்தியளிக்கும் கடவுள் பணம், பணம் மட்டுமே. இதைத்தான் மங்காத்தா படத்தில் விநாயக் என்ற பெயரில் வரும் அஜித் ஆங்காங்கே உணர்ச்சிப் பாவத்துடன் கூவுகிறார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பான்சராக நடத்தும் காலச்சுவடு கூட்டமாகட்டும், கர்நாடக கச்சேரியாகட்டும்……எல்லாம் அந்த நிறுவனத்தின் இனிப்பு கார வகைகளை காசு கொடுத்து வாங்கிச் செல்லும் பக்தர்களின் ‘பண்பாட்டு’ தூண்டில். பெப்சி அருந்திக் கொண்டே டோனி அடிக்கும் சிக்சரை சோனி எல்.சிடியில் பார்ப்பதும், கிருஷ்ணா ஸ்வீட்சின் கொழுக்கட்டையை விழுங்கியவாறே விநாயகனை துதிப்பதும் வேறு வேறா என்ன?

மதமோ, விளையாட்டோ எதுவும் வர்த்தகக் கடவுளின் தயவினால் மட்டும் நடக்கும் சமாச்சாரங்கள். சற்று குறிப்பாக பாருங்கள், பெப்சி விற்பதற்காக கிரிக்கெட்டில் தேவைப்படும் சிக்சர், கொழுக்கட்டை விற்பதற்காக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி. பெப்சி அருந்தினால் மட்டுமே சிக்சரின் மதிப்பு புரியும். கொழுக்கட்டையை வாங்கினால் மட்டுமே பக்தியின் மதிப்பு அளவிடப்படும்.

விநாயகர் சதுர்த்தி நாளில், விநாயக் என்ற பெயரில் அஜித் நடிக்க, விநாயகர் ஊர்வலங்களுக்கு பிரபலமான மும்பையில் நடக்கும் மங்காத்தாவின் கதை என்ன? பணம், பணம், பணம். காதல், நட்பு, பாசம், குடும்பம் எல்லாவற்றையும் விட பணம். எந்த வழியிலாவது, என்ன செய்தாவது, எப்படியாவது பணம். ஏன்?

ஆனால் மங்காத்தாவின் பலம் அது மட்டுமல்ல. அது சமகாலத்தின் பணம் குறித்த உணர்ச்சியை, உண்மையை, அரசியலை, பண்பாட்டை, புனிதங்களை வெள்ளேந்தியாக விறுவிறுப்பான காட்சிகளால் உணர வைக்கிறது. அல்லது போட்டுடைக்கிறது. எனினும் நுனிச்சீட்டில் இழுக்கும் வலுவான திரைக்கதை அளிக்கும் பேரின்ப வெள்ளத்தில் திளைக்கும் ரசிக பக்தர்கள் அதை உணர முடியாது என்பது ஒரு யதார்த்தம். ஆனால் பழகிப்போன சமரசங்களும், மரத்துப்போன நீதிகளும், இற்றுப்போன மதிப்பீடுகளும் கொண்ட சூழலை விரும்பி ஏற்றுக் கொள்ளும் ஒரு இரசிகன் அதை தனித்துப் பிரித்து உணர வேண்டிய அவசியமில்லையே?

கால ஓட்டத்தில் நமது விருப்பம், தெரிவு, இரசனை, கொள்கை அனைத்தும் மாறித்தான் போகிறது. ஆனால் அந்த கால ஓட்டத்தை நெறிப்படுத்துவது எது?

மூவர் தூக்கிற்காக தமிழகம் துடித்தெழுந்த போது இந்தியாவில் அதன் மாநகரங்களில் படித்த நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கம் அண்ணா ஹசாரேவின் தலைமையில் ஊழலை எதிர்த்து முழங்கிக் கொண்டிருந்தது. இங்கும் நமது தமிழக நகரங்களில், தலை நகராம் சென்னையில் மேன்மக்கள் கொதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஐ.டி துறையினர், பன்னாட்டு நிறுவனங்களில் பசையான சம்பளத்தை வாங்குவோர், செலிபிரிட்டிகள், திரைத்துறையினர் என்று பலரும் உண்டு.

இந்த மெழுகுவர்த்தி கனவான்களின் அடுத்த சென்சேஷன் எது? ஐ.டி துறை நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது அது மங்காத்தா என்றார்கள். அதிலும் பல நிறுவனங்களில் உள்ள H.R.களே ஏற்பாடு செய்து அலுவகம் அலுவலகமாக கூட்டம் கூட்டமாக மங்காத்தா முதல் காட்சிக்கு சென்றிருக்கிறார்கள் என்பதைக் கேட்ட உடன் ஆவல் பிறந்தது.  படம் பார்த்த நண்பர்களிடம் கதை கேட்டால், “எல்லாம் பணம்” என்றார்கள். ஊழல் ஒழிப்பிற்கு மெழுகுவர்த்தி ஏந்திய கையோடு எல்லாம் பணம்தான் என்றால் எங்கோ இடிக்கிறதே?

_______________________________________

” இன்னும் எத்தனை நாள் நான் நல்லவனாக நடிப்பது “
– மங்காத்தாவில் வினாயக்

நல்லவனாக இருப்பது ஒரு நோக்கம் மட்டுமே. நிறைவேற்றவோ, அதை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கவோ முடியாத போது நடிக்க மட்டும்தான் முடியும். ஆனாலும் நடிப்பது சிரமமில்லையா? நல்லவனாக இருப்பது வேடிக்கையான கேலிப்பொருளான நிலையில் அஜித்தின் வசனத்திற்கு திரையரங்கு ஆர்ப்பரிக்கிறது. அது இயல்பாக தன்னையே கேலி செய்யும் சுய எள்ளல் என்பதை உறுதி செய்ய நீங்கள் மங்காத்தாவை பார்த்திருக்க வேண்டும். இந்த விமரிசனத்திற்கு மங்காத்தாவின் கதை தெரிந்திருப்பது அவசியமா?

எனினும் உங்களுக்காக கதைச் சுருக்கம்……

இந்தியாவின் கிரிக்கெட் சூதாட்டத்தில் கட்டப்படும் பணமெல்லாம் மும்பைக்கு டாலராக 500 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது. சூதாடிகள் அந்த சூதாட்டப் பணத்தை ஐ.பி.எல் பைனலுக்கு பின்னர் முறையாக பிரிப்பதற்கு முன் அதை ஒரு செட்டியாரிடம் பாதுகாக்குமாறு அனுப்புகிறார்கள். கிளப் சூதாட்டத்தை தொழிலாக நடத்தும் செட்டியார் அதன் பொருட்டு ஒரு திரையரங்கையும் நடத்துகிறார். இடையில் செட்டியாரிடம் வேலை செய்யும் ஒருவனோடு இன்னும் மூவர் சேர்ந்து அந்த சூதாட்டப் பணம் 500 கோடியை திருட  திட்டமிடுகிறார்கள்.

தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியான அஜித் அந்த நால்வர் கும்பலின் முயற்சியை கண்டறிந்து தானும் சேர்ந்து கொள்கிறார். அவரது திறமையால் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனாலும் பின்னர் அந்த நால்வர் கும்பலுக்குள் ஏற்படும் துரோகம் காரணமாக சண்டை. இடையில் குடியரசுத்தலைவருக்கு மட்டும் பதில் சொல்லும் அதிகாரம் படைத்த ஒரு போலீசு குழு அர்ஜூன் தலைமையில் இந்தியாவெங்கும் கிரிக்கெட் சூதாட்டப் பணத்தை கைப்பற்றி, சூதாடிகளை கைது செய்கிறது. அவர்களும் இந்த 500 கோடி கொள்ளையை துரத்துகிறார்கள்.

இறுதியில் அர்ஜூனும், அஜித்தும் சந்திக்கிறார்கள். சண்டையில் அஜித் சாவது போல தோன்றினாலும் பின்னர் அவர் கொள்ளைப் பணத்தோடு தாய்லாந்தில் வாழ்வது தெரிகிறது. மேலும் அவரோடு அர்ஜூனும் சேர்ந்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் தெரிகிறது. அஜித் கொள்ளையர்களோடும், அர்ஜூன் போலீசோடு இணைந்தும் பணிபுரிகிறார்கள். பணத்தை பங்கு போடும் போட்டியில் அந்த நால்வர் அணியினர் கொல்லப்படுகிறார்கள். சூதாட்ட மையமான செட்டியாரை நெருங்குவதற்குகாவே அஜித் அவரது மகள் த்ரிஷாவை காதலிக்கிறார். காரியம் கை கூடியவுடன் காதலை தூக்கி எறிகிறார். கதை போதுமா?

____________________________________________

” இது அம்பானி பரம்பரை, அஞ்சாறு தலைமுறை, ஆனந்தம் வளர்பிறை….
ஆடாம ஜெயிச்சோமடா, ஓடாம ரன்னெடுத்தோம், சும்மா உக்காந்து வின்னெடுத்தோம்….

– மங்காத்தா பாடல் ஒன்றிலிருந்து….

மங்காத்தா குறித்த பதிவுலக விமரிசனங்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. விறுவிறுப்பான படம், முன்பாதி கொஞ்சம் நீளம், பின்பாதி நறுக், ஐம்பாதாவது படம் வெற்றிப்படமாக அமைவது பலருக்கு நடக்கவில்லை, தல ஜெயித்திருக்கிறார், இளந்தொந்தி, நரை முடி, நாற்பது வயதை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்,…………இவைதான் அவற்றின் சாரம். இமேஜைப் பற்றி கவலைப்படாமல் நடித்திருக்கும் அஜித்திற்கு பாராட்டு மழைகள் குவிகின்றன. இதில் இமேஜை தியாகம் புரிந்திருப்பது எங்கே வருகிறது?

திரைக்குள்ளே பிடரியில் வழியும் முடி, பீடி, பன்ச் டயலாக் என புகழடைந்த ரஜினி திரைக்கு வெளியே வழுக்கை, நரை, தாடியுடன்தான் நடமாடுகிறார். 60 வயது பிறந்த நாட்களை கொண்டாடியபடிதான் இன்றும் சினிமாவில் நடிக்கிறார். இவையெல்லாம் ரஜினியின் மாகமித்யங்கள் என்று சொல்லுவதை விட ஆண்மையின் அடையாளம் என்று சொல்லுவதே பொருத்தம். ஆனால் இத்தகைய வாய்ப்புகள் ஒரு நடிகைக்கு இல்லவே இல்லை. அஜித்தின் ஜோடி த்ரிஷா இது போல தனக்கு 35 வயது என்று ஒரு பேச்சுக்கு அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்?

நடிகைகள் திருமணம் புரிந்தாலே அவர்களது சந்தையும், நடிப்பும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஆனால் நடிகர்களோ அவர்கள் திருமணம் புரிந்தாலும், பிள்ளைகள் பெற்றுக் கொண்டாலும், நடுத்தர வயதில் டீன் வயது நாயகிகளோடு டூயட் பாடுவதும், கல்லூரிக்கு போவதும் சாதாரணம். வேறு வார்த்தையில் சொன்னால் ஒரு ஆண் எந்த வயதிலும் பெண்டாளுவதற்கு தயாராக இருக்கிறான். அப்படி இருப்பதுதான் அவனது அடையாளம் எனும் ஆணாதிக்க சமூக மனோபாவத்தில்தான் அஜித்தின் நாற்பது வயது பிரகடனம் மாபெரும் தியாகமாக போற்றப்படுகிறது. சரி, அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் 2வது சுதந்திரப் போராட்டமாக போற்றப்படும் போது அஜித்தின் தியாகத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?

50 படங்களை முடித்திருக்கும் அஜித் மங்காத்தாவைத் தவிர மீதி படங்களில் வழமையான நீதி பேசும் நாயகனாகவே நடித்திருக்கிறார். வாலி, பில்லா போன்ற படங்களில் அவர் இரட்டை வேடங்களில் ஒன்றில் மட்டும் வில்லனாக நடித்திருந்தாலும் அவைகளின் தீமையை நன்மை வேட அஜித் விஞ்சி விடுகிறார். ஆனால் மங்காத்தாவில் ஒரு முற்றிலும் வில்லத்தனமான பாத்திரத்தில் அவர் நடிக்கத் துணிந்திருப்பது முதலில் ஒரு பாரிய மாற்றம் என்று தோன்றினாலும்…..

சில விதிவிலக்குகளைத் தவிர தமிழ் ஹீரோக்கள் அனைவரும் தீமையினை வென்று நன்மையை நிலை நாட்டும் வீரர்களாகவே நடித்திருக்கிறார்கள். அப்படித்தான் இரசிகர்களும் போற்றுகிறார்கள். எம்.ஜி.ஆர், ரஜினி ஃபார்முலாவின் இலக்கணமே அப்படித்தான். ஆனால் மங்காத்தாவில் இந்த இலக்கணம் சுக்கு நூறாக உடைத்தெறியப்படுகிறது. இது நடிகர், இயக்குநரின் புரட்சி என்பதை விட வில்லத்தனமே இனி வாழ்வின் கொண்டாட்டங்களுக்கு அடிப்படை என்று தெளியும் நடுத்தர வர்க்கத்தின் சமூக உணர்ச்சிக்கு பொருத்தமான கதை என்று சொல்லலாமா? இந்த பண்பு மாற்றத்தினை விமரிசனம் எழுதிய பதிவர்கள் யாரும் கவனிக்கவில்லை என்பதை விட அப்படி கவனித்து பார்க்குமளவு இது ஒன்றும் அந்நியமானதல்ல என்றும் சொல்லலாமல்லவா?

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தாய்க்குலம் மீதான செண்டிமெண்ட்தான் தமிழ் சினிமாவை காலந்தோறும் தாங்கி வந்த அஸ்திவாரம். அதை காதல், பாசம், நட்பு, தேசபக்தி என்று கிளை விரித்துப் பார்த்தாலும் எல்லாவற்றிலும் தாய்க்குலத்தின் மேன்மை போற்றப்பட்டிருக்கும். திரையங்குகளில் தாய்மார்களின் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைப் பொறுத்து ஒரு படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படும் நிலை.

பார்க்காமலேயே காதல் என்று காதலுக்கு புதிய பரிமாணம் படைத்த காதல் கோட்டை, மிரட்டி காதலிக்க வைத்த அமர்க்களம் என்று பல்வேறு காதல் படங்களில் நடித்துப் புகழடைந்த அஜித் இங்கே காதலை இரசிகர்களின் பேராதரவுடன் கதறக் கதறக் ‘கற்பழிக்கிறார்’.

லட்சுமிராயுடன் படுத்துவிட்டு அவரை தந்திரமாக வெளியேற்றிவிட்டு, காதலி த்ரிஷாவை அப்பாவி போல வரவேற்கிறார். கண்மூடி முத்தமிடுகிற இடைவேளையில் த்ரிஷாவுக்குத் தெரியாமல் லட்சுமிராயின் பர்சை வெளியே நிற்கும் அவரிடம் கொடுத்து விட்டு “என்னாச்சு” என்று கேட்கும் த்ரிஷாவிடம் பல் விளக்கிவிட்டு வரவா என்று இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்பது போல் சொல்லும்போது இரசிகர்களின் நகைப்பு ஆரவாரத்துடன் மயிர் கூச்செரிகிறது. பணம் கொள்ளையடிக்கப்பட்டவுடன் இனி காதலுக்கு வேலையில்லை என்றவுடன் த்ரிஷாவின் முன்னே அவரது தந்தை செட்டியாரை ஓடும் காரிலிருந்து தள்ளிவிடுகிறார். அப்போது காட்டும் அஜித்தின் முகபாவம் ” போங்கடி நீங்களும் உங்கள் காதல் மசுரும்” என்பது போல அபிநயிக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?

சேர முடியாமல் தவிக்கும் காதல் உணர்ச்சிப் படங்களுக்கு அடிமையாயிருந்த இரசிகர்கள் இங்கே படத்தின் துவக்கத்திலேயே காதலை செருப்பில் போட்டு மிதிக்கும் காட்சிகளில் மனதை பறி கொடுத்த மர்மம் என்ன? ஆம் நண்பர்களே அந்த தலைமுறை மாறிவிட்டது என்ற உண்மையினை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். அதனால்தான் சின்னத்தம்பியின் அந்த பாடிகார்டு காதல் சென்டிமெண்டை வைத்து பி.வாசு அரைத்திருக்கும் புலி வேஷம், புளித்துப் போய் தவளை வேடமாய் இரசிகர்களால் புறக்கணிக்கப்படும்போது மங்காத்தா சீறும் சிறுத்தை போல பட்டயைக் கிளப்புகிறது. இது பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என்ற வேறுபாட்டால் நடக்கவில்லை. எந்தக் கதை சமூகத்தின் உணர்ச்சியோடு பொருந்திப் போகிறது என்பதோடு தொடர்புடையது. எனில் அந்த உணர்ச்சி எது?

படத்தில் பல ஆண் நண்பர்களோடு பழக்கமுடைய காமக்கிழத்தியாக வரும் லட்சுமி ராய்தான் இரசிகர்களின் மனதை அள்ளுகிறார். அடக்க ஒடுக்கமாகவும், ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் கொஞ்சம் மதுவருந்தும் அல்ட்ரா மாடர்ன் காதலியாக த்ரிஷா இருந்தாலும், ராயின் இருப்பே இரசிகர்களுக்கு விருப்பமானதாக இருக்கிறது. இதை லக்கிலுக் போன்ற ஃபார்முலா விமரிசன பதிவர்கள் கவர்ச்சியின் அளவுகோலால் வரையறுக்கிறார்கள். ஆனால் உடல் தோற்றம் தரும் கவர்ச்சியை விட மனம் விரும்பி ஒட்டும் கருத்து உணர்ச்சிதான் இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவதற்கான அளவுகோல். அந்த நவீன உணர்ச்சிதான் என்ன?

காலம் முழுவதும், வாழ்க்கை முழுவதும் ஒரு பெண்ணை மட்டும் நினைத்து இராமன் போல ஏகபத்தினி விரதனாக இருப்பது ஒரு இலட்சியம் என்ற அளவில் கூட இன்று மதிப்பற்றது. முன்பு கூட அப்படி ஒரு யதார்த்தம் நிறைவேறக் கடினமானது என்றாலும் மதிப்பீடு என்ற அளவிலாவது அது நினைக்கப்பட்டு வந்தது. அதனால்தான் அத்தகைய காதல் படங்கள் கட்டற்று ஓடி திரையுலகை ஆக்கிரமித்து வந்தன. இனியும் கூட அத்தகைய படங்கள் வரும் என்றாலும் அது முந்தைய காதல் போன்று புனிதக் காதலாக இருக்க வாய்ப்பில்லை. சமூக வாழ்க்கை மாறுவதற்கேற்ப காதலும் கூட மாறித்தானே ஆக வேண்டும்?

செட்டியாரிடம் வேலை செய்து பின்னர் அவரது பணத்தை கொள்ளையடிக்க முனையும் வைபவ் தனது காதல் மனைவி அஞ்சலியுடன் அன்பாக அன்னியோன்யமாக வாழ்கிறார். அர்ஜூனும் தனது மனைவியை காதல் பாசத்துடன் பராமரிக்கிறார். ஆனால் கதையின் திருப்பங்களுக்குத் தேவை என்ற அளவில் வரும் இந்தக் காதல் காட்சியின் உணர்ச்சிகளை இரசிகர்கள் பொருட்படுத்தவில்லை. பின்னர் தனது மனைவியைக் காப்பாற்றுவதற்காக வைபவ் மற்றவர்களை காட்டிக் கொடுக்கத் துணியும் போது கூட அவர் மேல் இரசிகர்கள் அனுதாபம் கொள்ளவில்லை. அவரை ஒரு வில்லனாகவே பார்க்கிறார்கள். இந்த உலகின் நம்பர் ஒன் காதலியாக பணம் இருக்கும் போது இந்த மனிதப்பிண்டமான ஒருவருக்கு ஒருவர் எனும் காதல் தனது புனிதத்தை முன்வைப்பது பொருத்தமாக இல்லை என்பது வேறு விசயம். “பணம் இருந்தால் நமக்கு ஆயிரம் பெண்கள் கிடைப்பார்கள்” என்று அஜித் பேசும்போது இரசிகர்கள் கைதட்டி வரவேற்பதின் பொருள் அதுதானோ?

வேறு வழியின்றி ஒரு மனைவி, ஒரு காதலி, ஒரு கேர்ள் பிரண்டுடன் வாழ்பவர்களும் கூட தொட்டறியத்தக்க தவறுகளை செய்யாதவர்களாகவே இருந்தாலும், அவர்கள் மனது அப்படி வாய்ப்பிருக்கும்போது பலரை அனுபவிக்கவே நினைக்கிறது. வாழ்வின் இன்பச் சிகரங்களை எட்டுவதற்கு பணம்தான் ஏணி எனும் போது ஏற ஏற துய்க்க வேண்டிய இன்பங்களின் எண்ணிக்கை கூடி விடுகின்றன. காதலும் இல்லையில்லை காதல்களும் அதில் அடக்கம்தானே?

மேலதிக ஐந்திலக்கச் சம்பளத்தில் வாழப் பழகிவிட்ட இன்றைய படித்த தலைமுறையினர் காதலுக்காக முன்பு போல போராடுவதில்லை. “ஜாலிக்காக காதல், செட்டிலாவதற்காக திருமணம்” என்பதே அவர்களது சமூக முழக்கமாக இருக்கும் போது லட்சுமிராய் மட்டும் கிளுகிளுப்புடன் இரசிக்கப்படுவதில் வியப்பில்லை. ஆனால் பணத்தை எடுத்துக் கொண்டு நால்வர் கும்பலில் இருவர் மட்டும் போகும் போது லட்சுமிராயும் இணைந்து கொள்கிறார். அதில் ஒருவனை அவர் சுட்டுக் கொல்ல பணத்தின் பங்கு இருவருக்கு மட்டும் என்றாகிறது. அந்த நேரத்தில் அஜித் வரும்போது அவருடன் சேர்ந்து கொள்வதாக கூறி அவரைக் கொல்ல முனைகிறார். ஆனால் அஜித் அதை முன்னறிந்து லட்சுமி ராயை கொல்கிறார். கொல்லும் போது “தேவடியா முண்டை” என்று திட்டுவது சென்சாரில் மியூட் செய்யப்பட்டாலும் தெளிவாக புரிகிறது. இரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள், அந்த வசனத்திற்கு. அனுபவித்து விட்டு மட்டும் போக வேண்டிய ஒரு காமக்கிழத்தி வாழ்க்கையை அதாவது பணத்தை பங்கு கேட்டால்?

_________________________________________________________

“தி இஸ் மை Fucking மணி, தி இஸ் மை Fucking கேம்”
மங்காத்தாவில் வினாயக்கின் பஞ்ச் டயலாக்.

பஞ்ச் டயலாக் என்றால் எதுகை, மோனை, சந்தத்துடன் மட்டும் வருவது அல்ல. கல்லூரி மாணவர்கள் தலைமுறை தலைமுறையாக தங்களது கலாட்டாக்களுக்கேற்ற பழமொழிகளை புதுப்பிக்கிறார்கள். அவை அந்தந்த கால இளையோரது மன ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. பணம் குறித்த அஜித்தின் கர்ஜனை முழக்கம் வாக்கியமென்ற வகையில் சாதாரணமாக இருந்தாலும் வாழ்க்கை என்ற வகையில் முக்கியமான ஒன்று.

ஹாலிவுட்டில் கொள்ளை, திருட்டு குறித்து ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில மங்காத்தா எனும் மசாலாவை விட காத்திரமான முறையில் அழுத்தமாக வந்திருக்கின்றன. தமிழ் இயக்குநர்கள் சுட்டுப் படமெடுப்பது தினசரி குடிக்கும் சரக்கு போல சாதாரணம் என்றாலும் இயக்குநர் வெங்கட் காலத்துக்கேற்ற கதைக்களத்தினையும், உணர்ச்சியையும் மீட்டிருக்கிறார் என்பதே முக்கியமானது. அந்தக் காலம் எது?

அண்ணா ஹசாரே திகார் சிறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது டைம்ஸ் நௌ தனது பிரச்சாரத்தினை சூடு பறக்க ஆரம்பித்திருந்த நேரம். அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்படித்த செய்தி ஒன்று. ஹாங்காங்கில் இருக்கும் மார்கன் ஸ்டான்லி எனும் நிதி மூலதன ஆலோசனை நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் சேட்டு அம்பி ஒருவன் இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு மும்பை வந்து சேர்கிறான். இந்தியாவில் இருக்கும் போது வருமானவரியை ஏமாற்றியதையெல்லாம் ஹாங்காங்கில் தன்னால் நினைத்துப் பார்க்க முடியாது என்று கூறுபவன் அது போன்று இந்தியாவிலும் வரவேண்டுமென்று இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக கூறுகிறான்.

மார்கன் ஸ்டான்லி எனும் நிதி மூலதன ஆலோசனை நிறுவனம் பங்குச் சந்தை சூதாட்டங்களையே தொழிலாக கொண்டு நடத்தப்படும் நிறுவனம். தனியார் மயத்திற்காக பொதுத்துறைகளை விற்க வேண்டுமென்பதையே தொழில் முறை ஆலோசனைகளாக அமல்படுத்தும் நிறுவனம். இப்படி சூதாட்டத்தையே தொழிலாகக் கொண்டு வாழும் அந்த சேட்டுப்பையன் இங்கே ஊழலை எதிர்க்கிறான் என்பதை என்னவென்று சொல்வீர்கள்? இதுதான் இந்தக் காலத்தின் உணர்ச்சி என்றால் ஏற்பீர்களா?

ஹாலிவுட்டின் கொள்ளையடிக்கும் படங்கள் ராபின் ஹூட்டில் துவங்கி ஒரு நீண்ட மரபினைக் கொண்டிருக்கிறது. திருட்டின் மீது மக்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கக் காரணம் சொத்துடமையின் ஏற்றத்தாழ்வான சமூக யதார்த்தம்தான். நேர்மையாக வாழ்ந்து அரை வயிற்றுக் கஞ்சி குடிக்கும் எளியோரும் தாம் அதிகம் பணம் சம்பாதிப்பதை ஒரு கனவாகவோ, இல்லை சினிமாவாகவோ நினைத்துப் பார்த்து மகிழ்வதை நாம் புரிந்து கொள்வது கடினமல்ல. அநீதியான இந்த சமூக அமைப்பு தான் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஆயிரம் தடைகள் ஏற்படுத்தியிருக்கும் போது அந்த தடைகளை ஒரு கொள்ளையன் தகர்த்தெறிவதை மக்கள் விரும்பாமலில்லை.

ஆனால் இந்த விருப்பம், கனவு வர்க்க ரீதியாக மேலே செல்லச் செல்ல வேறு பரிமாணத்தை எடுக்கிறது. பசையான சம்பளத்துடன் வாழும் படித்த நடுத்தர வர்க்கம் இந்தக் கனவினை நனவாக்க பங்குச் சந்தை, சிட் பண்ட், தங்க முதலீடு, ரியல் எஸ்டேட் என்று தன்முன் விரிந்திருக்கும் ராஜபாட்டையில் வேகமாக ஒடுவதற்கு விரும்புகிறது. சொந்த வீடு, சில பல இலட்சங்களில் வாரிசுகளுக்கு இன்ஜினியர், மருத்தவர் சீட், தொடர்ந்து விலையேறும் நிலம் எல்லாம் அவர்களுக்கு இருந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தங்கள். தனது அலுவலகத்திற்கு வாங்க வேண்டிய ஸ்டேசனரி பொருட்களுக்காக கமிஷன் வாங்கும் தனியார் நிறுவன அதிகாரியோ, தனியார் நிறுவனங்களை கவனிப்பதற்காக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரியோ இப்படித்தான் ஓடுகிறார்கள். ஊழலின் ஊற்று மூலம் முதலாளித்துவம் என்றாலும் ஊழலின் சமூக அடிப்படை இவர்களைக் கொண்டே தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. கூடவே இவர்கள்தான் ஊழல் ஒழிப்பிற்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். எனில் இது என்ன வகை முரண்?

படத்தில் அஜித்து புகை பிடிப்பதிலும், குடிப்பதிலும் அப்படியே கிழக்கு மகாபலிபுரம் சாலையின் வார இறுதிக் கொண்டாட்டத்தினை நினைவுபடுத்துகிறார். மகாபலிபுரம் செல்ல முடியாதவர்கள் டாஸ்மாக்கை மொய்க்கிறார்கள். அன்றாடம் அளவாகவோ, அளவு கடந்தோ, வார இறுதியில் அசுரத்தனமாகவோ குடிக்க வேண்டுமென்றால் வாழ்க்கையை இன்பமென பருகி நுகர பல்வேறு பொருட்களும், வசதிகளும், ஆடம்பரங்களும், சேவைகளும் வேண்டும். அவற்றை அடைய குறுக்கு வழியில் பணம். பணத்தை அடைந்தால் கொண்டாட மது.

மங்காத்தா படத்தை இரசிப்பவர்களெல்லாம் உடனே திருடி சம்பாதித்து கொண்டாடப் போகிறவர்கள் அல்லதான். ஆனால் அப்படி திருடாவிட்டாலும் ஏதாகிலும் குறுக்கு வழியில் பணம் வரவேண்டும் என்ற விருப்பமுடையவர்கள். இப்படி பொங்கி வழியும் நுகர்வுக் கலாச்சார மதத்தின் ஒரே கடவுளான பணத்தை அதை சம்பாதிப்பதை அல்லது கொள்ளையடிப்பதை ஒரு தேர்ந்த ரசனையுடன், திறமையுடன், வெறியுடன் செய்யும் அஜித்தின் காட்சிகளில் இரசிகர்களின் மனம் அவர்களையறியாமலேயே ஒன்றுகிறது. அந்த மாபெரும் பணம் என்ற உணர்ச்சிதான் காதலை கத்திரிக்காய் போல தூக்கி எறிவதை ஏற்றுக் கொள்கிறது. படித்த நடுத்தர வர்க்கத்தின் சமூக உணர்ச்சி இந்தப் பணத்தோடு தொடர்புடையது என்பதை யார் மறுக்க முடியும்? பணத்திற்காக வெறி கொண்டவனாக அஜித் கத்தும் முகபாவனைகளும், வீடியோ கேமில் வென்றே ஆக வேண்டுமென்று ஒரு மேட்டுக்குடி சிறுவன் காட்டும் வன்முறை முகபாவனைகளும் வேறு வேறு அல்ல.

அண்ணா ஹசாரேவுக்காக சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்திய படங்கள் வெளியாகியிருந்தன. படத்தில் ஐ.ஐ.டி கோல்டு மெடலிஸ்ட்டாக வரும் பிரேம்ஜி கொள்ளையடிப்பதற்கான சாப்ட்வேர் வேலைகளை திறமையுடன் செய்கிறார். 65.000 ரூபாய் சம்பளத்தில் பெங்களூரு போக வேண்டியவர் இங்கே நூறு கோடி சம்பாதிப்பதற்கு வாய்ப்பிருப்பதை ஒரு கேரியர் முன்னேற்றமாக எடுத்துக் கொள்கிறார், பேசுகிறார். நிஜத்தில் இந்தியாவில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்மில் படித்துவிட்டு நாசாவில் உலகநாடுகளை ஒழிப்பதற்கு வேலை செய்பவர்களும், கோல்டு மேன் சாசில் கள்ளக்கணக்கு எழுதுபவர்களும் சொல்லும் சலித்துப்போன விசயம் என்ன? “இந்தியாவில் தகுதி, திறமைகளுக்கு வாய்ப்பில்லை, எங்கள் திறமைகளுக்கு மதிப்பளிப்பது அமெரிக்காதான்”. ஆனால் இந்த பச்சையான தேச துரோகிகள் அமெரிக்காவிலும் அண்ணா ஹசாரேவுக்காக போராடாமல் இல்லை. இது முரணா, இல்லை முரணை மறைக்கும் மயக்கமா ?

ஐ.ஐ.டி மாணவர்களை இயக்குநர் வெங்கட் பிரபு இழிவுபடுத்தி விட்டதாக அவர்கள் யாரும் சண்டைக்கு வரப்போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இப்படி ‘சாகசங்கள்’ செய்து பணம் அள்ளுவது ஒரு தவறல்ல. ஆனால் ஒரு தலித் மாணவன் அங்கே நுழைந்தால் கோட்டா என்று கேலிசெய்வதும், இந்தியாவில் மெரிட்டுக்கு மதிப்பில்லை என்று போராடவும் செய்வார்கள். இவர்கள்தான் அண்ணா ஹசாரேவின் போர்ப்படைத் தளபதிகள் எனில் இந்தப் போர் யாரை எதிர்த்து?

அஜித், அர்ஜூன் இருவரும் ஆந்திர கேடரைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள். 500 கோடியைக் கொள்ளையடிக்க ஒருவர் போலீசு துறையின் உள்ளேயும், ஒருவர் வெளியேயும் வேலை செய்கிறார்கள். அதிலும் அர்ஜூன் குடியரசுத் தலைவரின் நேரடி அதிகாரம் பெற்ற சூப்பர் போலீசு. இதுவரை அர்ஜூன் எத்தனை தேசபக்திப்படங்களில் சூப்பர் காப்பாக நடித்திருக்கிறார், எத்தனை பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை கொன்றிருப்பார், தீவிரவாதிகளின் அபாயத்திலிருந்து எத்தனை முறை தேசத்தையும், பிரதமரையும் காப்பாற்றியிருப்பார்? அத்தகைய டிரிபிள் எக்ஸ்-எல் தேசபக்தி எக்ஸ்பர்ட் இங்கே ஒரு அல்ட்ரா மாடர்ன் கொள்ளையின் சூத்திரதாரி என்றால்?

எனில் அர்ஜூனும் தனது இமேஜைத் துறந்து விட்டார் என்று பொருளா? இல்லை. ஒருவேளை இந்தப்படத்தில் அவரை ஐ.எஸ்.ஐ உளவாளியாக நடிக்க கேட்டிருந்தால் நிச்சயம் மறுத்திருப்பார். ஏனெனில் பாக்கிஸ்தானை ஆதரிப்பதுதான் தேச துரோகமே அன்றி பணத்தை குறுக்கு வழியில் சம்பாதிப்பது அல்ல. இப்போது யாரும் திகார் சிறையில் ஊழல் வழக்களுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் அரசியல் வாதிகள், அதிகாரிகளை அப்படி கசாப் போன்று தேசவிரோதிகளாக கருதவில்லையே?

போலீசு அதிகாரிகளின் கடமை, நேர்மைகளைப் பற்றி விடாது பேசி பொளந்து கட்டும் நம்ம ஆக்ஷன் கிங்கை இப்படி பீரோ புல்லிங கொள்ளையன் போல இல்லாமல் கொஞ்சம் மாடர்னாக காட்டியிருந்தாலும் இதற்காகவே இயக்குநருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் சி.பி.ஐ டயரிக் குறிப்பு துவங்கி, விஐயகாந்த் வரை இவர்கள் போலீசுக்கு போற்றிப் பாடிய தூபங்களையெல்லாம் மங்காத்தா அடித்துக் காலி செய்திருக்கிறது. எனினும் XXXL  தேசபக்தி அர்ஜூன் இமேஜ் ஆத்மா சாந்தியடையும் வண்ணம் செட்டியாரின் அடியாளாக முசுலீம் அடையாளத்துடன் வரும் நடிகர் பின்னர் நால்வர் கும்பலைச் சேர்ந்த திருட்டு போலீஸ் இன்ஸ்பெக்டரால்  கொல்லப்படுவது படத்தில் இருக்கிறது.

ஆனாலும் பணத்தை காலம் அளிக்கும் தருணத்தில் கைப்பற்றும் வாய்ப்பை யாரும் இழக்கக் கூடாது என்பது ஒரு சமூக உணர்ச்சியாக கோலேச்சும் காலத்தில் இந்த நல்ல அதிகாரி இமேஜ் மாறியிருப்பது குறித்து இரசிகர்கள் அவ்வளவாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. திருட்டு வேறு, தீவிரவாதம் வேறு என்ற லாஜிக்படியும் அது அப்படித்தான் இருக்கிறது.

வார நாட்களில் கடுமையாக ‘உழைத்து, சிந்தித்து’ பணத்தை திருடி விட்டு வார இறுதியில் குடியும் கூத்துமாக கொண்டாடலாம் என்பதே மங்காத்தா நமக்குச் சொல்லும் நீதி. ஒரு மசாலா படத்துக்கு இவ்வளவு வலிந்து கட்டி விமரிசனமா என்று பலர் ஐயுறலாம். ஆனால் மங்காத்தாவின் கதை தற்செயலாக எடுக்கப்பட்டிருப்பினும் அது ஜஸ்ட் லைக் தட் கடந்து செல்லும் கதையாக இருப்பினும், அது ஆங்காங்கே இயல்பாக தெரிவிக்கும் வாழ்க்கை குறித்த யதார்த்தங்கள் நமக்கு முக்கியமானவை. அதை முற்றும் உணர வேண்டுமென்றால் சமகால இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக யதார்த்தத்தினை புரிந்திருக்க வேண்டும்.

மங்காத்தா படத்தை அழகிரி மகன் தயாரித்திருந்தாலும் சில ‘பிரச்சினைகள்’ காரணமாக சில சுற்றுக்களுக்குப் பின்னர் சன்.டி.வியால் வெளியிடப்பட்டிருக்கிறது. மங்காத்தா படம் ஏன் இப்படி ஓடுகிறது என்ற காரணம் தெரியாத இயக்குநர் வெங்கட் பிரபு திருப்பதி சென்று மொட்டை அடித்திருக்கிறார். கருப்புப் பணத்தை காணிக்கையாக அள்ளும் கடவுளுக்கு அவர் பக்தராக இருப்பதும் பொருத்தமானதுதான். ஆனால் தான் ஒரு மொக்கை, தன் படமும் ஒரு மொக்கை என்பதில் அவருக்கு கருத்து வேறுபாடு இருக்காது. இருப்பினும் வரலாற்றின் சில காட்சிகளில் மொக்கைகள் கூட அறிந்தோ அறியாமலோ இப்படி ஒரு படத்தை தரலாம். இது அவர்களது அறிவு குறித்த பிரச்சினை அல்ல, அவர்களின் சமூக உணர்வு அல்லது ட்ரெண்ட் குறித்த எச்சரிக்கை உணர்வு என்றும் சொல்லலாம்.

படத்தில் கிரிக்கெட் சூதாடிகளை அர்ஜூன் குழுவினர் பிடிக்கும் செய்திகள் காட்டப்படும் போது அருகில் அண்ணா ஹசாரேவின் போராட்டச் செய்திகளும் காட்டப்படுகின்றன. ராமலீலா போராட்டத்திற்கு முன்னரேயே மங்காத்தா படம் எடுக்கப்பட்டிருப்பினும், போஸ்ட் புரடக்ஷனில் சென்சேஷன் கருதி படக்குழுவினர் இதை சேர்த்திருக்கிறார்கள். எனினும் இரண்டும் ஒன்றுதான் என்று இயக்குநர் காட்ட முனைந்திருப்பார் போலும். உண்மைதான். நாமும் அதைத்தான் சொல்கிறோம்.

அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் மெழுகுவர்த்தி பிடித்த கையோடு அடுத்த நாள் மங்காத்தாவை முதல் காட்சிக்கு சென்று இரசிக்க முடியுமென்றால் இரண்டில் எது உண்மை? முன்னது ஒரு தர்ம சேவை வீக் எண்ட் என்றால் பின்னது பொழுது போக்கு வீக் எண்ட் என்றும் சொல்லாம். முன்னது அவர்களின் அரசியல் பார்வை என்றால் பின்னது அவர்களின் கலைப்பார்வை என்றும் சொல்லலாம். அதனால்தான் அண்ணா ஹசாரேவின் அரசியலுக்கு பொருத்தமான கலை உணர்ச்சி மங்காத்தாவில்தான் வெளிப்படுகிறது என்பதை நாம் உறுதியாகச் சொல்கிறோம். ஊழல் எதிர்ப்பும் ஒரு ஃபேஷன், பணம் சம்பாதிப்பதும் ஒரு பேஷன். முன்னது நாட்டுக்காக, பின்னது தனக்காக.

இதற்கு மேலும் புரியாதவர்களுக்குத்தான் இந்தத் தலைப்பு:

அண்ணா ஹசாரேவை என்கவுண்டர் செய்த ‘தல’ யின் மங்காத்தா!

அல்லது

IF I AM ANNA, I AM MANKATHA TOO !

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

“ரிலையன்சோடு பாத்து நடந்துக்கங்க!” – பிரணாப் முகர்ஜி

14

ன் லோக்பால் வேண்டும் என்று கோரி அண்ணா ஹசாரே 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததை ஆங்கில ஊடகங்கள் ஆகஸ்ட் க்ராந்த்தி என்றன. சில தமிழ் ஊடகங்களில் கூட இப்போது கடந்த மாதம் நடந்த கூத்துகளை ஆகஸ்டு புரட்சி என்றே குறிப்பிடுகின்றனர். அது ஒரு பக்கம் இருக்கட்டும். மேற்படி ஆகஸ்டு புரட்சியின் போது நாளொரு நிலைப்பாடும் பொழுதொரு கொள்கையும்  எடுத்து குழப்புவதற்குப் பெயர்போன காங்கிரஸையே அண்ணா குழப்பியடித்தார்.

மூன்றே நாளில் மசோதா வேண்டும் என்றார். இந்த மாதத்துக்குள் மசோதா நிறைவேற வேண்டும் என்றார். பிரதமரை ஜன்லோக்பாலில் கொண்டு வர வேண்டுமென்றார். அதை அப்படியே விட்டு விட்டு அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவைத் திரும்பப் பெற்றே ஆக வேண்டும் என்றார். பிறகு அந்தக் கோரிக்கையை திராட்டிலில் விட்டு விட்டு எங்கள் லோக்பாலையும் சேர்த்து கொஞ்சம் கவனிங்க என்றார். கடைசியில் அத்தனை நாட்கள் கேட்டதையெல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு மூன்று கோரிக்கையில் வந்து நின்றார்.

அந்த மூன்று கோரிக்கையுமே மொக்கைக் கோரிக்கைகள் என்று தனியே சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறோம். இப்படி அண்ணா ஹசாரே மாறி மாறி பேசிக் கொண்டிருந்த சமயத்தில் இதில் இருக்கும் இடியாப்பச் சிக்கல்களை அவிழ்க்க களமிறக்கப்பட்டவர் தான் பிரணாப் முகர்ஜி. அந்த சமயத்தில் அரசியலில் போடப்படும்  முடிச்சுகளையெல்லாம் அவிழ்க்கும் தெள்ளியதோர் முடிச்சவிழ்க்கி என்று ஆங்கில ஊடகங்கள் அவரை போற்றிப் புகழ்ந்தன. அப்போது அண்ணாவுக்கும் பிரணாபுக்கும் இடையே தூதுப் புறாவாக செயல்பட்டவர் விலாஸ்ராவ் தேஷ்முக்.

கபில் சிபலும், சிதம்பரமும் பேட் பாய்ஸ் என்றும், விலாஸ் ராவ் தேஷ்முக்கும் பிரணாபுமே குட்பாய்ஸ் என்றும் அண்ணா கும்பல் இவ்விருவருக்கும் நற்சான்றிதழ் வழங்கியிருந்தது. விலாஸ்ராவ் தேஷ்முக் நமக்குப் புதியவரல்ல. முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் – தற்போது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான கேபினட் அமைச்சர். இவரை 2g ஸ்பெக்ட்ரம் ஊழலை விட பெரியது என்று சொல்லப்பட்ட ஆதர்ஷ் வீட்டு மனை ஊழல் மூலம் நாட்டு மக்கள் சிறப்பாக அறிவார்கள். ராம்லீலா மைதான மேடையில் அண்ணாவும் விலாஸ்ராவும் கட்டிப் பிடித்து போட்டோவுக்கு போஸ் கூட கொடுத்தார்கள். அதில் அண்ணா அம்சமாக சிரித்திருப்பார் – மராத்தி மானூஸ் சிரிப்பாய் சிரித்தது. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இன்னொரு ‘நல்லவரான’ பிரணாப் முகர்ஜி பற்றி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையில் கடந்த 30-ம் தேதி ஒரு செய்தி வந்துள்ளது.

பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் செபி அமைப்பின் சேர்மனாக இருந்த யு.கே சின்ஹா என்பவருக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அவரது ஆலோசகரான ஓமிதா பவுலும் சில பெரிய நிறுவனங்கள் தொடர்பான தாவாக்களைக் கையாள்வது தொடர்பாக சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளனர். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், அனில் அம்பானியின் அடாக், ராஜஸ்தான் வங்கி, சஹாரா குழுமம் உட்பட சில பெரிய கார்பப்ரேட் நிறுவனங்கள் தொடர்பான முறைகேடுகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ‘பார்த்து பக்குவமாக’ நடந்து கொள்ளுமாறு நிதியமைச்சர் பிரணாப் அழுத்தம் கொடுத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, மேற்படி நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களை கவனித்து வரும்  ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆபிரகாமிடம் நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் படி இந்நிறுவனங்கள் தொடர்பான விஷயங்களில் நீக்குப் போக்காக நடந்து கொள்ள வேண்டும் என்று யு.கே. சின்ஹா அறிவுறுத்தியுள்ளார். ஆபிரகாம் அதற்கு மறுக்கவே அவர் மேல் பல்வேறு பொய்யான புகார்களைக் கிளப்பி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். ஆபிரகாம் தனது தொழிலாளர் வைப்பு நிதியில் இருந்து கடன் பெற்று வாங்கிய வீடு பற்றி குடைச்சல் கொடுத்துள்ளனர். பின்னர் தீவிர விசாரணைகளின் முடிவில் அவர் வீடு வாங்கியதில் முறைகேடுகள் ஏதும் இல்லை என்று தெளிவு படுத்தப்பட்டது.

அடுத்து, ஜூலை 20-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள ஆபிரகாமுக்கு மேலும் இரண்டாண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்ததை ரத்து செய்துள்ளனர். இப்படி பல்வேறு வகைகளில் அவர் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். இந்நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆபிரகாம், ஜூன் 1-ம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் நடந்த விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டு பிரதமர் அலுவலகத்திற்கும் மத்திய ஊழல் கண்காணிப்புப் பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளார். நல்லவரான பிரதமர், புகாரின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதைக் கிளப்பிய அதிகாரியின் பெயரோடு சேர்த்து அந்தக் கடிதத்தை அப்படியே நிதியமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார்.

பெரிய நிறுவனங்களின் ஊழல் முறைகேடுகள் பற்றிய புகாரில் தனது பெயர் வெளிப்படையாக்கப் பட்டதால் தனது உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று அச்சமடைந்துள்ள ஆபிரகாம், தற்போது விஷயத்தை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். பத்திரிகைகளில் விவகாரம் நாற்றமடிக்கத் தொடங்கியதும் இது தொடர்பாக பேட்டியளித்துள்ள யு.கே.சின்ஹா, ஆபிரகாமுக்கு சமீப காலமாக மனநிலை சரியில்லை என்று திமிர்த் தனமாக கருத்துத் தெரிவித்திருக்கிறார். பிரணாப் முகர்ஜி இன்னமும் வாயைத் திறக்கவில்லை.

ஆக, இங்கே ஊழல் என்பதன் பிறப்பிடம் என்பது கார்ப்பெரேட் தரகு முதலாளிகள் தான் என்பது இந்த விவகாரத்திலும், இதற்கு முன் வெளியான அநேகமான ஊழல்களிலும் வெளிப்படையாகவே தெரிகிறது. எதார்த்தம் இவ்வாறு இருக்க, அண்ணாவின் ஊழல் எதிர்ப்பு கோஷங்கள் அனைத்திலும் இந்த பகல் கொள்ளை கும்பலை மிகுந்த கவனத்துடன் தவிர்க்கிறார். இந்த நன்றிக் கடனுக்காகத் தான் அண்ணாவின் தம்பிகள் கண்டுபிடித்துள்ள மிஸ்டுகால் புரட்சிக்கும் எஸ்.எம்.எஸ் புரட்சிக்கும் ரிலையன்ஸ் தயங்காமல் ஸ்பான்சர் செய்கிறது.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் லிபிய மக்கள் போர் வெல்லட்டும்!

12
ஒபாமா-கடாஃபி

மெரிக்காவின் கட்டுக்கடங்காத மனிதாபிமானமும் அன்பும் கருணையும் சமீப மாதங்களாக லிபியாவின் மேல் திரும்பியிருக்கிறது. லிபியாவை 42 ஆண்டுகளாக ஆண்டு வந்த முவாம்மர் கடாஃபியின் ஆட்சியிலிருந்து விடுவித்து ‘ஜனநாயகத்தின்’ கையில் ஒப்படைப்பதற்காக நேட்டோ படைகளுக்குத் தலைமையேற்று அமெரிக்கா நடத்திய ‘மனிதாபிமான போர்’ அவர்கள் கணக்குப்படி ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

அரபு உலகத்திலும், வட ஆப்பிரிக்க நாடுகளான துனீசியா, எகிப்து ஆகிய நாடுகளிலும் நடந்த வண்ணப் புரட்சிகளைத் தொடர்ந்து லிபியாவில் கடாஃபியின் கொடுங்கோன்மைக்கு ஒரு முடிவு கட்டப் போகிறோம் என்று அறிவித்துக் கொண்ட ஒரு கிளர்ச்சிப் படை, கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் பெங்காஸி, அல் பாய்டா, தார்னா மற்றும் பானி வாலித் போன்ற கிழக்கு லிபிய நகரங்களில் சிறிய அளவில் கிளர்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள். பிப்ரவரி 15 வாக்கில் ஒரு முறைப்படுத்தப்பட்ட கொரில்லா குழுவாக தம்மை அமைத்துக் கொள்கிறார்கள். தங்களை ‘லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணி’ என்று அழைத்துக் கொண்ட கிளர்ச்சியாளர்களுக்கு எகிப்தின்  நவீன ஆயுதங்களும் போர்த் தளவாடங்களும் கிடைக்கிறது.

கிளர்ச்சியாளார்கள் கட்டுப்படுத்திய சிர்ட்டே வளைகுடா மற்றும் கிழக்குப் பகுதியை உடனடியாக அங்கீகரிக்கும் மேற்கு நாடுகள், உடனடியாக தமது இராணுவ ஆலோசகர்களையும், தூதரக அதிகாரிகளையும் இரகசியமாக அனுப்புகிறார்கள். லிபியாவின் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் – முவாம்மர் கடாஃபியை பதவி விலக்கம் செய்யவும், அமெரிக்கா எந்த விதமான உதவியையும் செய்யத் தயார் என்றும், லிபியப் புரட்சியாளர்களோடு அமெரிக்கா தொடர்பு கொண்டு வருகிறது என்று ஹிலாரி கிளிண்டன் பிப்ரவரி 27-ம் தேதி அறிவிக்கிறார். அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் லிபிய போரில் ஜனநாயகத்தைக் ‘காப்பதற்கும்’ ‘மனிதாபிமான அடிப்படையிலும்’  அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் பங்கேற்கின்றன.

சுமார் 8000 முறைகளுக்கு மேல் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான டன்கள் வெடி பொருட்களை லிபியர்கள் மேல் வீசியிருக்கிறார்கள். லிபியாவின் மேலான கூட்டுப்படைகளின் தாக்குதல்கள் பிப்ரவரி 17-ம் தேதி ஆரம்பித்தது. தாக்குதல் துவங்கிய இருபத்து நான்கு மணி நேரத்துக்குள்ளாக B-52 ரக போர் விமானம் மூலம் 45 டன் வெடி குண்டுகளை வீசியுள்ளனர். மத்தியத் தரைக்கடலில் மிதந்த நாசகாரிக் கப்பல்களில் இருந்து சிறியரக அணு ஏவுகணைகளை (Uranium Depleted missiles) வீசியுள்ளனர்.

இப்படி வான், கடல், நிலம் என்று திரும்பிய பக்கமெல்லாம் லட்சக்கணக்கான லிபியர்கள் செத்து விழுந்தார்கள். கடந்த 23-ம் தேதி தரை மார்க்கமாக லிபிய தலைநகரம் திரிபோலியை நோக்கிய முன்னேறிய கூலிப்பட்டாளத்திற்கு வான் மார்க்கமாக விமானத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா உதவி புரிந்துள்ளது. அதே நேரம், பெங்காஸியில் இருந்து கடல் மார்க்கமாகவும் அழைத்து வரப்பட்ட  கூலிப்படைகள் திரிபோலி நகரைச் சுற்றி வளைக்கின்றன.  இதில் கடந்த 23-ம் தேதி, லிபிய அதிபர் முவாம்மர் கடாஃபி தலைமறைவாகி விட்டதாகவும், தலைநகர் திரிபோலியின் கட்டுப்பாடு தம்மிடம் இருப்பதாகவும் கூலிப்படையினர் அறிவித்துக் கொண்டனர்.

ஈராக் மற்றும் ஆப்கானில் காலை விட்டு மாட்டிக் கொண்டதைப் போல் அல்லாமல் உள்நாட்டிலேயே கூலிப்படையினரை உருவாக்கி லிபியாவை மறைமுகமாக ஆக்கிரமித்துள்ளது அமெரிக்கா. மேலும், ஈராக் ஆப்கான் போல் அல்லாமல், பிறருடைய பங்கேற்புடனும் செலவிலும் தனது போரை நடத்தியுள்ளது.

அதிகாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையிலேயே, நேட்டோ நாடுகளின் படைகள், போர்த் தளாவாடங்கள் மற்றும் படைத் தளங்களைத் தவிர்த்து ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட், சுவீடன், சவூதி போன்ற நாடுகளின் படைகளும் இந்தப் போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் போரில் பிரிட்டன் மட்டுமே குறைந்தபட்சம் 4 பில்லியன் யூரோக்களை செலவிட நேரிடும் என்று மால்கம் சாமர்ஸ் என்கிற பாதுகாப்புத் துறை வல்லுனர் குறிப்பிட்டுள்ளார்.

லிபியாவின் ‘விடுதலை’ என்பது உலக அளவில் உள்ள எண்ணை ரிசர்வில் 60% அமெரிக்காவின் கையில் கொண்டு வந்து சேர்ப்பதாகும். அது மட்டுமல்லாமல், சர்வதேச நாணய நிதியம்,  உலக வங்கி போன்ற அமெரிக்கக் கைத்தடிகளுக்கு லிபியா போன்ற ஒரு சில நாடுகள் தான் இன்னமும் அடிபணியாமல் உள்ளன. இந்தப் போரின் துவக்கத்திலேயே ‘இடைக்கட்ட அரசு’  ஒன்றை அமைத்த கிளர்ச்சியாளர்கள், தமது வங்கிகளைத் திறந்து விடுவது குறித்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

கிளர்ச்சியாளர்கள் பெங்காஸி பிராந்தியத்தை மட்டுமே கட்டுப்படுத்திக் கொண்டிருந்த ஆரம்ப வாரங்களிலேயே(மார்ச் 19ல்), பெங்காஸி மத்திய வங்கியை லிபியாவின் இடைக்கால மத்திய வங்கியாக அறிவித்தனர். தேசத்தின் பணக் கொள்கைகளை இவ்வங்கியே தீர்மானிக்கும் என்றும் அறிவித்தனர். மேலும், லிபியாவின் எண்ணைக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் லிபிய ஆயில் நிறுவனத்தையும் மார்ச் 19-ம் தேதியே ஆரம்பித்து அறிவித்துக் கொண்டனர்.

லிபியாவின் எண்ணை வர்த்தகத்தில் மேற்கு நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுக் கம்பெனிகள் ஈடுபட்டிருந்தாலும் இதுவரையில் அது முழுமையாக தனியார்மயமாக்கப் படவில்லை. லிபிய நிறுவனங்களோடு கூட்டாக எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த மேற்குநாடுகள் அதன் லாபத்திலிருந்து 35 சதவீதத்தை லிபியாவிலேயே விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. மேலும், லிபியாவோடான எண்ணை வர்த்தகம் அமெரிக்க டாலரில் நடத்தப்படாமல் லிபிய தினாரிலேயே நடந்து வந்தது.

ஆக, ஏகாதிபத்தியத்தின் சர்வதேச நிதிமூலதன ஆதிக்கத்திற்கு ஆட்படாமல் அதற்கு வெளியே லிபியாவின் வங்கித்துறை தனித்துச் செயல்பட்டு வந்ததும், அதன் எண்ணை வளங்கள் முழுமையாகத் திறந்து விடப்படாததும் தான் இன்றைக்கு அமெரிக்கா லிபியாவில் மனிதாபிமான அடிப்படையில் தலையிடுவதற்கான அடிப்படையான முகாந்திரம்.

வங்கி மற்றும் எண்ணை வளம் மட்டுமல்லாமல், யுரேனியம், தங்கம் என்று அள்ள அள்ளக் குறையாத லிபியாவின் இயற்கை வளங்கள் ஏகாதிபத்தியங்களின் நாவில் எச்சிலூற வைத்துள்ளது. முவாம்மர் கடாபியின் லிபியா இன்று விழுந்து விட்டது. மேற்கத்திய ஊடகங்கள் மனிதாபிமானத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், லிபியர்களின் லிபியா இன்னமும் விழுந்து விடவில்லை.

தாலிபான்களுக்குப் பிந்தைய ஆப்கானையும், சதாமுக்குப் பிந்தைய ஈராக்கையும் கேட்பார் யாருமின்றி சுரண்டிக் கொழுக்கலாம் என்ற பேராசையில் அங்கே காலை விட்ட அமெரிக்காவிற்கு இன்று தான் கால் வைத்ததுள்ளது புதை குழி என்பதைக் ஆப்கானியர்களும் ஈராக்கியர்களும் உணர்த்தி வருகிறார்கள். இதோ இன்று லிபியர்களின் முன்னேயும் ஒரு பெரும் சவால் காத்துக் கிடக்கிறது. தமது இரத்தத்தில் இயல்பான அமெரிக்க எதிர்ப்பையும் அவ்வாறான ஒரு வரலாற்று மரபையும் கொண்டுள்ள அவர்கள் அமெரிக்காவுக்குக் கற்றுக் கொடுக்கப் போகும் பாடங்களை இனிமேல் தான் உலகம் காணப் போகிறது.

அடக்குமுறை என்றுமே வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அடக்கியாளும் மேலாதிக்க வெறி கொண்டவர்களெல்லாம் இன்று வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். அதே வரலாற்றின் குப்பைத் தொட்டி அமெரிக்காவின் வரவுக்காகக் காத்துக் கிடக்கிறது.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

50 எல் லஞ்சத்தின் பின்னே ஐ.ஏ.எஸ்-ஆடிட்டர்-முதலாளி-ஹவாலா..ஜெய்ஹிந்த்!

27

சென்னை பெருங்குடியில் “எவரான் எஜூகேஷனல் லிட்” என்ற ‘கல்வி’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவர்கள் கல்வி தொடர்பாக பல குறிப்பேடுகளை வெளியிட்டு வருவதோடு, இணையம் மூலமும் கல்விப் பயிற்சி அளித்து வருகிறார்கள். இவர்களது குறிப்பேடுகள் அதாவது கோனார் நோட்ஸ்கள் பல பள்ளி, கல்லூரிகளுக்கு விற்கப்படுகின்றது. மேலும் வெளிநாட்டில் இருந்து நிதியுதவி பெற்று பல்வேறு ‘நலத்திட்டங்களையும்’ செய்து வருகிறார்கள்.

இந்த கல்வி வள்ளல்களின் ஆண்டு வர்த்தகம் 500 கோடியாம். இவ்வளவு வர்த்தகம் இருந்தாலே அதுவும் கோனார் நோட்ஸ் போட்டே கொள்ளையடிக்க முடியும் என்றாலே வரி ஏய்ப்பும் இருக்கத்தானே செய்யும்? வருமான வரித்துறை அதிகாரிகள் இந்நிறுவனத்தை சோதனை செய்யும் போது சுமார் 116 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதை கண்டுபிடித்தார்கள். இதற்கு அபராதம் மட்டும் 40 கோடி ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசே முதலாளிகளுக்காக சில இலட்சம் கோடி வரிச் சலுகைகளை ஆண்டு தோறும் அளிக்கும் போது எந்த முதலாளி வரியோ இல்லை அபராதமோ கட்டுவான்? அந்தப்படிக்கு இந்நிறுவனத்தின் முதலாளி கிஷோர் என்பவர் வருமான வரித்துறையின் சிறப்பு கூடுதல் ஆணையர் அண்டாசு ரவீந்தர் என்பவரை அணுகி பேரம் பேசியுள்ளார். மேலும் கிஷோரின் எவரான் நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விவேக் ஹரி நாராயணன், விக்ரம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அரசு பணி ஓய்வு பெறுவதற்கு முன்னரே விருப்ப ஓய்வில் சென்றுள்ளனர். எவரான் நிறுவனத்தில் இவர்களது ஆண்டு சம்பளம் தலா ரூ. 50 இலட்சம் ஆகும். ஆக அதிகார வர்க்கத்தின் நட்பும் இந்த நிறுவனத்திற்கு இயல்பாக இருப்பதினால் பேரம் படிந்து லஞ்சத்தொகை முடிவானது.

மேலும் இந்த பேரத்தில் ஆடிட்டர் உத்தம்சந்த் போரா என்பவரும் கூட இருந்து புரோக்கர் வேலை பார்த்துள்ளார். சி.ஏ படித்து முடித்து பல்வேறு  கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் ஆடிட்டர்கள் பலரும் இத்தகைய வரி ஏய்ப்பு வேலைகளில் ஸ்பெஷலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்குத்தான் சந்தையில் பெரும் மரியாதை.மேலும் இந்த உத்தம்சந்த் போரா இது போன்ற லஞ்சப் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் ஹவாலா தரகராகவும் ‘சேவை’ புரிகிறார்.

அதன்படி எவரான் முதலாளி பணத்தை எடுத்துக் கொண்டு அதிகாரியின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவியிடம் பணத்தை தருகிறார். அங்கே அதிகாரியின் ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் ஹவாலா ஏஜெண்ட் கம் ஆடிட்டர் உத்தம்சந்த் சிங், அதிகாரியின் மனைவியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். இந்த விசயம் சி.பி.ஐக்கு எப்படியோ தெரிந்து அவர்கள் வெளியே காத்திருந்து மூவரையும் கைது செய்திருக்கிறார்கள்.

இந்த விசயம் சி.பி.ஐக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்? வழக்கமாக இத்தகைய லஞ்ச பேரங்களெல்லாம் குறிப்பிட்ட அதிகாரியின் நடவடிக்கைகளால் தமக்கு பங்கு வரவில்லை என்று குமுறும் போட்டி அதிகாரிகளின் மூலம்தான் புகாராக போகும். மற்றபடி வருமானவரித்துறை அலுவலமே லஞ்சத்தாயிற்கு கோவில் கட்டி கும்பிடக்கூடிய பக்தர்கள் நிரம்பியதுதான்.

இப்போது இந்த கதையில் வரும் ஹவாலா ஏஜெண்டை கொஞ்சம் பார்ப்போம். சென்னையின் சேரிகள் மற்றும் அடித்தட்டு மக்களிடம் துண்டு துக்காணி நகைகளை வைத்து அடகுத் தொழில் செய்யும் சேட்டுக்களை விட சவுகார் பேட்டை சேட்டுகள் வேறுபட்டவர்கள். சிறு அளவில் அடகுத்தொழில் செய்யும் மார்வாடி சேட்டுகள் தமது தொகைகளையும், நகைகளையும் சவுகார்பேட்டை பெரிய சேட்டுகளிடம்தான் முதலீடு செய்வார்கள். பெரிய சேட்டுகளின் வர்த்தகம் தினமும் பல கோடி ரூபாயில் இருக்கும். சினிமாத் துறையினருக்கு கடன் கொடுக்கும் பெரிய வங்கிகள் இவர்கள்தான். இது போக அதிகாரவர்க்கம், மற்றும் முதலாளிகளின் கருப்புப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி முதலீடாக்கும் வேலைகளையும் இவர்களே செய்கிறார்கள். சவுகார் பேட்டையில் கொண்டாடப்படும் ஹோலிப்பண்டிகையின் கலர் பொடிகளின் பின்னே இந்த கருப்புதான் தொழிலாதாரமான வண்ணம். சென்னையின் ஹவாலா மையமும் இந்த பேட்டைதான்.

சேட்டு உத்தம்சிங்கின் வீட்டில் நடத்திய சோதனையில் மட்டும் 48 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது. ‘ரன்னிங் கேப்பிட்டலே’ இந்த அளவு என்றால் ஒரிஜினல் கேப்பிட்டல் எவ்வளவு இருக்கும்? இதே மாதிரி சில நூறு சேட்டுகளின் கேப்பிட்டலை கூட்டினால் அது தமிழகத்தின் வரவு செலவு திட்டத்திற்கு போட்டியாக இருக்குமோ?

வழக்கமாக இந்த உத்தம்சிங் போன்ற ஹவாலா தரகர்கள் ஒரு அதிகாரி வீட்டில் இருந்து வெளியே வந்தால் அவர்கள் லஞ்சப் பணத்துடன் செல்வதாக பொருளாம். மேலும் இந்தத் தொகையை ஒரு மணிநேரத்தில் வெளிநாடுகளில் முதலீடு செய்து விடுவார்களாம். அதன்படி நமது சி.பி.ஐ ஒரு மணிநேரம் தாமதமாக போயிருந்தால் இந்தப் பணம் கிடைத்திருக்காது. மேலும் இந்த ஆடிட்டர் கம் ஹவாலா தரகர் பல்வேறு நிறுவனங்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் ஆடிட்டராக இருக்கிறார். இவரது கஸ்டமர்களாக இருக்கும் பல திரைப்புள்ளிகள் அண்ணா ஹசாரேவை ஆதரித்து நடந்த சினிமா ஸ்டார் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில பத்திரிகை செய்திகளின் படி இந்த ஆடிட்டரும், ஹவலா தரகரும் ஒன்று என்றும் வேறு வேறு நபர் என்றும் வந்துள்ளன. நம்மைப்பொறுத்த வரை இரண்டும் பிரிந்திருந்தால் என்ன சேர்ந்திருந்தால் என்ன இரண்டிற்க்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று எழுதுகிறோம்.

பிறகு அதிகாரி ரவீந்தரின் வீட்டில் சோதனை செய்த போது ஏராளமான பணம், நகைகள் கிடைத்தன. அவரது வங்கி லாக்கரில் மட்டும் ஒன்றே முக்கால் கிலோ தங்கம், வைர நகைகள் கிடைத்தன. ரவீந்தர் வீட்டில் 52 வெளிநாட்டு மது பாட்டில்களும் இருந்தன. இதில் 22 பாட்டில்கள் காலியாம். இதற்கு தனி வழக்காம். இது போக இந்த அதிகாரி சில நாட்களுக்கு முன்னர்தான் குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்று ஒரு மாதம் தங்கி வந்தாராம்.

___________________________________________________

நாளிதழ்களில் அன்றாடம் வந்து போகும் மற்றொமொரு ஊழல் செய்தி என்றாலும் அண்ணா ஹசாரே குழு மூலமாக ஊடகங்கள் பேசிவரும் ஊழல் எதிர்ப்பு மூடு காரணமாக நாம் இதில் பரிசீலிப்பதற்கு சில விசயங்கள் இருக்கின்றன. ஊழலின் ஊற்று மூலம் அரசும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்தான், அவர்களை இப்போதுள்ள சட்டப்படி தண்டிக்க முடியவில்லை, அதற்காகத்தான் வலுவான லோக்பால் வேண்டுமென்று அண்ணா ஹசாரே அபிமானிகள் கூறுகிறார்கள்.

குறிப்பிட்ட இந்த வழக்கில் கூட அதைத்தான் கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரியும், பதிவுலகின் இலக்கிய குருஜியும் கூறுகிறார்கள். குருஜியின் கருத்துப்படி இங்கே லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு துறை சார்ந்த விசாரணை, பாதி சம்பளத்துடன் கூடிய சஸ்பெண்ட், பிறகு இடமாற்றம் முதலியவைதான் இருக்கும். இது போதாது என்பதால்தான் லோக்பால் சட்டம் தேவை என்கிறார் அவர்.

பத்ரி இன்னும் கொஞ்சம் ‘ஆழமாக’ பரிசீலிக்கிறார், என்ன இருந்தாலும் ஒரு துடிப்பான முதலாளியல்லவா? அவரது கருத்துப்படி இப்போதுள்ள சட்டங்களின் படியே முதலாளிகளையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் தண்டிக்க முடியுமாம். ஆனால் இப்போதுள்ள சட்டங்களின்படி அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தண்டிக்க முடியாதாம். மேலும் ஊழலின் ஊற்று மூலம் அரசுதான் என்றும், அரசுடனான உறவில்தான் பலரும் லஞ்சம் கொடுக்க நேர்கிறது எனவும் கூறுகிறார்.

இந்த வழக்கில் கூட வருமானவரித்துறை அதிகாரியின் சொத்துக்களை பறிமுதல் செய்து கடுமையான தண்டனை கொடுப்பது நடப்பில் சாத்தியமில்லை என்றும், ஆனால் முதலாளி கிஷோர் இனி கட்டத்தவறிய வரியை கட்டுவதோடு, சிறைக்கும் செல்வார் என்று பத்ரி கூறுகிறார். ஹசாரே குழுவினரை எதிர்ப்பவர்கள் ஜன் லோக்பாலில் கார்ப்பரேட் நிறுவனங்களையும், என்.ஜி.ஓக்களையும், ஊடகங்களையும் ஏன் சேர்க்கவில்லை என்று பேசுவது அபத்தம் என்கிறார். அவர்களை இப்போதே தண்டிக்க முடியுமென்றும் கூறுகிறார்.

மேலும் நிறுவனங்கள் தமது நோக்கத்தை ஒட்டியே அரசிடம் லாபியிங் செய்கின்றன. இது வெளிப்படையாக இருந்தால் பிரச்சினை இல்லையாம். சிலருக்கு இலாபம், பலருக்கு நட்டம் என்று ஏற்றத்தாழ்வு இருந்தால் மட்டுமே இந்த லாபியிங்கில் ஊழல் புகுந்து விடுகிறது என்கிறார் அவர். அமெரிக்கா போல லாபியிங்கை வெளிப்படையாக சட்டப்பூர்வமாக அறிவித்துவிட்டால் என்ன பிரச்சினை என்பதும் அவரது கருத்தாக இருக்கும்.

குறிப்பிட்ட இந்த வழக்கில் பத்ரி முன்வைக்கும் கருத்துக்களிலேயே அவரது பக்கச்சார்பு தெளிவாக பல்லிளிக்கிறது. அதாவது லஞ்சம் வாங்கிய அதிகாரியின் சொத்துக்களை பறிமுதல் செய்வது, அவருக்கு கடுமையான தண்டனை தருவது இப்போது சாத்தியமில்லை என்று கூறும் பத்ரி, அந்த நீதியை முதலாளி கிஷோருக்கு மட்டும் அளிக்க முன்வரவில்லை. அதாவது 116 கோடி வருமானத்திற்கு வரி கட்டாமல் வெறும் அறுபது கோடிக்கு மட்டும் வரி கட்டுமாறு அவர் முனைந்ததும், அதற்கு அவர் அளித்த 50 இலட்ச ரூபாய் ஊழலுக்கு என்ன தண்டனை?

பத்ரியைப் பொறுத்த வரை முறையாக வரியை வாங்கிக் கொண்டு கிஷோர் சில நாட்கள் சிறையில் இருந்தால் மட்டுமே போதுமானது என்கிறார். இது தவறு என்கிறோம். ஏனெனில் தனது வருமானத்தை குறைத்து வரி கட்டவில்லை என்பதும், அதற்காக லஞ்சம் கொடுக்க முன்வந்தார் என்பதும் பாரிய குற்றங்கள். இது அரசுக்கு வரியாக வர வேண்டிய மக்கள்பணத்தை கொள்ளையடித்தோடு அரசு அதிகாரியை விலை பேசி அரசையே அதாவது அரசாட்சியையே கவிழ்க்க முயன்றிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். அந்த வகையில் இது அரசை தகர்க்க நினைக்கும் பயங்கரவாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன்படி கிஷோரின் நிறுவனம் இனி தடை செய்யப்பட்டு, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவருக்கு பத்தாண்டுகள் தண்டனை தருவதுதான் சரியான நீதியாக இருக்கும். அதே போல வருமானவரித்துறை அதிகாரியின் சொத்துக்களை அனைத்தும் பறிமுதல் செய்யப்ப்ட்டு, அவருக்கும் இதே காலம் தண்டனை அளிக்கப்படவேண்டும். இதை பத்ரி ஏற்றுக் கொள்வாரா?

வரி ஏய்ப்பு செய்தாலோ, இல்லை அதற்காக லஞ்சம் கொடுத்தாலோ இனி சம்பந்தப்பட்ட முதலாளிகள் தொழில் செய்ய முடியாது, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், ஆயுள் தண்டனை என்று சட்டம் கொண்டு வந்தால் எந்த முதலாளியும், எந்த நிறுவனமும் கனவில் கூட லஞ்சம் கொடுக்க முன்வரமாட்டார்களே? ரவீந்திரன் போன்ற ஊழல் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு தயாராக இருந்தாலும் எந்த முதலாளியும் லஞ்சம் கொடுக்க முன் வரமாட்டானே? அப்படியும் கூட ஊழலை ஒழிக்க முடியுமே?

முதலாளி கிஷோர் வரி கட்டாமல் லஞ்சம் கொடுக்க முன்வந்திருக்கிறார் என்றால் அவரை வரியையும் அபராதத்தையும் கட்ட வைத்து விட்டு சில நாட்கள் சிறையில் இருந்தால் மட்டும் போதுமானது என்பதை ஏற்கும் பத்ரி அதே போல லஞ்சம் வாங்கிய அதிகாரி ரவீந்திரா லஞ்சப்பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, துறை சார்ந்த நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்?

முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வரி ஏய்ப்பு என்பது வங்கிக் கொள்ளை, வழிப்பறி போன்ற ஒரு கொள்ளை நடவடிக்கை. அத்தகைய கொள்ளையர்களை சட்டப்படி காப்பாற்றுவதான் லஞ்சம் வாங்கும் வருமானவரித்துறை அதிகாரியின் நடவடிக்கை. ஆக முதன்மைக் குற்றம் கொள்ளையடிப்பதுதான். இதனால் அதிகாரிகளுக்கு நாம் வக்காலத்து வாங்கவில்லை. அவர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றுதான் சொல்கிறோம். ஆனால் அப்படி இரு தரப்பினரையம் இப்போது உள்ள சட்டப்படியும், ஊழல் எதிர்ப்பு ஆசான் அண்ணா ஹசாரே கொண்டு வரும் ஜன்லோக்பால் சட்டப்படியும் தண்டிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

அதிபர் பத்ரியைப் பொறுத்த வரை சில முதலாளிகளின் சட்டவிரோதமான லாபியிங் வேலைகளுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை மட்டும் தண்டித்துவிட்டால் போதுமானது என்று நினைக்கிறார். இது ஒரு அசட்டுத்தனமான ஆனால் காரியவாதமான லாஜிக். அதாவது முதலாளிகள் மோசடி செய்தவற்கு வாய்ப்புகள் இருப்பதினால்தானே ஊழல் வளர்வதற்கு இடமளிக்கிறது. அதை விடுத்துவிட்டு லஞ்சம் வாங்குபவனை மட்டும் தண்டிப்பதில் என்ன பயன்? மேலும் லஞ்சம், ஊழல் என்பதை வெறுமனே ஒரு பண ரீதியான ஆதாயம் என்று மட்டும் பார்ப்பது பிழை. அது இந்த அமைப்புமுறையை, சட்ட முறையை ஏற்றுக் கொள்ளாமல் தொழில் நடத்துவேன் என்று நடப்பதோடு சம்பந்தப்பட்டது.

அதனால்தான் லாபியிங் வேலைகளை வெளிப்படையாக செய்யலாம் என்பது பத்ரியின் கருத்து. அவர் வியந்தோதும் அமெரிக்காவிலேயே இப்படி சட்டப்பூர்வமான லாபியிங் செய்து  பல தொழிலாளி அமெரிக்கர்களை தெருவுக்கு அனுப்பிய நிர்வாக நடவடிக்கைகள் ஏராளம். இங்கே பதிப்பக தொழிலையை எடுத்துக் கொள்வோம். அ.தி.மு.க, தி.மு.கவிற்கு ஆதரவாக இருக்கும் பதிப்பக உரிமையாளர்கள் மட்டும் நன்கு சம்பாதிக்கிறார்கள். இனி லாபியிங் தொழிலை சட்டப்பூர்வமாக்கினால் என்ன நடக்கும்? மேற்கு பதிப்பகத்தின் உரிமையாளர் சட்டப்படி ஒரு லாபியிங் நிறுவனத்திற்கு பணம் கொடுக்கிறார். அந்த லாபியிங் நிறுவனம் சட்டப்படியே அ.தி.மு.கவின் விழுப்புரம் நகர அலுவலகத்தை அல்ட்ரா மாடர்னாக கட்டிக் கொடுக்கிறது. அதனால் சட்டப்படியே மேற்கு பதிப்பகத்தின் நூல்கள் அ.தி.மு.க ஆட்சியில் வாங்க்ப்படுகின்றன. அதன்படி மேற்குபதிப்பகம் சட்டப்படியே நன்கு தொழில் செய்து வளர்கிறது. இதில் எதுவும் சத்தியமாக ஊழல் இல்லை. நம்புங்கள்!

ஆனால் பத்ரி கவலைப்படும் அளவுக்கு இங்கே லாபியிங் வேலைகள் சட்டப்படியே நடப்பதற்குத் தேவையில்லாத நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. சான்றாக வரி கட்டவில்லையா,வரிச் சலுகை, கருப்புப்பணமா, அதற்கும் வரிச் சலுகை,  கருப்புப் பணம் வெளிநாடு போகிறதா, இனி வெளிநாடுகளிலிருந்து வரும் பணத்தின் ரிஷி மூலத்தை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்யாது…. இப்படி இருக்கும் போது பத்ரி ஏன் கவலைப்பட வேண்டும்?

அடுத்து இந்த வழக்கில் ஜ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற படித்த அதிகாரிகள்தான் மோசடி செய்திருக்கின்றனர். இவர்களில் பலர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் ‘மேல்’ சாதியினர் என்பது சொல்லாமலே விளங்கும். சமூகரீதியாகவும் சரி, அதிகாரிகள் என்ற வகையில் சட்டப்படியும் சரி இவர்களிடம்தான் எல்லா அதிகாரமும் நிலவுகிறது. இவர்கள் யாரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்லர். அதனாலேயே இவர்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்ற நிலைமை இருக்கிறது.

இந்தியாவில் அரசியல்வாதிகளின் ஊழலை விட இத்தகைய படித்த மேட்டுக்குடி அதிகாரிகள் செய்யும் ஊழலின் மடங்கு மிக மிக அதிகம். இத்தகைய அதிகார வர்க்கத்தின் பல்லை பிடுங்க வேண்டுமென்றால் முதலில் நியமன முறைகள் ஒழிக்க்கப் படவேண்டும். அனைத்து அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவும், திருப்பி அழைக்கப்படவும் உரிமை வேண்டும். மேலும் இன்று அரசில் இருக்கும் அதிகாரிகள் பலர் விருப்ப ஓய்வு பெற்று தனியார் நிறுவனங்களிடம் பல மடங்கு சம்பளத்தில் வேலை செய்கின்றனர். பொதுத்துறை சொத்தை நாசமாக்கும் பணி இவர்கள் மூலம்தான் நடக்கிறது.

ஊழலை ‘ஒழித்த’ கையோடு அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதோடு, திருப்பி அழைக்கவும் உரிமை வேண்டும் என்று அண்ணா குழு தற்போது பேச ஆரம்பித்திருக்கிறது. அதையே ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமல்படுத்துமாறு அண்ணா குழு ஏன் கேட்கவில்லை? அப்படிக் கேட்டால் ஒரு பயலும் மெழுகுவர்த்தி பிடிக்கக் கூட வரமாட்டான். அரசு அதிகாரிகள் எவரும் ஒய்வு பெறும்போது தனியார் நிறுவனங்களிடம் வேலைக்கு செல்லக்கூடாது, அரசு அதிகாரிகள் வாங்கும் தங்கம், பிற பொருட்கள், வீடு முதலான சொத்துக்கள் முதலானவை அனைத்தும் கண்காணிப்பிற்குள் கொண்டு வரவேண்டும். அதாவது அவர்களது மாத வருமானமும், செலவும் அரசிடம் காட்ட வேண்டும் என்ற நிலை வரவேண்டும்.

அரசு அதிகாரிகள் போதிய வருமான சான்றிதழ்களை அளித்தால்தான் அவர்களுக்கு சொத்துக்களையோ, தங்கத்தையோ வாங்க முடியும், அவர்கள் அமெரிக்க சுற்றுலா கூட இந்த விதிப்படிதான் நடக்க முடியும் என்ற நிலை வந்தால் இதை ரியல் எஸ்டேட், சுற்றுலா, தங்க முதலாளிகளே எதிர்ப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் அரசு அதிகார அமைப்பு மக்களின் பங்கேற்போடு மக்களுக்கு கட்டுப்பட்டதாக இருக்கும்போதுதான் இவையெல்லாம் நடக்கமுடியும். அதைத்தான் நாங்கள் புரட்சி என்கிறோம்.

அதுவரை முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊழல் கொள்ளை தொடரத்தான் செய்யும். அதில் முதலாளிகளின் பங்கை மறைப்பதற்கே அண்ணா ஹசாரேவின் அலட்டல்கள் பயன்படும். அந்த வகையில் பத்ரியும், குருஜியும் தங்களது ஊழலை ஒழிக்கும் உலக மகா கண்டுபிடிப்புகளை எடுத்து விடலாம். நாமும் வேறுவழியின்றி இந்த கண்டுபிடிப்புகளை படிக்க வேண்டிய துர்பாக்கியத்தில் இருக்கிறோம். வேறு வழி?

ஆனாலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த லஞ்ச வழக்கில் உள்ளது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த அதிகாரி, வட இந்தியாவைச் சேர்ந்த ஆடிட்டர், எவரானில் வேலை செய்யும் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று ஒரு விதமான இந்திய ஒற்றுமை இருப்பதைக் காணலாம். அந்த வகையில் இந்த தேசிய ஒற்றுமைக்கு ஒரு ராயல் சல்யூட்.

வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜெய், ஜெய் ஹிந்த்!

_________________________________________________

 வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

சோ, சு.சாமி, இராமகோபாலன், தினமலர்…பார்ப்பன பாசிஸ்டுகளை வேரறுப்போம்!

133

மூவர் தூக்கை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போர்க்குணமிக்க போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினரும் சாலை மறியல், ரயில் மறியல், மத்திய அரசு அலுவலக முற்றுகை என்று தங்கள் உணர்வுகளை வீரஞ்செறிந்த முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த போராட்டச் செய்திகள் ஆங்கில ஊடகங்கள் மற்றும் தமிழக பார்பன ஊடகங்களில் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.

இந்தப் போராட்டங்களெல்லாம் மக்களிடம் அரசியல் ஆதரவற்ற 2% பெயர்ப்பலகை அமைப்புகள் நடத்தி வருவதாக துக்ளக் சோ ஊளையிடுகிறார். மற்றபடி மூவர் தூக்கு பேஷாக நடைபெறும், முழு தமிழகமும் அமைதியாக அதை ஆதரிக்கின்றது என்பது போல அவர் பேசுகிறார். இந்து முன்னணி இராம கோபாலன் மூவர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கூடாது என்று பகிரங்கமாக பேசி வருகிறார்.

சுப்ரமணிய சாமியோ இத்தனை ஆண்டுகளாக கருணை மனு மீதான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்காக ஆகஸ்டு 15-ஆம் தேதி நீதிமன்றம் செல்ல இருந்ததாகவும், அதைக் கண்டு பயந்து மத்திய அரசு கருணை மனுவை நிராகரித்திருப்பதாக திமிரோடு பேசுகிறார். மேலும் இவாள்களின் முதல்வரான பாசிச ஜெயலலிதா தூக்குத் தண்டனையை ரத்து செய்ய தனக்கு அதிகாரமில்லை என்று கூறியிருப்பது சரிதான் என்று மெச்சுகிறார் இந்த மாமா சாமி. எனவே இனி யாரும் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய முடியாது, செப்டம்பர் 9 அன்று தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் என்றும் யாரெல்லாம் இதை எதிர்க்கிறார்களோ அவர்களெல்லாம் தேசத்துரோகிகள் என்று நரித்தனமாக, பார்ப்பன வெறியுடன் ஊளையிடுகிறார்.

மூவர் தூக்கை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் எங்கும் நடக்கும் போராட்டங்கள் குறித்து தினத்தந்தி, தினகரன் முதலான நாளேடுகள் விரிவாக செய்திகள் வெளியிடும் போது பார்ப்பன தினமலரோ அப்படி ஒரு செய்தியைக்கூட வெளியிடவில்லை. மாறாக வேலூரில் எப்படி தூக்கு போடுவார்கள், தூக்கு போடுபவர்கள் யார், அவர்கள் ஆந்திராவிலிருந்து வருகிறார்கள், அவர்களுக்கு ஒரு தூக்கிற்கு நூறு ரூபாய் சம்பளம், வேலூர் சிறையைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு, தமிகத்தில் உள்ள அகதி முகாம்களை உளவுத் துறையினர் கண்காணிக்கிறார்கள் என்று நீரோ மன்னனை போல பார்ப்பன பிடில் வாசித்து மகிழ்கிறது இந்த பார்ப்பன நரி.

காஞ்சிபுரத்தில் தீக்குளித்த செங்கொடியின் தியாகத்தை கொச்சைப்படுத்தியும் செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர். அவர் தீக்குளித்த போது யாருமே அங்கில்லையாம், ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் செங்கொடிக்கு எழுதப் படிக்கத் தெரியாதாம், அதனால் அவர் எழுதிய அந்தக் கடிதம் போலியானது என்றும் இதை போலீசாரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் விசத்தை கொண்டாட்டத்துடன் கக்குகிறது பார்ப்பன தினமலர்.

போராட்டச் செய்திகளை அதிகம் வெளியிட்டால் பத்திரிகை அதிகம் விற்கும் என்ற சந்தை இலாபத்தை விட பார்ப்பன மேலாதிக்கத்தை முன்வைத்தே தினமலர் எழுதுகிறது. காலணாவுக்கு தேறாத அண்ணா ஹசாரே போங்காட்டங்களை பக்கத்திற்கு பக்கம் பீத்தும் இந்த் தினமலர் செங்கொடியின் தியாகத்தை எள்ளி நகையாட வேண்டுமென்றால் எத்தனை வன்மம் வேண்டும்?

இதற்கு மேல் தங்கபாலு, இளங்கோவன் போன்ற பீஸ் போன பல்புகளும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்று அவ்வப்போது கத்தி வருகின்றன. அண்ணா ஹசாரேவின் இத்துப் போன் போராட்டங்களையே மாபெரும் சுதந்திரப் போராட்டமாக சித்தரித்து உருவாக்கிய ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் தமிழக மக்களின் போராட்டங்களை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கின்றன. இது குறித்து இவர்கள் எப்போதாவது செய்தி ஒளிபரப்பினால் அதற்கு தமிழகம் சார்பில் பேசுபவர்களாக சு.சாமியும், சோவுமே விகாரமாகத் தோன்றுகிறார்கள்.

பா.ஜ.க கும்பலும் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்றுதான் எப்போதும் வலியுறுத்தி வருகிறார்கள். அதில் மூவர் தூக்கை விட அப்சல் குரு என்ற காஷ்மீரத்து அப்பாவியை தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்பது இந்தக் கூட்டத்தின் நோக்கம்.

ஆக ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் பார்ப்பனக் கூட்டம் தனது முகத்தை ஒளித்து வைக்காமல் பச்சையாகவே இந்தப் பிரச்சினையில் காட்டிக் கொள்கிறது. தனக்கு அதிகாரமில்லை என்று ஜெயா கூறிவிட, அதற்குப் பின்பாட்டு பாடும் இந்தப் பார்ப்பனக் கூட்டம் கூடவே இனி யாரும் மரண தண்டனையை தடுத்து நிறுத்த முடியாது என்று கொக்கரிக்கிறது.

தற்போது மூவர் தூக்கு உயர்நீதிமன்றத்தால் எட்டு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கூட இந்தக்கூட்டத்திற்கு தாங்க முடியாததாக இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் இப்படி ஒரு இடைக்காலத்தடை கொடுத்திருப்பது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று சோ கூறுகிறார். கூடவே ஜெயா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் கூட தீர்ப்பை மாற்றும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என்று மகிழ்கிறார். எப்படியும் தூக்கு நிறைவேற்றப்படும் என்பதுதான் இவர் மட்டுமல்ல, காங்கிரசு, பா.ஜ.க, சு.சாமி, தினமலர் கூட்டத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகார, அரசு, ஊடக, முதலாளிகளது பலத்தில் காலத்தை ஓட்டும் இந்த பார்ப்பன பாசிஸ்டுக் கூட்டம் அந்த தைரியத்தில்தான் இப்படி பேச முடிகிறது. ஆனாலும் போராடும் தமிழக மக்கள் இந்தக் கூட்டத்தின் எண்ணத்திற்குக்கு வேட்டு வைக்கும் வண்ணம் தமது கோரிக்கையில் வெற்றி பெறுவார்கள். கூடவே இந்த பார்ப்பன பாசிஸ்டுகளுக்கும் ஆப்பு வைப்பார்கள்.

மூவர் தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டம் வென்றது!

28

மூவர் தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டம் வென்றது! -

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அநீதியாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

டெல்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோஹித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் வழக்கில் ஆஜராக வந்திருந்தனர். மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் வந்திருந்தனர். மற்றும் வைகோ, பேரறிவாளன் பெற்றோர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அரசியல் ஆர்வலர்களும், தோழர்களும் உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இடைக்காலத் தடை உத்திரவு வந்ததும் நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் உற்சாகத்தை முழக்கங்களால் வெளிப்படுத்தினர்.

இதுவே இறுதி வெற்றியல்ல என்றாலும் முக்கியமான வெற்றிதான். ஏனெனில் நீதிமன்றங்களும், நீதிபதிகளும் எப்போதும் சட்டப்படி மட்டும் தீர்ப்புகள் வழங்குவதில்லை. சட்டங்களுக்கான விளக்கங்களே ஆளும் வர்க்கங்களுக்கேற்ப மாற்றி மாற்றி அளிக்கப்படும். இந்த வழக்கில் கூட இது ஒரு முக்கியமான அரசியல் ரீதியான வழக்கு, இந்திய இறையாண்மைக்கு சவால் விட்டிருக்கும் வழக்கு என்று கூட சொல்லி இந்த விசாரணை மனுக்களை நிராகரித்திருக்கலம். அப்படி செய்திருந்தால் அதுவும் சட்டப்படி சரிதான் என்று நீதிபதிகள் பொழிப்புரை அளித்து நியாயப்படுத்தலாம்.

எனில் இப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏன் இத்தகைய தீர்ப்பை வழங்க வேண்டும்? இதற்கு ஒரே நியாயமான பதில் தமிழக மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்கள்தான். அந்தப் போராட்டங்கள் உருவாக்கிய அரசியல் மேலாண்மைதான் இத்தகைய இடைக்கால உத்திரவு வந்ததற்கு காரணம் என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ளலாம். ஆகவே இறுதி வெற்றி நமக்கு கிடைக்க வேண்டுமென்றாலும் நாம் இந்த போராட்டங்களை தொடர்வது அவசியம். பெரிய அரசியல் கட்சிகளெல்லாம் கை விரித்து விட்ட நிலையில் மாணவர்கள், இளைஞர்கள், வழக்குறைஞர்கள், பெண்கள் என தமிழக மக்கள் அனைவரும் அவர்களில் கட்சி சார்பு உள்ளவர், இல்லாதவர் அனைவரும் போராடியிருக்கின்றனர்.

ஆயினும் இந்த அரசியல் ரீதியாக திரட்டப்படாத தன்னெழுச்சியான போராட்டங்கள் திசை திரும்புவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த வகையில் சிலர் அரசியலே வேண்டாம் என்று இந்தப் போராட்டங்களை பார்க்கிறார்கள். அநேகமான தமிழின ஆர்வலர்கள் கூட இந்தப் போராட்டங்கள் எதுவும் தீவிரமாக நடக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்தனர். ஆனால் அந்த சமரசத்தை அவர்களது அணிகளே ஏற்கவில்லை. கோவையில் நடந்த ரயில் மறியல், மத்திய அரசு அலுவலங்கள் முற்றுகை என்று போர்க்குணமிக்க முறையில் நடந்த போராட்டத்தை அதற்கு சான்றாக கூறலாம்.

இந்தப் போராட்டத்தின் வீச்சால்தான் இன்று சட்டசபையில் ஜெயலலிதா சிறப்புத் தீர்மானம் ஒன்றை ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறார். நேற்று வரை எனக்கு அதிகாரமில்லை என்று துண்டித்துக் கொண்டு பட்டும்படாமலும் பேசியவர் இன்று மாற்றி பேசுவது ஏன்? அதிலும் கூட ஜெயலலிதா உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதன்படி தமிழக மக்களின் உணர்வை கருத்தில் கொண்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைப்பதாக கூறியிருக்கிறார். இதன்படி இந்த முடிவு அவரது விருப்பத்தின்பாற்பட்டதல்ல. தமிழக மக்கள் ஏற்படுத்தியிருக்கும் நிர்ப்பந்தம். அதுவும் மக்கள் போராட்டங்களை தடுத்து நிறுத்த முடியாத போலீசு அதிகாரிகளின் கருத்தாகக் கூட இருக்கலாம். பாசிச ஜெயாவின் ஆட்சி என்பது அதிகார வர்க்கம், போலீசின் ஆட்சிதானே?

ஏற்கனவே ஈழத்தாய், கருணைத் தாய், சமூக நீதிகாத்த வீராங்கனை என்ற பட்டங்களோடு இனி மூவரைக் காத்த தாய் என்ற அருவருப்பான பட்டமும் கூட கிடைக்கலாம். ஆனால் ஜெயலிலிதா அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதால் எந்தப் பலனும் இல்லை என்று சோ, சு.சுவாமி, பா.ஜ.க , காங்கிரசு கும்பல்கள் கூறியிருக்கின்றது. அதாவது குடியரசுத் தலைவரின் முடிவை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள். தற்போது உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இடைக்காலத் தடையைக் கூட இவர்கள் கசப்பாக விழுங்க முடியாமல் திணறுகிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்றம் இப்படி ஒரு தடை கொடுக்கும் என்பதை நான் நம்பவில்லை, ஆச்சிரியமாக இருக்கிறது என்கிறார் சோ. அவரும் கூட சட்டங்களை கரைத்துக் குடித்தவர்தானே. அவருக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றால் அது சட்டம், வழக்கறிஞர்களின் திறமை மட்டுமல்ல. ஏற்கனவே கூறியது போல இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. நீதிமன்றத்திற்கே கூட ஒரு அரசியல் அழுத்தத்தை கொடுத்ததற்காக கிடைத்த வெற்றி.

எனினும் பார்ப்பனக் கும்பல், காங்கிரசு கும்பல், பா.ஜ.க கும்பல் மூன்றுமே இத்தீர்ப்பை ஏற்கவில்லை என்பதோடு இறுதியில் மூவரும் தூக்கில்போடப்படுவார்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள். இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு கொண்ட இரு கட்சி தலைவர்களும் இப்படித்தான் கூறியிருக்கிறார்கள்.

மறுபுறம் பாசிச ஜெயாவின் மீதான பிரமைகளை வளர்த்துக் கொண்டு தமிழினி ஆர்வலர்கள் சட்ட வாதத்தையும், சமரசத்தையுமே முன்வைத்து பேசுவார்கள். ஆனால் இவை நமது இறுதி வெற்றிக்கு பயன்தராது.

ஆகவே இறுதி வெற்றி பெறவேண்டுமானால் மக்கள் அரங்கிலும், அரசியல் அரங்கிலும் போராட்டங்கள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற வேண்டும். அதை எள்ளி நகையாடும் அரசியல் அற்ற கோமான்களின் கையில் இந்தப் போராட்டம் சிக்கிவிடக்கூடாது. தற்போதைய நிலைமை அத்தகைய அபாயத்தைக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம். தற்போது தமிழக அளவில் நிர்ப்பந்தம் ஏற்படுத்தியிருக்கும் இந்தப் போராட்டங்கள் இனி மத்திய அரசை நிர்ப்ந்திக்கும் வண்ணம் வளர வேண்டும்.

எனவே இந்த இடைக்கால வெற்றிகளின்பால் நாம் அதிகம் மகிழாமல் இறுதி வெற்றி கிடைக்கும் வரை போர்க்குணமிக்க போராட்டங்களை தொடருவோம். மூவர் மீதான தூக்கை ரத்து செய்வோம்.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: